search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road"

    • இந்த சாலையை நம்பி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயணித்து வருகிறார்கள்.
    • சாலையை 16 அடியிருந்து 20 அடிவரை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம்- உப்பிலிபாளையம் ரோடு பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க கோரி பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் முருகதாஸ், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்புரம் பூக்கடை முதல் உப்பிலி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை உள்ள தார் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்தும், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையை நம்பி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயணித்து வருகிறார்கள்.

    இந்த சாலை வழியாக முக்கிய தொழிற்சாலைகள் , அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் சட்ட கல்லூரி, உப்பிலிபாளையம் அரசு சுகாதார நிலையம் போன்றவைகள் உள்ளது. அருள்புரம் பகுதி வளர்ந்து வரும் தொழில் நகரமாக இருப்பதால் இந்த சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும்.

    எனவே இந்த சாலையை விரிவுப்படுத்தி அருள்புரம் தொடங்கி உப்பிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 12 அடி சாலையை 16 அடியிருந்து 20 அடிவரை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்க வேண்டும். எனவே மாவட்ட ஆட்சியர் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு இட வேண்டும் என்று கேட்டு மனு வழங்கி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
    • பலர் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பு நடுத்தெரு பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெருநாட்டான் தோப்பு நடுத்தெருவை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பெருநாட்டான்தோப்பு வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருக்கண்ணபுரம்,கங்களாஞ்சேரி,திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளனர்.மேலும் மழையில் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் புதிய சாலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் வன்னிக்கோேனந்தல் தம்பிராட்டி அம்மன் கோவில் தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் புதிய சாலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. மானூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீலேகா செல்வி அன்பழகன், ஒன்றிய ஆணையாளர் மணி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலநீலித நல்லூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெற்றி விஜயன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஒன்றிய துணைத் தலைவர் கலைச்செல்வி, வன்னிக்கோேனந்தல் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன், பஞ்சாயத்து துணைத் தலைவர் வள்ளிநாயகம், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா முருகன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர் வீமராஜ், ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், கூவாச்சிபட்டி செல்வம், காங்கிரஸ் கணேசன், முகமது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கம்பன் நினைவிட சாலையை சரிசெய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
    • தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் நினைவிடம் செல்லும் சாலை பல ஆண் டுகளாய் குண்டும், குழியு மாய் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிய டைந்து வருகின்றனர். நாட் டரசன் கோட்டையிலிருந்து கருதுப்பட்டி, கண்டனிப் பட்டி வழியே காளையார் கோவில் செல்லும் சாலை உள்ளது.

    நாட்டரசன்கோட்டையி லிருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கி.மீ. தூரம் செல்லும் இந்த சாலை பின்னர் தொண்டி தேசிய நெடுஞ்சாலையுடன் இணை கிறது. நாட்டரசன்கோட்டை வழியே காளையார்கோவில் செல்லும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகின்றனர். 4 கி.மீ. தூரமுள்ள இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

    மண் சாலையாக இருந்து முதன்முறையாக தார்ச்சா லையாக மாற்றப்பட்ட பின் னர் எவ்வித பராமரிப் பும் செய்யாமல் விடப்பட்டுள் ளது. நாட்டரசன்கோட்டை யிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள கம்பன் நினைவிடத்திற்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். கம்பன் நினைவிடத்திற்கு சிறிது தூரம் முன்புவரை நாட்டர சன்கோட்டை பேரூராட்சி சாலையாகவும், எஞ்சிய 3 கி.மீ. தூரம் காளையார் கோவில் யூனியன் சாலையா கவும் உள்ளது.

    இதில் பேரூராட்சி எல் லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் புதிய சாலை அமைக்கப்பட்டது. எஞ்சிய 3 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலை அமைக்க காளையார் கோவில் யூனியன் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக் காததால் சாலை, போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலை யில் உள்ளது.

    மதுரை, தொண்டி சாலையில் செல்லும் சுற்று லாப்பயணிகள் நாட்டரசன் கோட்டை ஊருக்குள் வந்து கண்ணுடையநாயகி அம்மன் கோவில், கம்பன் நினைவி டம் சென்று மீண்டும் மதுரை, தொண்டி சாலை யில் இணைந்து கொள்ளும் வகையில் உள்வட்ட சாலை யாக இருந்தது. பல ஆண்டு களாய் சாலை பழுதால் தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட் டுள்ளது.

    இதுகுறித்து கிராம மக் கள் கூறுகையில், பிரதான சுற்றுலாத்தலமான கம்பன் நினைவிட சாலை பழுத டைந்து சுமார் 10 ஆண்டுக ளுக்கும் மேல் ஆகிவிட்டது. கடந்த 2013-ம் ஆண்டு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு இச்சாலையை பார்வையிட் டது. சாலை பழுது குறித்து பல்வேறு புகார்கள் அனுப்பி யும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக புதிய சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பாறை உருண்டு விழுந்து சாலையில் நின்றது.
    • யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. மேலும் கனரக வாகனங்களும் அதிக அளவில் இந்த பாதையில் வந்து கொண்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை அவ்வப்போது பொழிந்து வருவதால் மலைப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகளில் பிடிப்பு தன்மை குறைந்து பாறைகள் சாலையில் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை அந்தியூர் பர்கூர் சாலையில் செட்டிநெடு என்ற இடத்தின் அருகே பாறை உருண்டு விழுந்து சாலையில் நின்றது. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வராமல் இருந்த தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10-ந் தேதிக்கு பிறகு வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை
    • கந்த சஷ்டி விழா 13-ந் தேதி நடப்பதால் அதிகாரிகள் மும்முரம்

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு என அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    முக்கிய விழா நாட்கள், விஷேச தினங்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    மலைக்கோவில் பகுதியில் கடந்த 5-ந் தேதி லிப்ட் அமைப்பது, தார்சாலை அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கியது.

    இதன் காரணமாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கோவிலுக்கு செல்பவர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்க சென்று வருகின்றனர்.

    தற்போது இந்த பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. மலைப்பாதையில் 2.27 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் பணி நடந்துள்ளது. மீதி 300 மீட்டர் தூரம் வரையிலான சாலை அமைக்கும் பணி மட்டுமே உள்ளது. அந்த பணியும் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வருகிற 13-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இந்த விழாவில் கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கந்த சஷ்டி விழா தொடங்குவதற்குள், மருத மலை மலைப்பாதையில் நடந்து வரும் பணிகள் அனைத்தும் முடிந்து, வருகிற 10-ந் தேதிக்குள், வாகனங்கள் மீண்டும் மலைப்பாதையில் இயக்கப்படலாம் என தெரிகிறது.

    இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலைபணி கள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்கு வழிப்பாதை சரிவர இல்லாமல் இருந்து வந்தது.
    • சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான் தனது சொந்த செலவில் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்தார்.

    நெல்லை:

    கூடங்குளம் அருகே இடிந்தகரை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும் போது கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்கு வழிப்பாதை சரிவர இல்லாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக படகுகளில் இருந்து தரையில் நிற்கும் வாகனங்களுக்கு மீன்களை எடுத்துச்செல்ல மீனவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர உதவிடுமாறு மீனவர்கள் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான விஜயாபதி ஏ.ஆர்.ரகுமானிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனையின்பேரில் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு விஜயாபதி ரகுமான் தனது சொந்த செலவில் கடற்கரையில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்தார். இடிந்தகரையில் தரையில் இருந்து கடல் வரையிலும் சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு தனது சொந்த செலவில் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்தார். அந்த பணிகளை நேற்று அவர் ஆய்வு செய்தார். அப்போது மீனவர் பிரதிநிதிகள் இடிந்தகரை வெனிஸ்லாஸ், ரமேஷ், ராமு, செல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி இட்டேரி ரோடு பகுதியில் ஏராளமான சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    இது குறித்து கவுன்சி லர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தெந்த நடவடிக்கும் எடுக்காததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீராம் நகர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் சாயப்பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. பட்டறைகளில் இருந்து காலை 10 மணிக்கு மேல் கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

    இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாயப்பட்டறை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • இந்த சாலை அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியாகவே காணப்படும்.
    • போலீசார் சாலையை சீர்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பட்டுக்கோ ட்டை சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் ஒரு அரசு வங்கி மற்றும் தனியார் வங்கி மேலும் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் மற்றும் பல வகையான கடைகள் இயங்கி வருகிறது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசு மருத்துவமனை சாலையிலே வாகனங்கள் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி யாகவே இருந்து வருகிறது.

    பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் ஸ்ரீமுகி (வயது 30). இவர் பேராவூரணி அண்ணா சிலை அருகில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடையின் வேலையாக வங்கிக்கு சென்று வேலை யை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு புறப்படும் போது அரசு பேருந்து ஒன்று பட்டுக்கோ ட்டையிலிருந்து அந்த மருத்துவமனை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வங்கி மற்றும் தனியார் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தியிரு ந்ததால் ஸ்ரீ முகி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியனுக்கும் பேருந்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் ஸ்ரீமுகி படுகாயம் அடைந்தார்.

    இதைத் தொடர்ந்து பேருந்தை டிரைவர் உடனே நிறுத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்தப் பெண்ணை மீட்டு தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவ ரத்தை சரி செய்தனர்.

    பேராவூரணி நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தி மேலும் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசெவலை - தி. மழவராயனூர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையினை ஏற்று அமைச்சர் பொன்முடி முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வீடு இல்லாத அனைவருக்கும் கட்சிப் பாகுபாடு இன்றி வீடு வழங்கப்படும் என பேசினார்.

    இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், ஒன்றிய குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, தி.மு.க நகர செயலாளர் பூக்கடைகணேசன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி துணைதலைவர் ஜோதி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ், தலைமை கழக பேச்சாளர் சிறுவானூர் பரசுராமன் சிறுமதுரைசெல்வம் ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சாலை மேடு-பள்ளங்கள் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • இதைத்தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அதனை சீரமைத்து கொடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுக்காவிற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இணைப்பு சாலை

    இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும்.

    ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் விஷ சந்துக்கள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    போர்க்கால அடிப்படையில்....

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

    இது தொடர்பாக மாலைமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அதனை சீரமைத்து கொடுத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • முத்துப்பேட்டை போலீசார் லாரியை சாலையிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    திண்டுக்கல்லில் இருந்து தில்லைவிளாகம் கிராமத்திற்கு தென்னை மட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று முத்து ப்பேட்டை கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென சாலையில் உள்ள சென்டர் மீடியனில் லாரி எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் லாரியின் முன்பகுதியில் உள்ள இரு சக்கரமும் துண்டாகி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இதில் லாரியை ஓட்டி வந்த டிரை வரான புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த பாலகிரு ஷ்ணன் (வயது 27) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதனால் அப்பகு தியில் பல மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அவ்வழியாக வந்த வாகன ங்கள் மாற்று பாதையில் திருப்பி அனுப்ப ப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் லாரியை சாலையிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×