search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri student died"

    அரூர் அருகே பிளஸ்-2 மாணவியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்தது உண்மைதான் என கைதான வாலிபர் சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். #dharmapurigirlstudent #girlmolested
    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சதீஷ் (வயது 22) நேற்று முன்தினம் ஏற்காட்டில் கைது செய்யப்பட்டார். அரூர் கொண்டுவரப்பட்ட அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை தருமபுரி மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கைதான வாலிபர் சதீஷ் மாணவியை கற்பழித்தது உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் அவர் கூறிய தகவல்கள் வருமாறு:-

    எனக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி அவரை சந்தித்து பேசுவேன். தீபாவளி சமயத்தில் ஊருக்கு வந்தபோது அவரை சந்தித்து தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டேன். அந்த சமயத்தில் அங்கு வந்த ரமேசும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ரமேஷ் (22) என்ற வாலிபர் சேலம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். 19-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். அவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சதீசையும் காவலில் எடுத்து விசாரிக்கலாமா? என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் உடல் நேற்று மாலை 5 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வேலூர் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் தண்டர்சீப், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் மதன்ராஜ், அமீர்தாசுல்தான் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். 3 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அரசு ஆம்புலன்ஸ் மூலம் சிட்லிங் மலை கிராமத்திற்கு மாணவி உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு இரவு 11.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் லட்சுமி.

    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் முதலில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தற்போது போக்சோ சட்டப்பிரிவோடு, பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. வழக்கு மாற்றம் குறித்த சட்ட மாறுதல் அறிக்கையும் இந்த வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தாக்கல் செய்து உள்ளார். குற்ற பத்திரிகையில் வழக்கு மாற்றம் தொடர்பான விவரங்கள் இடம்பெறும். இந்த வழக்கில் விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை ஏற்கனவே மாணவி இறப்பதற்கு முன்பு 6-ந் தேதி ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில் மீண்டும் இந்த வழக்கில் புகார் மனு கொடுத்து உள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எனது மகள் மலம் கழிக்க சென்றபோது சதீஷ், ரமேஷ் ஆகியோர் தன்னை கெடுத்ததாக கூறினார். இந்த விவரங்களை கடந்த 6-ந் தேதி பெண் உதவி ஆய்வாளர் விசாரித்தபோது பெண்ணின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு இதை சொல்லவில்லை என்றும் அவர் என்னிடம் கூறினார். இன்று எனது மகள் இறந்துவிட்ட நிலையில் என் மகளின் சாவுக்கு சதீஷ் மற்றும் ரமேஷ் இருவரும் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மாணவியின் தந்தை அண்ணாமலை புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி சட்ட மாறுதல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார்.

    தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விரைவில் சிட்லிங் கிராமத்திற்கு வர உள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் மாணவியின் குடும்பத்துக்கு விரைவில் நிதி உதவியும் வழங்கப்பட உள்ளது.

    ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன்

    மாணவியின் புகாரை பதிவு செய்யாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக் கிருஷ்ணன் மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா? என்பது குறித்து அரூர் ஆர்.டி.ஓ. புண்ணியக்கோடி விசாரணை நடத்தி வருகிறார். நேற்று அவர் மலை கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். விரைவில் அவர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் கோட்டப்பட்டி போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளார். விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகு போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் முடிவு செய்வார்கள்.  #dharmapurigirlstudent #girlmolested
    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமான கயவர்களை கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தருமபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை!


    இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #DMK #MKStalin
    வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் வெளியில் சென்ற போது 2 வாலிபர்களிடம் சிக்கிய மாணவி அது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested
    தர்மபுரி:

    மாணவி சவுமியா கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், புகாருக்குள்ளான 2 வாலிபர்களும் அவரை கடுமையாக ‘செக்ஸ்’ சித்ரவதை செய்துள்ளனர்.

    மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள ஓடைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் வாலிபர்கள் ரமேஷ், சதீஷ் இருவரும் நைசாக பின் தொடர்ந்து சென்றனர்.

    சவுமியா இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்த போது சதீஷ் பின்னால் சென்று கை குட்டையால் வாயை பொத்தி கீழே தள்ளிவிட்டார். பின்னர் சவுமியாவிடம் தவறாக நடந்துள்ளார்.

