search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village people protest"

    • முன்விரோதம் காரணமாக விவசாயியை மர்மகும்பல் தாக்கியது.
    • கும்பலை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் ஊராட்சி மல்லியம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் நிலப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டதாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் சிவக்குமார் அணைப்பட்டி யில் உள்ள உறவினர் தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய கும்பலை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறந்தவர் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் தனியார் தோட்டம் வழியாக மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
    • எதிர்ப்பு தெரிவித்ததால் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செந்துறை:

    நத்தம் அருகே சிரங்காட்டுபட்டி ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டிபுதூரை சேர்ந்தவர் பெரியசாமி (70). இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் புதூர் மயானத்திற்கு கொண்டு சென்றனர். போகும்வழியில் ஆற்றில் தண்ணீர் போனதால் செல்லமுடியவில்லை.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது தோட்டத்து வழியாக சென்றனர். ஆனால் இதற்கு தர்மலிங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் உடலை கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பெரியசாமியின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் தர்மலிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பெரியசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    மங்களப்பட்டி புதூர் மயானத்திற்கு நிரந்தரமாக சாலை அமைத்து தர கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
    • கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது.

    சேத்தியாத்தோப்பு;

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை கிராமங்களுக்குள் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து என்.எல்.சி. நிர்வாகம், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் குடும்பத்திற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்கிராமங்களில் நடைபயணம் மேற்கொண்டார். என்.எல்.சி. நிர்வாகம் தனியாரிடம் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, இந்த நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் நடைபயணத்தை நடத்தி சென்றார்.

    இந்நிலையில் புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று நள்ளிரவு கிராமங்களின் பொது இடங்களிலும், 300-க்கும் மேற்பட்டோர் வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

    தகவலறிந்து இன்று விடியற்காலையில் புவனகிரி டி.எஸ்.பி தீபன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இன்று நாடு முழுவதும் குடியரசு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே, பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது என்று கிராம மக்களிடம் அறிவுறுத்தினார். இதையேற்ற கிராம மக்கள் பொது இடங்களில் இருந்து கருப்பு கொடியை அப்புறப்படுத்தினர். அதே வேளையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி பறந்து வருகிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • கம்பிளியம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் பேனல் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய பணிகள் நடந்து வருகிறது.
    • சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இன்று திடீரென ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே கம்பிளியம்பட்டி ஆண்டிப்பட்டி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் பேனல் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக கிராமத்தில் மின்கம்பங்கள் ஊன்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்படும்.

    எனவே மாற்றுவழியில் மின்கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என கிராமமக்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திடீரென ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சித்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கப்பட விலலை.
    • இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் எரியோடு நெடுஞ்சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள இ.சித்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கப்பட விலலை.

    இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் எரியோடு நெடுஞ்சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காலிக்குடங்களுடன் அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தற்காலி கமாக டிராக்டர் மூலம் தண்ணீர் தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்ப ட்டது.

    இதனால் அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    குமராட்சி அருகே காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காட்டுமன்னார்கோவில்:

    குமராட்சி அருகே உள்ள ஆட்கொண்டநத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஊர் ராதாநல்லூர். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 5 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    மேலும் கடந்த சில நாட்களாக குடிநீரில் உவர் தன்மை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இருப்பினும், குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8 மணிக்கு ராதாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என கூறினர்.

    பின்னர் இது பற்றி போலீசார் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது விரைவில் குடிநீர் வழங்கவும், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இதை ஏற்ற கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மீஞ்சூர் அருகே 400 அடி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. எந்திரங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் நிறுவனமும், துறைமுகமும் உள்ளன.

    இங்கு இருந்து சரக்குகளை வெளியே கொண்டு செல்லவும், துறைமுகத்துக்கு வரும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் 400 அடி சாலை, புதிய ரெயில் பாதை ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காட்டுப்பள்ளி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    கிராமத்தின் ஒருபுறம் 400 அடி சாலையும், மற்றொரு புறம் ரெயில் பாதையும் அமைத்தால் இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். மரங்களை வெட்டி வனத்தை அளித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கும் புகார் மனு அனுப்பி இருந்தனர்.

