என் மலர்

    நீங்கள் தேடியது "Pondicherry govt employees"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் புதுவை அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்று தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #PondicherryGovtEmployees
    புதுச்சேரி:

    புதிய பென்‌ஷன் திட்டத்தை எதிர்த்து நாளை மறுநாள் (திங்கள்கிழமை) நாடு தழுவிய போராட்டத்தை நடத்த அரசு ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்து அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

    இதில் மாநில கோரிக்கையை முன்வைத்து கூட்டுறவு சங்கங்களும் போராட்டம் நடத்த தயாராகி வருகிறது. இதனால் அரசு பணிகள் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து அரசு துறைகளுக்கும் தலைமை செயலாளர் அஸ்வினி குமார் உத்தரவின்பேரில் நிர்வாக சீர்திருத்தத்துறை அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    வருகிற 26-ந்தேதி அரசு ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அறிகிறோம். இதை சட்டப்படி ஏற்க முடியாது.

    எனவே அன்றைய தினம் அவசர காலமின்றி யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது. அன்றைய தினம் மதியம் 12 மணிக்குள் எத்தனை ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர்? எத்தனை பேர் பணிக்கு வரவில்லை என்ற விபரத்தையும் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #PondicherryGovtEmployees
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவை அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கணக்கு, கருவூல துறைக்கு இரவிலேயே அனுப்பப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் இன்று அல்லது நாளை சம்பளம் செலுத்தப்படுகிறது. #PondicherryGovtEmployees
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் நிதி ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய கவர்னர் கிரண் பேடி அனுமதி அளிக்கவில்லை.

    பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்காத நிலையில் புதுவை சட்டசபை கடந்த 19-ந்தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி நிபந்தனை விதித்திருந்தார்.

    சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பதா? இல்லையா? என்று முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டசபையை கூட்டுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    சட்டசபையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றால் மட்டுமே நிதியை பயன்படுத்த முடியும். இதனால் அடுத்த மாத அரசின் செலவுகளுக்கு நிதியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக புதுவை அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் இறுதி நாளில் சம்பளம் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.

    இந்த இக்கட்டான சூழலில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், நிதி துறை செயலாளர் சுந்தவேலு, பட்ஜெட் அதிகாரி ரவிசங்கர், கருவூல துறை இயக்குனர் ரமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனையின் முடிவில் அரசின் அவசர கால நிதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து துறை வாரியாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    இதற்காக அரசு துறைகள் அலுவலகம் நேரம் முடிந்த பிறகும், இரவிலும் இயங்கின. பட்டியல் தயாரிக்கப்பட்டு கணக்கு மற்றும் கருவூல துறைக்கும் இரவிலேயே அனுப்பப்பட்டது.


    கருவூலக துறையிலும் அதிகாரிகளும், ஊழியர்களும் இரவிலும் பணியாற்றினர். இதன் பிறகு அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படும். இந்த பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்தது.

    இதனால் இன்று மாலையோ, அல்லது நாளையோ (புதன்கிழமை) அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும். #PondicherryGovtEmployees
    ×