search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto Geo protest"

    பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு 17-பி விதியின் கீழ் தண்டனை பெற்ற 4 ஆயிரம் ஆசிரியர்கள் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறவில்லை.
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    தமிழக முழுவதும் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    மாணவர்கள் கல்வி பாதிக்கக்கூடும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பும்படி அரசு வேண்டுகோள் வைத்தது. ஆனாலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் இருந்ததால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தது.

    பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 4 ஆயிரத்திற்கும் மேலான ஆசிரியர்களுக்கு 17-பி விதியின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் நடந்த அரசாணை எரிப்பு போராட்டத்திலும் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் மீது 17-பி விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. ஆனால் மிகவும் தீவிரமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான “பேனல்” தயாரிக்கப்படுகிறது.

    இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலை பட்டதாரி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஜூன், ஜூலை மாதத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு 17-பி விதியின் கீழ்  தண்டனை பெற்ற 4 ஆயிரம் ஆசிரியர்கள் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
    ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முதல்வரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை. மேலும், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #JactoGeo
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று அறிவித்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று கூறுகையில், முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உறுதியாக தெரிவித்தது.

    இதையடுத்து, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.



    இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

    சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளதாலும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், நீதிமன்றம் மற்றும் முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர். #JactoGeo
    பிப்ரவரி ஒன்று முதல் தொடங்குவதாக இருந்த தலைமைச் செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #JactoGeo
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தலைமை செயலக பணியாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு செய்திருந்தனர்.

    இந்நிலையில், பிப்ரவரி ஒன்று முதல் தொடங்குவதாக இருந்த தலைமை செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தலைமை செயலக பணியாளர் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறுகையில், பிப்ரவரி ஒன்று முதல் தொடங்குவதாக இருந்த தலைமைச் செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படுகிறது. மாணவர்களின் நலன், தமிழக அரசின் நிதிநிலை மற்றும் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. அனைவரும் நாளை பணிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார். #JactoGeo
    பொய்யான வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் வெற்றி பெற முயற்சிப்பதாக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #PonRadhakrishnan #Congress #Rahulgandhi
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கடந்த 27-ந்தேதி மதுரை வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பா.ஜனதா கூட்டத்திலும் பங்கேற்றார். இது தமிழக அரசியலில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    வருகிற 10-ந்தேதி திருப்பூருக்கும், 19-ந்தேதி கன்னியாகுமரிக்கும் பிரதமர் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகை புதிய எழுச்சியை ஏற்படுத்தும்.



    ஏழைகளுக்கு வருமானம் வரும் திட்டத்தை ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. மக்கள் இதை நம்ப மாட்டார்கள்.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். அந்த வாக்குறுதி என்ன ஆனது? அதுபோல இப்போதும் மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். இதை ஏற்க மக்கள் தயாராக இல்லை.

    தமிழ்நாட்டில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை முடிவுக்கு கொண்டு வர அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். போராட்டம் செய்பவர்களை அழைத்துப் பேசி நல்ல தீர்வு ஏற்பட செய்வார்கள் என்று நம்புகிறேன்.

    இந்து மதம் வாட்ஸ்அப் மூலம் வளரும் நிலை உள்ளதாக விஜயேந்திரர் வருத்தப்பட்டுள்ளார். துறவிகள் மதத்தின் காவலர்கள். இந்து மதத்தை எந்த காலத்திலும் அழிக்க முடியாது. நவீன தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இளைஞர்கள் அதற்காக அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

    ஓட்டுப்பதிவு எந்திரம் மூலம் பா.ஜனதா தில்லு முல்லு செய்வதாக காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 3 மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பல இடைத்தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி வாய்ப்புகளை இழந்துள்ளது.

    உண்மை இவ்வாறு இருக்க ஓட்டு எந்திரங்களில் மோசடி செய்வதாக காங்கிரஸ் கூறுவது ஜனநாயக நம்பிக்கையை அழிக்கும் செயல். உண்மையை மறைத்து ஆதாயம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும். பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

    10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை கூறி வருகின்றன. ஏழைகளுக்கு உதவுவதற்காக பிரதமர் மோடி கொண்டு வந்த அருமையான திட்டம் இது. ஏழைகள் முன்னேறாமல் ஜாதி எப்படி ஒழியும்?

    தமிழ்நாட்டில் பா.ஜனதா பரிதாப நிலையில் உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இதை சொல்லும் அவருடைய நிலைமை தான் பரிதாபமாக உள்ளது.

    இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan #Congress #Rahulgandhi
    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் தான் இதுவரை இந்த அரசு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச மறுத்து வருவதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார். #TTVDhinakaran #KodanadIssue
    மாமல்லபுரம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு சுற்றுபயணமாக நேற்று இரவு கல்பாக்கம் வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் தான் இதுவரை இந்த அரசு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச மறுத்து வருகிறது. இது அரசுக்கு ஆரோக்கியமானது அல்ல.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த அரசுக்கு முடிவு கட்டப்படும். தேர்தலில் கூட்டணி குறித்து எங்களிடம் சில கட்சிகள் பேசி வருகிறார்கள் விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #KodanadIssue
    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #JactoGeo #TNGovt #EdappadiPalanisamy
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்புக்கு ஆதரவாக, தலைமைச் செயலக ஊழியர்களும் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நம் உரிமைகளை சில நேரம் விட்டுக்கொடுத்து மக்கள் பணியாற்றுவது நம்முடைய கடமையாகும்.

    சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனுக்காகவும் பணியாற்றுவது நம்முடைய கடமையாகும். பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். பல மாநிலங்களில் ஊதிய உயர்வு முறையாக வழங்கப்படாத நிலையில், நிலுவையை  தமிழகம் வழங்கியது என குறிப்பிட்டுள்ளார்.  #JactoGeo #TNGovt #EdappadiPalanisamy
    ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #jactogeostrike #JactoGeo #TNGovt
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு ஆதரவாக, தலைமைச் செயலக ஊழியர்களும் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில்,  ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது.

    ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது. போராட்டத்தில் ஈடுபடும் தலைமைச் செயலக ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #jactogeostrike #JactoGeo #TNGovt
    பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. #TNGovt #JactoGeo
    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த முறை நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இதை எதிர்த்து அவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஜாக்டோ-ஜியோ அமைப்பு எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சரமாரியாக நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 'தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தை இந்த கல்வியாண்டு முடியும் வரை தள்ளி வைக்க முடியுமா? என்று இன்று  பிற்பகலுக்குள் தெரிவிக்க வேண்டும்’ என்று நீதிபதி கூறினார்.



    அதன்படி இன்று பிற்பகல் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறியதாவது:

    இரண்டு முறை நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தைத் தள்ளி வைத்தோம். கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அளித்த உத்திரவாதத்தை செயல்படுத்த தவறியதால் தான் மீண்டும் போராட்டம். 

    பேச்சுவார்த்தை நடத்த முதல்வரை அறிவுறுத்தவும். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உறுதியாக கூறியது.

    விசாரணை முடிவில், உயர்நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி என நீதிபதி தெரிவித்தார். #TNGovt #JactoGeo
    ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 1,055 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. #JactoGeo
    கடலூர்:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் உள்ளனர்.

    இதனால் அரசு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஆசிரியர்கள் பணிக்கு வராத காரணத்தால் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அதன்படி நேற்றைய நிலவரப்படி கடலூர் மாவட்டம் முழுவதும் 1,055 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. #JactoGeo

    அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரத்தில் தலையிட முடியாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #JactoGeo #MaduraiHCBench
    மதுரை:

    ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி லோகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

    ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    பொது நல மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே ‘‘21 மாத நிலுவைத்தொகை வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ ஜாக்டோ- ஜியோ சார்பில் புதிய கோரிக்கை முன் வைக்கப்பட்டது.


    அப்போது ‘‘அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட ரீதியாக அணுகாமல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வீதியில் இறங்கி போராடுகிறீர்கள். நீங்கள் தற்போது குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்பாக புதிதாக உத்தரவு ஏதும் பிறக்க முடியாது’’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து வழக்கை பிப்ரவரி 18-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். #JactoGeo #MaduraiHCBench
    வேலூர்- திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு 5-வது நாளாக இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். ஆசிரியர்கள் போராட்டத்தால் தொடக்கப் பள்ளிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. #JactoGeo
    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு 25-ந் தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

    அதன்படி கோர்ட்டு உத்தரவை மீறி கடந்த 25-ந்தேதி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 1,300 பேரை போலீசார் கைது செய்து சத்துவாச்சாரி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    இதற்கிடையே மாலை 4 மணியளவில் ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணராஜ், மணி, அமர்நாத், பிரின்ஸ் தேவஆசீர்வாதம், சுரேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 5-வது நாளாக இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். ஆசிரியர்கள் போராட்டத்தால் தொடக்கப் பள்ளிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மறியலில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே 5-வது நாளாக இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். #JactoGeo #TeachersProtest
    ×