    இந்த நிலையில் சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்குவதற்கு 10-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. எந்திரங்கள் வந்தன. இவற்றை கிராம மக்கள் சிறைப்பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதற்காக அங்கு வந்திருந்த அதிகாரிகளும் திரும்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் போலீசாருடன் அதிகாரிகள் வந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆவேசமாக கூறினார்கள். மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே சாலை அமைக்கும் பணியை நிறுத்தி விட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சம்பத் ஆகியோர் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வருகிற 27-ந்தேதி வரை சாலை பணிகள் நடைபெறாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
    அய்யலூர் அருகே குடிநீருக்காக போராட்டத்தில் குதித்த கிராம மக்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே மோர்பட்டி, கோப்பம்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும், ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல் நிலை தொட்டியில் தேக்கியும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குடிநீர் சீராக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தொடர்ந்து குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்தனர்.

    தற்போது மோர்பட்டி - சித்துவார்பட்டி சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. பணியின் போது குடிநீர் குழாயை உடைத்ததால் கோப்பம்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட தயாரானார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி குடிநீர் குழாயை விரைவில் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் வெளியில் சென்ற போது 2 வாலிபர்களிடம் சிக்கிய மாணவி அது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested
    தர்மபுரி:

    மாணவி சவுமியா கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், புகாருக்குள்ளான 2 வாலிபர்களும் அவரை கடுமையாக ‘செக்ஸ்’ சித்ரவதை செய்துள்ளனர்.

    மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள ஓடைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் வாலிபர்கள் ரமேஷ், சதீஷ் இருவரும் நைசாக பின் தொடர்ந்து சென்றனர்.

    சவுமியா இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்த போது சதீஷ் பின்னால் சென்று கை குட்டையால் வாயை பொத்தி கீழே தள்ளிவிட்டார். பின்னர் சவுமியாவிடம் தவறாக நடந்துள்ளார்.

    இந்த நேரத்தில் ரமேஷ், சவுமியாவை திமீறி எழ முடியாத அளவுக்கு கெட்டியாக பிடித்துக் கொண்டார். 2 பேரும் சேர்ந்து மாணவியை செக்ஸ் சித்ரவதை செய்துள்ளனர். 2 பேரின் பிடியில் இருந்தும் சவுமியாவால் உடனடியாக மீண்டு வரமுடியவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகே, அவர்களின் கோர செக்ஸ் பிடியில் இருந்து அவரால் மீள முடிந்தது.

    பின்னர் உயிரை கையில் பிடித்தபடி அங்கிருந்து சவுமியா வீட்டுக்கு ஓடி வந்தார். இந்த நேரத்தில் அவரது தாய் - தந்தை இருவருமே வீட்டில் இல்லை. மாலையில் அவர்கள் வந்தவுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி சவுமியா கதறி அழுதபடியே கூறியுள்ளார்.

    கடந்த 5-ந்தேதி அன்று கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. சவுமியாவின் வீட்டில் வாகன வசதி எதுவும் இல்லாததாலும் இரவு 7 மணி அளவிலேயே தாய்-தந்தை வந்ததாலும் உடனடியாக அவர்களால் புகார் அளிக்க முடியவில்லை. இதனால் மறுநாள் காலையில் சென்றே புகார் அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாணவி சவுமியா அளித்துள்ள புகாரில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    மாணவி அளித்த புகார் விவரம் வருமாறு:-

    நான் 10-ம் வகுப்பு வரை சிட்லிங் கிராமத்தில் படித்து விட்டு பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளயில் படித்தேன். இந்தாண்டு அதே பள்ளியில் பிளஸ்-2 அறிவியல் பிரிவில் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தேன். 3-ந் தேதியன்று தீபாவளி விடுமுறைக்காக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்தேன்.

    5-ந்தேதி பகல் 2 மணியளவில் என் தாய், தந்தையர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் நான் மட்டும் அங்குள்ள காட்டுக்கு மலம் கழிக்க சென்றேன்.