    இந்த நேரத்தில் ரமேஷ், சவுமியாவை திமீறி எழ முடியாத அளவுக்கு கெட்டியாக பிடித்துக் கொண்டார். 2 பேரும் சேர்ந்து மாணவியை செக்ஸ் சித்ரவதை செய்துள்ளனர். 2 பேரின் பிடியில் இருந்தும் சவுமியாவால் உடனடியாக மீண்டு வரமுடியவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகே, அவர்களின் கோர செக்ஸ் பிடியில் இருந்து அவரால் மீள முடிந்தது.

    பின்னர் உயிரை கையில் பிடித்தபடி அங்கிருந்து சவுமியா வீட்டுக்கு ஓடி வந்தார். இந்த நேரத்தில் அவரது தாய் - தந்தை இருவருமே வீட்டில் இல்லை. மாலையில் அவர்கள் வந்தவுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி சவுமியா கதறி அழுதபடியே கூறியுள்ளார்.

    கடந்த 5-ந்தேதி அன்று கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. சவுமியாவின் வீட்டில் வாகன வசதி எதுவும் இல்லாததாலும் இரவு 7 மணி அளவிலேயே தாய்-தந்தை வந்ததாலும் உடனடியாக அவர்களால் புகார் அளிக்க முடியவில்லை. இதனால் மறுநாள் காலையில் சென்றே புகார் அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாணவி சவுமியா அளித்துள்ள புகாரில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    மாணவி அளித்த புகார் விவரம் வருமாறு:-

    நான் 10-ம் வகுப்பு வரை சிட்லிங் கிராமத்தில் படித்து விட்டு பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளயில் படித்தேன். இந்தாண்டு அதே பள்ளியில் பிளஸ்-2 அறிவியல் பிரிவில் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தேன். 3-ந் தேதியன்று தீபாவளி விடுமுறைக்காக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்தேன்.

    5-ந்தேதி பகல் 2 மணியளவில் என் தாய், தந்தையர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் நான் மட்டும் அங்குள்ள காட்டுக்கு மலம் கழிக்க சென்றேன்.

    அப்போது எங்கள் ஊரை சேர்ந்த சாமிகண்ணுவின் மகன் சதீஷ், மற்றும் அவருடைய நண்பர் பெருமாள் மகன் ரமேஷ் என்பவரும் பின் தொடர்ந்தனர். நான் காட்டுப்பகுதியில் செடி மறைவில் மலம் கழிக்க முற்பட்ட போது சதீஷ் என் பின்னால் வந்து அவன் கையை வைத்து என் வாயை பொத்தி அவன் ஆடையை அவிழ்த்து என்னை தள்ளி கெடுக்க முயன்றான்.

    அப்போது ரமேஷ் என்னை பிடித்துக் கொண்டு நான் திமிராத படி சதீசுக்கு உதவி செய்தான். நான் சுதாரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். விடுடா, விடுடா என சொல்லி அவனிடமிருந்து திமிறி வீட்டு பக்கம் ஓடி வந்து விட்டேன். வந்த களைப்பால் படுத்து மயங்கி விட்டேன்.

    2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாணவியின் தந்தை அண்ணாமலை போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    ஆளில்லாத நேரத்தில் என் மகள் கழிவறை சென்ற போது என் மகளை வழி மறித்து வாயில் துணியை வைத்து தூக்கி சென்றுள்ளனர்.

    இந்த வேலை செய்தவர்கள் சிட்லிங் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிகண்ணுவின் மகன் சதீஷ், பெருமாளின் மகன் ரமேஷ் என்பவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு, கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சிட்லிங் மலை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசிப்பவர்களில் 30 சதவீதம் பேரின் வீடுகளில் மட்டுமே கழிவறை வசதி உள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் திறந்த வெளியிலேயே மலம் கழிக்கின்றனர். அந்த கிராமத்தை சுற்றியுள்ள ஓடை பகுதியையே அவர்கள் அதற்கு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற சம்பவங்களை தடுக்க சிட்லிங் கிராமத்தில் கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #DharmapuriGirlStudent #GirlMolested
    அரூர் அருகே பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #DharmapuriGirlStudent #GirlMolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - மலர் ஆகியோரின் மகள் சவுமியா (வயது17). பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த சவுமியா கடந்த 5-ந்தேதி இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகே உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்கு சென்றார்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த ரமேஷ், சதீஸ் ஆகிய 2 வாலிபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கற்பழித்து விட்டனர். அப்போது மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் துணியை வைத்து அழுத்தினார்கள். பின்னர் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

    இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் போலீசார் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசுக்கு எதிராக 2-வது நாளாக போராட்டம் நடத்து வருகிறது.

