search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: கலெக்டர் ஸ்ரீதர் தகவல் வெளியிட்டார்.
    • விண்ணப்பிப்பதற்கான கடைசி வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி. குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசுபள்ளி களில் 2022-23-ம் கல்வி யாண்டில் 1.6.2022 நில வரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முது கலை ஆசிரியர் பணியி டங் களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்–கொள்ளப்பட உள்ளது. தகுதியான விண்ணப்ப தாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்று களுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரி டம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இது தொடர்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப்பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி. குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப் பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகவல் பலகையில் வெளி யிடப்படும் காலிப் பணியிட விவரங்கள் மாறு தலுக்குட்பட்டது. மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிப்பவர்கள் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்கு deokki2018@gmail.com, திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்திற்கு deotkr2018@gmail.com, உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்திற்கு deoupt65@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப் பங்கள் வந்துசேர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×