    அப்போது எங்கள் ஊரை சேர்ந்த சாமிகண்ணுவின் மகன் சதீஷ், மற்றும் அவருடைய நண்பர் பெருமாள் மகன் ரமேஷ் என்பவரும் பின் தொடர்ந்தனர். நான் காட்டுப்பகுதியில் செடி மறைவில் மலம் கழிக்க முற்பட்ட போது சதீஷ் என் பின்னால் வந்து அவன் கையை வைத்து என் வாயை பொத்தி அவன் ஆடையை அவிழ்த்து என்னை தள்ளி கெடுக்க முயன்றான்.

    அப்போது ரமேஷ் என்னை பிடித்துக் கொண்டு நான் திமிராத படி சதீசுக்கு உதவி செய்தான். நான் சுதாரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். விடுடா, விடுடா என சொல்லி அவனிடமிருந்து திமிறி வீட்டு பக்கம் ஓடி வந்து விட்டேன். வந்த களைப்பால் படுத்து மயங்கி விட்டேன்.

    2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாணவியின் தந்தை அண்ணாமலை போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    ஆளில்லாத நேரத்தில் என் மகள் கழிவறை சென்ற போது என் மகளை வழி மறித்து வாயில் துணியை வைத்து தூக்கி சென்றுள்ளனர்.

    இந்த வேலை செய்தவர்கள் சிட்லிங் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிகண்ணுவின் மகன் சதீஷ், பெருமாளின் மகன் ரமேஷ் என்பவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு, கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சிட்லிங் மலை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசிப்பவர்களில் 30 சதவீதம் பேரின் வீடுகளில் மட்டுமே கழிவறை வசதி உள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் திறந்த வெளியிலேயே மலம் கழிக்கின்றனர். அந்த கிராமத்தை சுற்றியுள்ள ஓடை பகுதியையே அவர்கள் அதற்கு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற சம்பவங்களை தடுக்க சிட்லிங் கிராமத்தில் கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #DharmapuriGirlStudent #GirlMolested
    அரூர் அருகே பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #DharmapuriGirlStudent #GirlMolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - மலர் ஆகியோரின் மகள் சவுமியா (வயது17). பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த சவுமியா கடந்த 5-ந்தேதி இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகே உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்கு சென்றார்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த ரமேஷ், சதீஸ் ஆகிய 2 வாலிபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கற்பழித்து விட்டனர். அப்போது மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் துணியை வைத்து அழுத்தினார்கள். பின்னர் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

    இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் போலீசார் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசுக்கு எதிராக 2-வது நாளாக போராட்டம் நடத்து வருகிறது.

    கடந்த 5-ந்தேதி கற்பழிப்பு சம்பவம் நடந்தபோது மாணவியின் தந்தை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை வாங்க போலீசார் மறுத்து விட்டனர்.

    இதனால் அண்ணாமலை மற்றும் உறவினர்கள் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணான 1077க்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு போனில் பேசி மாணவியிடமும், அவரது பெற்றோரிடமும் புகார் வாங்குமாறு கூறி உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து 6-ந்தேதி அன்று தான் மாணவியை நேரில் வரவழைத்து அவரிடம் புகார் பெற்றுள்ளனர். ஆனால் மாணவியை கற்பழித்ததாக புகார் வாங்காமல் கற்பழிக்க முயற்சி செய்ததாக புகார் வாங்கி உள்ளனர். மாணவியும், பெற்றோர்களும் தாமதமாக வந்து புகார் கொடுத்ததாகவும் எழுதி வாங்கி உள்ளனர்.

    கற்பழிப்பு புகார் கூறப்பட்ட 2 வாலிபர்களையும் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்தையே மறைத்து விட்டனர் என்று போலீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மாணவியையும், அவரது பெற்றோரையும் மிரட்டி, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும், கற்பழிப்பு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உங்களுக்குத்தான் அவமானம் என்றும் கூறி மாணவியை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உள்ளனர்.

    அங்கு மாணவிக்கு காது வலி இருக்கிறது என்றும், மூச்சு திணறலால் அவதிப்படுகிறார் என்றும் கூறி விட்டு கற்பழிப்பு குறித்து டாக்டரிடம் போலீசார் எதுவும் கூறவில்லை.

    சிகிச்சை அளித்த பிறகு அந்த மாணவி சவுமியாவை தொப்பூர் அருகே உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். அங்கு வைத்து தான் மாணவியின் உடல்நிலை மோசமாகி இருக்கிறது.

    போலீசாரால் தேடப்படும் கற்பழிப்பு குற்றவாளிகள் சதீஷ், ரமேஷ் ஆகியோரை படத்தில் காணலாம்.

    மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டும் அவரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

    மாணவி இறந்த பிறகு தான் அவர் கற்பழிக்கப்பட்ட சம்பவமே வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். மாணவியின் உடலையும் வாங்க மறுத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    மாணவி மற்றும் அவரது தந்தை கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். மாணவியை இழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவியின் உடலையும் வாங்க மறுத்து விட்டனர். இதனால் நேற்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.

    மாணவியின் சொந்த ஊரான சிட்லிங் கிராமத்திலும் நேற்று கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடக்கிறது. மலைவாழ் மக்களின் ஒரு பிரிவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

    சிட்லிங் கிராமத்திற்கு மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் நேரில் வர வேண்டும். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது. வருவாய்த்துறை அல்லது நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை தப்ப விட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    இதனால் சிட்லிங் கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது. எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவியின் உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்துள்ளனர்.

    உதவி கலெக்டர் சிவன் அருள், தருமபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் மாணவியின் உறவினர்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

    மாணவியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய தாவது:-

    மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் சிட்லிங் கிராமத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றன. அந்த சம்பவங்களை போலீசார் மறைத்து விடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களையே போலீசார் மிரட்டுகிறார்கள்.

    மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வி‌ஷயத்தில் போலீசார் குற்றவாளிகளை தப்ப விட்டு மாணவியின் குடும்பத்தினரை மிரட்டி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது. எனவே ஆர்.டி.ஓ. அல்லது டி.ஆர்.ஓ. விசாரணை நடத்த வேண்டும் . நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள ரமேஷ், சதீஸ் ஆகிய 2 வாலிபர்களும் தப்பிஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்திருக்கும் சம்பவம் தொடர்பாக போலீசார் 5 நாட்களுக்கு பிறகு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது 2 வாலிபர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக கொலை வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #DharmapuriGirlStudent #GirlMolested
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் இன்று 3-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த காவனூர் ஊராட்சியில் உளுந்தாம்பட்டில் ஊராட்சி ஒன்றி தொடக்க பள்ளி ஒன்று உள்ளது.

    இந்த பள்ளியில் உளுந்தாம்பட்டு, கீழ்காவனூர், மேல் காவனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதற்கிடையில் மேல்காவனூரில் இருந்து உளுந்தாம்பட்டு கிராமத்திற்கு பள்ளி செல்லும் குழந்தைகள் நடந்தே செல்ல வேண்டி இருப்பதால் மேல்காவனூரில் புதியதாக பள்ளி தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்தனர். பொது பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று புதிதாக மேல் காவனூரில் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் இந்த கல்வி ஆண்டு முதல் மேல் காவனூரில் பள்ளிக்கூடம் திறக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி மேல் காவனூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து மேல் காவனூரில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் மேல் காவனூரில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் தங்க வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம் மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அந்தோணி ராஜ் ஆகியோர் இந்த கிராமத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட பெற்றோர்களை அழைத்து பேசி விரைவில் உரிய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவனூரில் இணைப்பு பள்ளி கடந்த 4-ந் தேதி திறக்கப்பட்டது.காவனூரில் உள்ள இந்த இணைப்பு பள்ளிக்கு மாணவ-மாணவிகள் அனுப்பப்பட்டனர்.

    ஆனால் உளுந்தாம்பட்டு பள்ளியிலிருந்து ஆசிரியர்களை இந்த இணைப்பு பள்ளிக்கு ஆசிரியர்களை அனுப்ப மறுத்து உளுந்தாம்பட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தஇரு கிராம மக்களின் போராட்டம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. காவனூர் இணைப்பு பள்ளியில் காவனூர் மாணவர்களுக்கு காவனூர்கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் முன்னால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடம் நடத்துகின்றனர். மதிய உணவு கிராம மக்களே தயார் செய்து பிள்ளைகளுக்கு வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் போராட்டம் 3-வது நாளாக இன்று தொடர்வதால் இங்கே திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ×