search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியை
    X
    மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியை

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு

    1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5-ந் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் 13-ந் தேதி முடிந்தன.

    இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் மாணவ- மாணவிகளுக்கும் ஜூன் மாதம் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5-ந் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.

    கோடை விடுமுறை குறைக்கப்பட்டதால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×