search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை நீர்"

    • சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.
    • தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

    இருப்பினும், சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.

    இந்நிலையில், மழை நீர் விரைவில் அகற்றப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    செய்தியளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்," சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

    சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.

    • வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சந்தோஷ் நாராயணன் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், "10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு, முழங்கால் அளவு தண்ணீர், குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு என்பது முகத்தில் அறையும் உண்மை. இது ஒரு ஏரியோ அல்லது தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையின் மற்ற பகுதிகளை விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீர் ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்புகளை தாக்குகிறது.


    இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஆகியவை மரணத்தில் முடிகிறது. எங்கள் பகுதி மக்களைச் சென்றடையவும், அவர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டிகளை நிரப்பவும், மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன.

    சென்னைவாசிகளின் நம்பிக்கைக்கு பாராட்டுகள், நான் செல்லும் இடங்களில் எல்லாம் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்களும் நிலவுகின்றன. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • மழை காலங்களில் வடிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் வடிந்து விடும்.
    • தற்போது வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குகாடு கிராம கமிட்டியை சேர்ந்த மக்கள் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முத்துப்பேட்டை பாமணி ஆறு உடைப்பு ஏற்பட்டகாலங்களிலும் மற்றும் மழை வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும் முத்துப்பேட்டை சில்லாடி வழி பட்டறைக்குளம் வடிகால் வாய்க்கால் என்று அழைக்கப்படும் வடிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் பட்டறைக்குளம் சென்று அங்கிருந்து கோறையாற்றில் தண்ணீர் வடிந்து விடும்.

    தற்போது அந்த வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே சில்லடி வாய்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
    • தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் ஒரு சில வட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

    பல்வேறு இடங்களில் சேரும் சகதியுமாக மாறியது. வேலூரில் முள்ளிப்பாளையம், கேகே நகர், சம்பத் நகர், சைதாப்பேட்டை, சுண்ணாம்பு கார தெரு, கொசப்பேட்டை உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் உள்ள பழமையான மரம் உள்ளது. இந்த மரம் ஒரு பகுதி பட்டுப்போன நிலையில் இருந்தது.

    கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரத்தின் பெரிய கிளைகள் நேற்று இரவு முறிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    • மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
    • பலர் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பு நடுத்தெரு பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெருநாட்டான் தோப்பு நடுத்தெருவை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பெருநாட்டான்தோப்பு வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருக்கண்ணபுரம்,கங்களாஞ்சேரி,திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளனர்.மேலும் மழையில் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவாடானை அருகே சமத்துவபுரத்தில் தொடக்கப்பள்ளி, குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சமத் துவபுரம் பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முறையாக கழிவுநீர் மற்றும் வடிகால் கால்வாய் வசதிகள் அமைக்காததால் தற்போது பெய்து வரும் தொடர் மழை யின் காரணமாக வீடுகளுக் குள்ளும் வீடுகளை சுற்றியும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் குடியிருக்க முடியாமல் அப்பகுதி மக் கள் பரிதவித்து வருகின்ற னர். மேலும் அங்குள்ள குழந்தைள் மற்றும் பெரிய வர்கள் ஏராளமானோர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். மேலும் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்துள்ளதால் மாணவர் கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் கண்துடைப் பிற்கு மட்டுமே வந்து பார் வையிட்டு செல்வதாகவும் எந்த நடவடிக்கையும் எடுப் பதில்லை என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆவுடையானூர் செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்களை தொற்று நோய் பாதிக்கும் நிலை உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி சந்தை அருகே நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் இருந்து ஆவுடையானூர் கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சிய ளிப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக மார்க்கெட் சாலை அருகே முகப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. தேங்கி நிற்கும் மழை நீரால் துர்நாற்றம் வீசி வருவதால் கொசுக்கள் கிருமிகள் மூலம் பொதுமக்களை தொற்று நோய்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் அருகே குண்டும் குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்புவ தோடு, முறையாக புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் புவியியல் ஆய்வாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் அதிகரித்தது.
    • சென்னையில் கணிசமான அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

    தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை அளவு 945 மில்லி மீட்டர். இந்த அளவு மழை தண்ணீர் மூலம் தமிழகத்தின் பாசன தேவையையும், குடிநீர் தேவையையும் முழுமையாக சமாளிக்க முடியும். ஆனால் அதை சாத்தியப்படுத்த முடியாத நிலைதான் உள்ளது.

