search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai highcourt"

    • தொழில்நுட்ப வளர்ச்சியால் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் வெளி வருகின்றன.
    • ப்ரீ பயர் விளையாட்டில் வரும் வன்முறை காட்சி குழந்தைகள் மனதை பாதிக்கிறது.

    நாகர்கோவிலை சேர்ந்த அயரின் அமுதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்றும், கடந்த 6-ந் தேதி முதல் அவளை காணவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த தமது மகளை, அந்த விளையாட்டு மூலம் பழக்கமான ஒருவர் அழைத்து சென்றுள்ளார், அவளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமது மனுவில் அமுதா கூறியிருந்தார்.

    இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டில் வரும் வன்முறை காட்சிகள் குழந்தைகள் மனதை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளன என்றும், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் அவை வெளிவந்து கொண்டே இருக்கின்றன எனவும் தெரிவித்தனர்.

    இதனால் இந்த விளையாட்டுகளை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்நிலையில் மனுதாரர் தரப்பு மகளை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் பள்ளி கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில், மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடம் ஆகிறது. பள்ளி கட்டிடங்களில் பெரும்பாலானவை சேதம் அடைந்துள்ளன. அங்கு மாணவர்கள் படிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    எனவே பள்ளிகளை ஆய்வு செய்து பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து விசாரிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதைத் தொடர்ந்து பள்ளிகள் ஆய்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வருகிற 29-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். #MaduraiHC
    ×