search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt school teachers"

    • பள்ளி குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு திறன் வளர்க்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
    • தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 6-ந்தேதி தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

    பல்லடம்,

    பல்லடத்தில், வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு திறன் வளர்க்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படித்த 8 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினார்கள். இதையடுத்து வரும் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் முழுமையாக எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெற்றிடும் வகையில் தமிழக அரசு 6 முதல் 8 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 100 அரசு,மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 6-ந்தேதி தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

    கோடை விடுமுறையில் அளிக்கப்படும் பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2021-22-ம் கல்வி ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 1.6.2022 மற்றும் 2.6.2022 ஆகிய இரு நாட்கள் “எண்ணும் எழுத்தும்” பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 6.6.2022 முதல் 10.6.2022 முடிய “எண்ணும் எழுத்தும்” பயிற்சியும் தமிழ்நாடு முழுவதும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு கோடை விடுமுறையில் அளிக்கப்படும் பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    கோடை விடுமுறையில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையைத் துய்க்கும் பிரிவினராவர். இதனாலேயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    எனவே, இக்கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையாக “எண்ணும் எழுத்தும்” பயிற்சி அமைந்துள்ளது. கோடை விடுமுறையில் இப்பயிற்சி நடத்துவதை எதிர்த்து 28.5.2022 அன்று திருச்சியில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    எனவே, பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையில் நடத்தும் “எண்ணும் எழுத்தும்” பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5-ந் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் 13-ந் தேதி முடிந்தன.

    இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் மாணவ- மாணவிகளுக்கும் ஜூன் மாதம் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5-ந் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.

    கோடை விடுமுறை குறைக்கப்பட்டதால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #SchoolEducation #TeachersLeave
    சென்னை:

    முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


    இந்த சுற்றறிக்கையில், “முன் அனுமதியின்றியும் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. #SchoolEducation #TeachersLeave
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் இன்று 3-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த காவனூர் ஊராட்சியில் உளுந்தாம்பட்டில் ஊராட்சி ஒன்றி தொடக்க பள்ளி ஒன்று உள்ளது.

    இந்த பள்ளியில் உளுந்தாம்பட்டு, கீழ்காவனூர், மேல் காவனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதற்கிடையில் மேல்காவனூரில் இருந்து உளுந்தாம்பட்டு கிராமத்திற்கு பள்ளி செல்லும் குழந்தைகள் நடந்தே செல்ல வேண்டி இருப்பதால் மேல்காவனூரில் புதியதாக பள்ளி தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்தனர். பொது பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று புதிதாக மேல் காவனூரில் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் இந்த கல்வி ஆண்டு முதல் மேல் காவனூரில் பள்ளிக்கூடம் திறக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி மேல் காவனூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து மேல் காவனூரில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் மேல் காவனூரில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் தங்க வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம் மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அந்தோணி ராஜ் ஆகியோர் இந்த கிராமத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட பெற்றோர்களை அழைத்து பேசி விரைவில் உரிய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவனூரில் இணைப்பு பள்ளி கடந்த 4-ந் தேதி திறக்கப்பட்டது.காவனூரில் உள்ள இந்த இணைப்பு பள்ளிக்கு மாணவ-மாணவிகள் அனுப்பப்பட்டனர்.

    ஆனால் உளுந்தாம்பட்டு பள்ளியிலிருந்து ஆசிரியர்களை இந்த இணைப்பு பள்ளிக்கு ஆசிரியர்களை அனுப்ப மறுத்து உளுந்தாம்பட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தஇரு கிராம மக்களின் போராட்டம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. காவனூர் இணைப்பு பள்ளியில் காவனூர் மாணவர்களுக்கு காவனூர்கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் முன்னால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடம் நடத்துகின்றனர். மதிய உணவு கிராம மக்களே தயார் செய்து பிள்ளைகளுக்கு வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் போராட்டம் 3-வது நாளாக இன்று தொடர்வதால் இங்கே திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ×