search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt employees protest"

    3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய நிலையில் இன்று வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காமல் தமிழக அரசு வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலர்கள் முன்பாக ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில மைய முடிவு அறிவித்துள்ளது.

    அதன்படி நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயலாளர் சௌந்தரராஜன் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 1.1.2019 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்ட பொருளாளர் மேகநாதன் நன்றி கூறினார்.
    புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் புதுவை அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்று தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #PondicherryGovtEmployees
    புதுச்சேரி:

    புதிய பென்‌ஷன் திட்டத்தை எதிர்த்து நாளை மறுநாள் (திங்கள்கிழமை) நாடு தழுவிய போராட்டத்தை நடத்த அரசு ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்து அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

    இதில் மாநில கோரிக்கையை முன்வைத்து கூட்டுறவு சங்கங்களும் போராட்டம் நடத்த தயாராகி வருகிறது. இதனால் அரசு பணிகள் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து அரசு துறைகளுக்கும் தலைமை செயலாளர் அஸ்வினி குமார் உத்தரவின்பேரில் நிர்வாக சீர்திருத்தத்துறை அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    வருகிற 26-ந்தேதி அரசு ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அறிகிறோம். இதை சட்டப்படி ஏற்க முடியாது.

    எனவே அன்றைய தினம் அவசர காலமின்றி யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது. அன்றைய தினம் மதியம் 12 மணிக்குள் எத்தனை ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர்? எத்தனை பேர் பணிக்கு வரவில்லை என்ற விபரத்தையும் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #PondicherryGovtEmployees
    ×