search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.எல்.சி. நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு- வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
    X

    வீடுகளிலும், வீதிகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    என்.எல்.சி. நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு- வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

    • புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
    • கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது.

    சேத்தியாத்தோப்பு;

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை கிராமங்களுக்குள் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து என்.எல்.சி. நிர்வாகம், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் குடும்பத்திற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்கிராமங்களில் நடைபயணம் மேற்கொண்டார். என்.எல்.சி. நிர்வாகம் தனியாரிடம் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, இந்த நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் நடைபயணத்தை நடத்தி சென்றார்.

    இந்நிலையில் புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று நள்ளிரவு கிராமங்களின் பொது இடங்களிலும், 300-க்கும் மேற்பட்டோர் வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

    தகவலறிந்து இன்று விடியற்காலையில் புவனகிரி டி.எஸ்.பி தீபன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இன்று நாடு முழுவதும் குடியரசு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே, பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது என்று கிராம மக்களிடம் அறிவுறுத்தினார். இதையேற்ற கிராம மக்கள் பொது இடங்களில் இருந்து கருப்பு கொடியை அப்புறப்படுத்தினர். அதே வேளையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி பறந்து வருகிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    Next Story
    ×