search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporary teachers"

    • 14 ஆயிரத்து 19 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.
    • ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.109 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரம் நிதிக்கு ஒப்பளிப்பு செய்தும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை பிறப்பித்து இருக்கிறார்.

    சென்னை:

    பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 19 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.

    இந்த பணியிடங்கள் நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை மாணவ-மாணவிகளின் கல்வி நலன் கருதி, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன்படி தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அந்த வகையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் காலியாக உள்ள 14 ஆயிரத்து 19 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்தும், ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.109 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரம் நிதிக்கு ஒப்பளிப்பு செய்தும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை பிறப்பித்து இருக்கிறார்.

    • தலைமையாசிரியர்கள் வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது.
    • மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு பேணப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன.இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டன. அவ்வகையில் 2 ஆயிரத்து 213 பேர் இப்பணிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    இப்பணிக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு காலிப்பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவும் உள்ளது.

    அதன்படி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 86 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும் 54 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிடங்களும் காலியாக உள்ளன. இப்பணியிடத்திற்கு டி.டி.எட்., பி.எட்., மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் அல்லது மூத்த ஆசிரியரைக்கொண்ட குழு சரிபார்த்து, தகுதியானவர்களை வகுப்பறையில் டெமோ பாடம் நடத்த அறிவுறுத்தப்படும்.அதன் வாயிலாக அவர்களின் தனித்திறன் கண்டறியப்படுகிறது.

    தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, தனியாக வருகைப்பதிவேடு மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு பேணப்படும்.குறிப்பாகதேர்வுக்குழுவால், தேர்வு செய்யப்பட்ட பட்டியல் விபரம் வருகிற 18ந்தேதி முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.பின் 19-ந்தேதி ஏற்கப்பட்ட தற்காலிக நியமனத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெறப்படும். 20-ந்தேதி தற்காலிக நியமனம் பெற்றவர் பள்ளியில் சேர்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம்.
    • ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும்.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். ஆனால், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்துள்ளது. பட்டதாரிகள், வீடு தேடி வரும் கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்களை எல்லாம் தற்காலிகமாக நியமிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்ட தகுதிகளை கொண்டவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

    ஆனால், பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பம் செய்தால், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்கக்கூடாது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

    அதில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்வு நடைமுறைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: கலெக்டர் ஸ்ரீதர் தகவல் வெளியிட்டார்.
    • விண்ணப்பிப்பதற்கான கடைசி வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி. குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசுபள்ளி களில் 2022-23-ம் கல்வி யாண்டில் 1.6.2022 நில வரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முது கலை ஆசிரியர் பணியி டங் களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்–கொள்ளப்பட உள்ளது. தகுதியான விண்ணப்ப தாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்று களுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரி டம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இது தொடர்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப்பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி. குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப் பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகவல் பலகையில் வெளி யிடப்படும் காலிப் பணியிட விவரங்கள் மாறு தலுக்குட்பட்டது. மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிப்பவர்கள் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்கு deokki2018@gmail.com, திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்திற்கு deotkr2018@gmail.com, உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்திற்கு deoupt65@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப் பங்கள் வந்துசேர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஜூலை 1 முதல் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • 1,750 மாணவர்களுக்கு, 28 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக நியமிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஊரடங்குக்கு பிறகு முழுமையான கல்வியாண்டு துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை அதிகரித்தபோதும், போதிய ஆசிரியர்கள் இல்லாதது குறையாகவே உள்ளது.

    சமீபத்திய பொதுத்தேர்வு முடிவுகள் தேர்ச்சி விகிதம் குறைய இதுவும் முக்கிய காரணம்.இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நிரப்ப, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களைக் கொண்டு, வரும் ஜூலை 1 முதல் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர்களுக்கு, 7 ஆயிரத்து500 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரமும் தொகுப்பூதியம் வழங்கப்படும்.திருப்பூர் மாவட்டத்தில் 203 இடைநிலை ஆசிரியர், 54 பட்டதாரி ஆசிரியர், 89 முதுகலை ஆசிரியர் என 343 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,காலியிடங்கள் சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்றவரை கொண்டே நிரப்பப்படும். முதுகலை ஆசிரியர் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலமாகவோ, நேரடி நியமனம் அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படும்போது, பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் ஆன ஆசிரியர் உடனே பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் என்றனர்.

    15 வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாமணி கூறியதாவது:-

    பணி மாறுதல், பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள ஆசிரியர் பணியிடங்களே காலிப்பணியிடங்களாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதை நிரப்பவே சமீபத்தில் அரசாணையில் சொல்கிறது. இவற்றை தற்காலிகமாக நிரப்பினால் மட்டும் போதாது.மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. அவை புதிதாக உருவாக்கப்பட வேண்டும். எங்கள் பள்ளியில் 1-ம் வகுப்பு வரை, 1,750 மாணவர்களுக்கு, 28 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளன.காலிப்பணியிடங்கள் போக மாணவர்களுக்கு கற்பிக்க 7 இடைநிலை, 8 பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. இதை நிரப்பவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிறைவேற்றியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்பவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #EdappadiPalanisamy #JactoGeo
    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதையடுத்து, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு அதிகமான ஊதியமும், சலுகையும் வழங்கப்படுகிறது. அதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.



    இளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் நிதி இருந்தால் தான் அதிக ஊதியமும், சலுகையும் வழங்க முடியும்.

    எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். ஆசிரியர்களை குறை சொல்வதாக நினைக்கக் கூடாது. நிலைமையை எண்ணிப்பார்த்து ஒத்துழைப்பு தரவேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ற இரு சக்கரமும் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும்.

    சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மேசையின் மீது ஏறி தி.மு.க.வினர் நாட்டியம் ஆடுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டப்பேரவையில் திமுகவினரை சபாநாயகர் மன்னித்தது தான் அதிமுகவின் பெருந்தன்மை என தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy #JactoGeo
    தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.7,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #JactoGeo
    சென்னை:
     
    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் குறிப்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    வேலை நிறுத்தத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 2 ஆசிரியர்களே உள்ளனர். அவர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 



    இதையடுத்து, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அளிக்க முடிவானது. 

    இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. #JactoGeo
    ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 4வது நாளாக ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 8 லட்சம் பேருக்கு ‘நோட்டீசு’ அனுப்பப்பட்டுள்ளது. #JactoGeo #GovtStaff
    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.

    கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக நீடித்தது.

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.

    தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. நேற்றும், நேற்று முன்தினமும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    போராட்டத்தை கைவிடுமாறு ஜாக்டோ-ஜியோவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பல தடவை கோரிக்கை விடுத்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

    இதுபற்றி முடிவு எடுக்க ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. கோர்ட்டு உத்தரவை ஏற்று வேலைக்கு திரும்புவதா? வேண்டாமா? என்று கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

    முடிவில் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ள 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்றும் 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடங்கிய 22-ந்தேதி முதலே பணிக்கு வராதவர்கள் யார்-யார்? என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சட்டப்பிரிவு 17-பி-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளிகள் வாரியாக நோட்டீஸ் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய விளக்கம் அளிக்குமாறு அனுப்பப்படும் நோட்டீசுகளை சில இடங்களில் ஆசிரியர்கள் வாங்க மறுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து பணிக்கு வராத ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்டும் பணி நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய நடந்தது. இன்றும் நோட்டீசு ஒட்டப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அதிகாரிகள் துணையுடன் இந்த பணி நடந்து வருகிறது.

    இதன் அடிப்படையில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பற்றிய முழு விபரமும் இன்று மாலைக்குள் தொகுக்கப்பட உள்ளது. அந்த பட்டியலை கொண்டு நாளை (சனிக்கிழமை) முதல் அதிரடி நடவடிக்கைகள் பாய உள்ளது. சட்ட பிரிவுகளின் துணைகொண்டு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

    குறிப்பாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “நோ ஒர்க், நோபே” என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு வேலைக்கு வரவில்லையோ, அத்தனை நாட்களுக்கு சம்பளத்தை வழங்கக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.

    இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

    அதில் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலமாக பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்து பள்ளிக்கூடங்களை தங்கு தடையின்றி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் அங்கேரிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் தற்காலிக ஆசிரியை மூலம் பாடம் நடத்தப்பட்டது

    அப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அரசாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. 3 நாட்களுக்குள் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு பணியை முடிக்கும்படி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களிடம் கூறப்பட்டுள்ளது.

    பெற்றோர், ஆசிரியர் சங்கம் இல்லாத பள்ளிகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இயங்கும் சங்கங்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்கள் 28-ந்தேதி முதல் பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தற்காலிக ஆசிரியர்கள் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளைத் திறந்து பாடம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo #GovtStaff
    ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் திருப்பூர் பள்ளியில் 2 தற்காலிக ஆசிரியர்களை பெற்றோரே நியமித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சின்னிய கவுண்டன் புதூரில் மாநகராட்சி தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

    முதல் நாளன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆசிரியர் பயிற்சி முடித்த 2 ஆசிரியர்களை மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க நியமனம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தனர். இதனையடுத்து தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.
    ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு ரூ.7,500 சம்பளம் பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #Sengottaiyan
    கோபி:

    கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கும் வகையில் உள்ளது. மாணவர்கள் ஒழுக்கமுடையவர்களாக சிறந்து விளங்குகிறார்கள். மாணவர்கள் பொது மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்க வேண்டும்.

    கோப்புப்படம்

    தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு மாணவ-மாணவிகளை பெற்றோரே விரும்பித்தான் அனுப்புகிறார்கள். இதுபற்றி பள்ளிகளுக்கு அறிவுரை எடுத்து கூறப்படும்.

    தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர்கள் ரூ.7500 சம்பளம் பெற்று பணிபுரிகிறார்கள். ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு இவர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும்.

    அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாணவ- மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    கொடைக்கானல் பர்கூர் மலைப்பகுதியில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒரு வாரத்துக்கு பிறகு வராவிட்டால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது.

    அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையை தலைமை இடமாக கொண்டு 7 மண்டலங்களில் செயல்பட்டு வந்த அரசு தேர்வுத் துறை அலுவலகம் தற்போது 32 மாவட்டங்களிலும் உதவி இயக்குனர் அலுவலகமாக செயல்பட உள்ளது. இதன்மூலம் குரூப் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

    அதுமட்டுமின்றி அவர்கள் என்னென்ன தேர்வு எழுதலாம் அதற்குரிய சந்தேகங்கள் இனி அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த புதிய அலுவலகத்தில் உதவி இயக்குனர் உள்பட 10 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல் பர்கூர் மலைப்பகுதியில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவில்லை என்றால் ஒரு வாரம் வரை காத்திருப்போம். அப்படியும் வரவில்லை என்றால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


    மாணவர்களுக்கு வழங்குவதை போன்று ஆசிரியர்களுக்கும் வரும் கல்வியாண்டு முதல் மடிக்கணினி வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் மாணவர்களின் ஆதார் பதிவு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் எங்கு சென்றாலும் அவர்கள் பற்றிய விவரம் மதிப்பெண்களை தெளிவாகத் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    ×