என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selection task"

    • தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
    • திமுக வேட்பாளர் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    05.02-2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு வி.சி. சந்திரகுமார் அவர்களி வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    கே.வி.தங்கபாலு, க. திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, எஸ் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, செல்வி எஸ். ஜோதிமணி, எம்.பி., டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., கார்தி ப சிதம்பரம், எம்.பி., கே. கோபிநாத் எம்.பி., விஜய் வசந்த், எம்.பி., டாக்டர் சி.ராபர் ப்ரூஸ் எம்.பி., சரிகாந்த் செந்தில், எம்.பி., செல்வி சுதா ராமகிருஷ்ணன், எம்.பி., கே.ஆர். ராமசாமி, ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., ஏ.ஆர்.முனிரத்தினம், எம்.எல்.ஏ., ஜெ.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, ஜெ.எம்.எச். ஹசன் பௌலானா, எம்.எல்.ஏ., எஸ். ராஜ்குமார். எம்.எல்.ஏ., ஆர்.கணேஷ், எம்.எல்.ஏ., எஸ். பழனிநாடார், எம்.எல்.ஏ., ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ., எஸ். அமிர்தராஜ், எம்எல்ஏ., நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எஸ்.தி. ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., தாரகை சுத்பர்ட், எம்.எல்.ஏ., எஸ். மாங்குடி, எம்.எல்ஏ., ஆர். கருமாணிக்கம், எம்.எல்.ஏ., ஏ.எம்.எஸ்.ஜி. அசோகார், எம்.எல்.ஏ., டி. திருச்செல்வன், எம்.பி. சரவணன், மக்கள் ஜி. ராஜன், ஆர்.எம்.பழனிசாமி, சஞ்சய் சம்பத் எல்.முத்துக்குமார், பி.என்.நல்லுசாமி, ஈ.ஆர். ராஜேந்திரன், வி.எஸ், காளிழுத்து, வெளில் பிரசாத், சாரதா தேவி, சித்ரா விஸ்வநாதன், கே.பி. முத்துக்குமார், ஆர். சிவகுமார், ராஜேஷ் ராஜப்பா, கே.பி.உதயகுமரன், ஞானதிபன், கே.ஏ. கானப்ரியா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தலைமையாசிரியர்கள் வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது.
    • மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு பேணப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன.இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டன. அவ்வகையில் 2 ஆயிரத்து 213 பேர் இப்பணிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    இப்பணிக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு காலிப்பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவும் உள்ளது.

    அதன்படி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 86 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும் 54 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிடங்களும் காலியாக உள்ளன. இப்பணியிடத்திற்கு டி.டி.எட்., பி.எட்., மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் அல்லது மூத்த ஆசிரியரைக்கொண்ட குழு சரிபார்த்து, தகுதியானவர்களை வகுப்பறையில் டெமோ பாடம் நடத்த அறிவுறுத்தப்படும்.அதன் வாயிலாக அவர்களின் தனித்திறன் கண்டறியப்படுகிறது.

    தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, தனியாக வருகைப்பதிவேடு மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு பேணப்படும்.குறிப்பாகதேர்வுக்குழுவால், தேர்வு செய்யப்பட்ட பட்டியல் விபரம் வருகிற 18ந்தேதி முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.பின் 19-ந்தேதி ஏற்கப்பட்ட தற்காலிக நியமனத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெறப்படும். 20-ந்தேதி தற்காலிக நியமனம் பெற்றவர் பள்ளியில் சேர்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×