search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panruti protest"

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் இன்று 3-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த காவனூர் ஊராட்சியில் உளுந்தாம்பட்டில் ஊராட்சி ஒன்றி தொடக்க பள்ளி ஒன்று உள்ளது.

    இந்த பள்ளியில் உளுந்தாம்பட்டு, கீழ்காவனூர், மேல் காவனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதற்கிடையில் மேல்காவனூரில் இருந்து உளுந்தாம்பட்டு கிராமத்திற்கு பள்ளி செல்லும் குழந்தைகள் நடந்தே செல்ல வேண்டி இருப்பதால் மேல்காவனூரில் புதியதாக பள்ளி தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்தனர். பொது பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று புதிதாக மேல் காவனூரில் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் இந்த கல்வி ஆண்டு முதல் மேல் காவனூரில் பள்ளிக்கூடம் திறக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி மேல் காவனூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து மேல் காவனூரில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் மேல் காவனூரில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் தங்க வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம் மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அந்தோணி ராஜ் ஆகியோர் இந்த கிராமத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட பெற்றோர்களை அழைத்து பேசி விரைவில் உரிய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவனூரில் இணைப்பு பள்ளி கடந்த 4-ந் தேதி திறக்கப்பட்டது.காவனூரில் உள்ள இந்த இணைப்பு பள்ளிக்கு மாணவ-மாணவிகள் அனுப்பப்பட்டனர்.

    ஆனால் உளுந்தாம்பட்டு பள்ளியிலிருந்து ஆசிரியர்களை இந்த இணைப்பு பள்ளிக்கு ஆசிரியர்களை அனுப்ப மறுத்து உளுந்தாம்பட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தஇரு கிராம மக்களின் போராட்டம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. காவனூர் இணைப்பு பள்ளியில் காவனூர் மாணவர்களுக்கு காவனூர்கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் முன்னால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடம் நடத்துகின்றனர். மதிய உணவு கிராம மக்களே தயார் செய்து பிள்ளைகளுக்கு வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் போராட்டம் 3-வது நாளாக இன்று தொடர்வதால் இங்கே திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பண்ருட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் நிலஅளவீடு செய்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் செட்டி பட்டறை என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தன. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.

    இதன்பேரில் கடந்த சில நாட்களாக ஏரியை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகளையும் அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வந்தனர்.

    எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் சமத்துவபுரம் பகுதியில் மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இன்று காலை தாசில்தார் ஆறுமுகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சமத்துவபுரம் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள நிலத்தை அளக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் இந்த நிலத்தை சமத்துவபுரம் பகுதி மக்களுக்கே வழங்க வேண்டும் எனக்கூறி நில அளவீடு செய்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் ஆறுமுகம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர்கள் காடாம்புலியூர் மற்றும் சமத்துவபுரம் பகுதியிலேயே ஏராளமான பொதுமக்கள் சொந்த வீடு மற்றும் இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த பகுதி பொதுமக்களுக்கு இடம் வழங்குங்கள் அதன் பிறகு மீதமுள்ள இடங்களை செட்டிப்பட்டறை ஏரிக்கரை பகுதியில் வீடுகளை இழந்த மக்களுக்கு இடம் வழங்குங்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தாசில்தார் ஆறுமுகம் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். அதிகாரிகளை முற்றுகையிட்டு பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×