    கடந்த 5-ந்தேதி கற்பழிப்பு சம்பவம் நடந்தபோது மாணவியின் தந்தை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை வாங்க போலீசார் மறுத்து விட்டனர்.

    இதனால் அண்ணாமலை மற்றும் உறவினர்கள் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணான 1077க்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு போனில் பேசி மாணவியிடமும், அவரது பெற்றோரிடமும் புகார் வாங்குமாறு கூறி உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து 6-ந்தேதி அன்று தான் மாணவியை நேரில் வரவழைத்து அவரிடம் புகார் பெற்றுள்ளனர். ஆனால் மாணவியை கற்பழித்ததாக புகார் வாங்காமல் கற்பழிக்க முயற்சி செய்ததாக புகார் வாங்கி உள்ளனர். மாணவியும், பெற்றோர்களும் தாமதமாக வந்து புகார் கொடுத்ததாகவும் எழுதி வாங்கி உள்ளனர்.

    கற்பழிப்பு புகார் கூறப்பட்ட 2 வாலிபர்களையும் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்தையே மறைத்து விட்டனர் என்று போலீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மாணவியையும், அவரது பெற்றோரையும் மிரட்டி, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும், கற்பழிப்பு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உங்களுக்குத்தான் அவமானம் என்றும் கூறி மாணவியை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உள்ளனர்.

    அங்கு மாணவிக்கு காது வலி இருக்கிறது என்றும், மூச்சு திணறலால் அவதிப்படுகிறார் என்றும் கூறி விட்டு கற்பழிப்பு குறித்து டாக்டரிடம் போலீசார் எதுவும் கூறவில்லை.

    சிகிச்சை அளித்த பிறகு அந்த மாணவி சவுமியாவை தொப்பூர் அருகே உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். அங்கு வைத்து தான் மாணவியின் உடல்நிலை மோசமாகி இருக்கிறது.

    போலீசாரால் தேடப்படும் கற்பழிப்பு குற்றவாளிகள் சதீஷ், ரமேஷ் ஆகியோரை படத்தில் காணலாம்.

    மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டும் அவரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

    மாணவி இறந்த பிறகு தான் அவர் கற்பழிக்கப்பட்ட சம்பவமே வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். மாணவியின் உடலையும் வாங்க மறுத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    மாணவி மற்றும் அவரது தந்தை கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். மாணவியை இழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவியின் உடலையும் வாங்க மறுத்து விட்டனர். இதனால் நேற்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.

    மாணவியின் சொந்த ஊரான சிட்லிங் கிராமத்திலும் நேற்று கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடக்கிறது. மலைவாழ் மக்களின் ஒரு பிரிவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

    சிட்லிங் கிராமத்திற்கு மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் நேரில் வர வேண்டும். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது. வருவாய்த்துறை அல்லது நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை தப்ப விட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    இதனால் சிட்லிங் கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது. எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவியின் உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்துள்ளனர்.

    உதவி கலெக்டர் சிவன் அருள், தருமபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் மாணவியின் உறவினர்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

    மாணவியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய தாவது:-

    மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் சிட்லிங் கிராமத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றன. அந்த சம்பவங்களை போலீசார் மறைத்து விடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களையே போலீசார் மிரட்டுகிறார்கள்.

    மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வி‌ஷயத்தில் போலீசார் குற்றவாளிகளை தப்ப விட்டு மாணவியின் குடும்பத்தினரை மிரட்டி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது. எனவே ஆர்.டி.ஓ. அல்லது டி.ஆர்.ஓ. விசாரணை நடத்த வேண்டும் . நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள ரமேஷ், சதீஸ் ஆகிய 2 வாலிபர்களும் தப்பிஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்திருக்கும் சம்பவம் தொடர்பாக போலீசார் 5 நாட்களுக்கு பிறகு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது 2 வாலிபர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக கொலை வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #DharmapuriGirlStudent #GirlMolested
    ×