    தமிழகத்தில் பெய்யும் மழையில் 35 சதவீதம் ஆவியாகி விடுகிறது. 14 சதவீதம் பூமிக்குள் சென்று விடுகிறது. 10 சதவீதம் மண்ணை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. மீதமுள்ள சுமார் 40 சதவீத மழை தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக வெள்ளப்பெருக்காக மாறி கடலில் கலந்து விடுகிறது.

    இந்த 40 சதவீதம் மழை தண்ணீரில் எவ்வளவு தண்ணீரை பயன்படுத்த முடியுமோ? அவ்வளவு தண்ணீரை பயன்படுத்தி விடவேண்டும் என்ற திட்டத்துடன் கடந்த 2001-ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் "மழை நீர் சேகரிப்புத் திட்டம்" கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களில் இந்த திட்டம்தான் முதன்மையான திட்டம் என்று சர்வதேச அளவில் கூட பேசப்பட்டது.

    மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை ஆச்சரியத்தோடு பார்த்த நிலையில் தமிழகம் முழுவதும் வீடுகளிலும், அரசு அலுவலகங்களிலும், பொது கட்டிடங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகளால் மழை நீர் சேகரிப்பு திட்டம் மூலம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமான அளவுக்கு உயர்ந்தது.

    குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் புவியியல் ஆய்வாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் அதிகரித்தது. அருமையான இந்த திட்டம் இன்று கானல்நீர் போல காட்சி அளிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அரசு அதிகாரிகளும் அதை கண்டு கொள்ளவில்லை. பொதுமக்களும் அதைப் பற்றி கவலைப்படவும் இல்லை.

    சென்னை நகர மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைப்பதுதான் மழை நீர் சேகரிப்பில் ஏற்பட்டுள்ள தொய்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பைப்பை திறந்தால் தண்ணீர் கொட்டுவதால் மழை நீரை சேமித்து வைக்க வேண்டும் என்கிற நினைப்பே கடந்த 10 ஆண்டுகளாக இல்லாமல் போய் விட்டது.

    சென்னையில் சுமார் 20 லட்சம் கட்டிடங்கள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி 74.23 சதவீதம் கட்டிடங்களில் மழை சேகரிப்பு இருந்தாலும் அவை முறைப்படி பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. 2021-ம் ஆண்டுக்கு பிறகு அத்தகைய ஆய்வு கூட நடத்தப்படவில்லை. இதனால் மழை நீர் சேகரிப்பு என்பதே இல்லாத நிலைதான் தற்போது சென்னை நகர கட்டிடங்களில் காணப்படுகிறது.

    ஜெயலலிதா இந்த திட்டத்தை கொண்டு வந்த போது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகாரிகள் மழைநீர் சேகரிக்கப்படுகிறதா? என்பதை அக்கறையோடு உறுதிப்படுத்தி கொள்வார்கள். இப்போது அது இல்லை. இதனால் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு குழாய் இருந்தாலும் அதில் வரும் தண்ணீர் நிலத்தடிக்குள் செல்கிறதா? என்பதை யாரும் உறுதிப்படுத்துவது இல்லை.

    சென்னையில் கணிசமான அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதில் இருந்து வெளியேறும் மழை தண்ணீர் முன்பு முழுமையாக சேகரிப்பாக மாறியது. தற்போது அவையெல்லாம் கழிவுநீர் சாக்கடைக்குள் போய் விடுகிறது. அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்கத்தினரும் அதை கண்டு கொள்வதில்லை.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 90 சதவீதம் மழை நீர் சேகரிப்பு குழாய்கள் பயன்பாட்டில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதாவது பெரும்பாலான கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு இல்லாமல் போய் விட்டது என்பதை இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பழுதடைந்த குழாய்களை சீரமைத்து புதிய குழாய்களை பொருத்த வேண்டுமானால் கூடுதல் செலவு ஆகும் என்பதால் பல அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர், "அது எதற்கு வீண் செலவு" என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள்.

    இதே நிலைதான் அரசு கட்டிடங்களிலும் காணப்படுகிறது. அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக்கான குழாய்களை கூட காண முடியவில்லை. பிறகு எப்படி மழை நீரை சேகரிக்க முடியும்? இவற்றை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோ, மாநகராட்சி அதிகாரிகளோ, சென்னை பெருநகர வளர்ச்சி குழு அதிகாரிகளோ, யாருமே கண்டு கொள்வதும் இல்லை. கண்காணிப்பதும் இல்லை.

    ஒரு கட்டிடத்தில் மழை நீர் சேகரிப்பு வசதி செய்யப்படாவிட்டால் அல்லது மழைநீர் சேகரிப்பு விஷயத்தில் விதிகள் மீறப்பட்டு இருந்தால் அபராதம் விதிக்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு இருக்கிறது. ஆனால் அவை திறம்பட செயல்படவில்லை. மழைநீர் சேகரிப்புக்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உள்ளது. ஆனால் அதுவும் திட்டமிட்டபடி நடப்பது இல்லை. சென்னையில் சாலைகளில் வழிந்தோடும் மழை தண்ணீரையும் சேமிக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு துவாரங்கள் போடப்பட்டு உள்ளது. இது தவிர பூங்காக்களிலும் மழை நீர் சேகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள 57 பூங்காக்களில் மழை நீர் சேகரிப்புக்காக ரூ.7.67 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது.

    ஆனால் மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் மழை நீர் சேகரிப்பு முழுமையாக இல்லை. இதன் காரணமாக சென்னை முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் கவலைப்படும் வகையில் மாறிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக மாதவரம் மண்டலத்தில் அதிகளவு நிலத்தடி நீர் குறைந்து போய் விட்டது. ராயபுரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் மிக மிக குறைந்து விட்டது.

    ஜெயலலிதா ஆட்சியுடன் ஒப்பிடுகையில் 2 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவ மழை இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பு மழை நீர் சேகரிப்பு குழாய்களை போர்க்கால அடிப்படையில் சீர் அமைத்தால்தான் சென்னையில் மீண்டும் நிலத்தடி நீர் மட்டத்தை செழிப்பான ஒன்றாக மாற்ற முடியும்.

    தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை மிக வேகமாக சீரமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த மாதத்துக்குள் (செப்டம்பர்) இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் எங்கு எல்லாம் மழை நீர் தேங்கும் என்று ஏற்கனவே ஆய்வு செய்து அடையாளம் கண்டுள்ளனர்.

    அந்த பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக 223.78 கிலோ மீட்டர் தொலைவுக்கு வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மட்டும் ரூ.761.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    மழை காலம் தொடங்குவதற்குள் இவை முடிக்கப்பட்டாலும் கட்டிடங்களில் உள்ள மழை நீர் சேகரிப்பு திட்டம் சீரமைக்கப்பட்டால் சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை 10 சதவீதம் குறைக்க முடியும். எனவே மழை நீர் வடிகால் பணிகளில் காட்டப்படும் வேகம் போன்று மழைநீர் சேகரிப்பு திட்டத்திலும் அதிகாரிகள் ஆர்வம் காட்டினால் சென்னை நகர மக்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.

    ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கும் முன்பே பொதுமக்கள் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்பு குழாய்களை சீரமைத்தால் நிச்சயம் சென்னை குளிர்ந்த பூமியாக என்றென்றும் இருக்கும்.

    • மழை நீரை அகற்றாததால் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வட மாநில இளைஞர் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றாததால் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட ரொட்டிக்கார் தெருவில் கடந்த ஒரு மாதக் காலமாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியான முறையில் மூடப்படாததால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.இதனால் தற்போது பெய்து வரும் மழையினால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பல்வேறு பணிகளுக்காக செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும், சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் இங்குள்ள பொதுமக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி திண்டிவனம் நகராட்சியில் பலமுறை முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் இன்று சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி சாலையிலுள்ள பள்ளங்களிலும், சேறும் சகதியுமாக உள்ள பகுதிகளிலும் நாற்று நடவு செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வட மாநில இளைஞர் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • ராக்கியாபாளையத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குட்டை உள்ளது.
    • நொய்யல் கிளை வாய்க்கால் வாயிலாக வரும் மழைநீர் குட்டையில் நிரம்புகிறது.

    அவிநாசி :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட ராக்கியாபாளையத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குட்டை உள்ளது. நொய்யல் கிளை வாய்க்கால் வாயிலாக வரும் மழைநீர் குட்டையில் நிரம்புகிறது. சமீபத்தில் அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் ஓரிரு நாள் பெய்த மழையில் குட்டை நிரம்பி பார்வைக்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- திருமுருகன்பூண்டி நகராட்சியில் ஏராளான நீர்நிலைகள் உள்ளன. அவை ஆக்கிரமிப்பால் அடைபட்டும், சுருங்கியும் உள்ளன. அத்தகைய நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். அத்துடன் ராசாத்தாள் குட்டைக்கு மழைநீர் வரும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.இப்பகுதியில் தான் பூண்டி நகராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வரும் நிலையில், ராசாத்தாள் குட்டையில் ஆண்டு முழுக்க நீர் நிரம்பியிருக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது.
    • அந்த பகுதிக்கு நேரில் சென்று ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் அந்தியூர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மழை பெய்து வெயிலின் தாக்க த்தை குறைத்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

    குறிப்பாக அந்தியூர், தவிட்டுப்பாளையம், பூக்கடை கார்னர் பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி நின்றும் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது.

    இது குறித்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.விடம் அந்தப் பகுதி மக்கள் தொலைபேசி மூலம் கூறினர். இதையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்று ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    இதையடுத்து எம்.எல்.ஏ. அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், துப்புரவு ஆய்வாளர் குண சேகரன், மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சிவலிங்கம் ஆகியோரை சம்பவ இடத்துக்கு வர வழைத்து சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்

    மேலும் தூய்மை பணி யாளர்கள் மூலம் மழை நீர் வடிகாலில் உள்ள அடை ப்புகளை சரி செய்து மழை நீர் வடிகாலில் செல்லும் வகையில் சரி செய்யப் பட்டது.

    குறுகலாக இருப்பதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் மழை நீர் வரும்போது அடைப்பு ஏற்பட்டு மழை நீர்ஆனது சாலையிலே தேங்கிநிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த மழைநீர் வடிகால் அங்கு அகலம் படுத்தும் படி அதி காரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். அதனை சரி செய்வதாக அந்த பகுதி மக்களிடம் எடுத்து கூறி தண்ணீரை சரி செய்த பின்னரே அந்த இடத்தில் இருந்து எம்.எல்.ஏ. சென்றார்.

    அப்போது அந்தப் பகுதி சேர்ந்த முத்து, நேரு, ஜிவா, செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

    • தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது
    • உடைந்த கானாற்றின் சுவற்றை சீரமைக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூரில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    வேலூர் தோட்டப்பாளையத்தில் செல்லும் கானாறு தூர் வாராததால் மழை நீருடன் கழிவு நீர் கழிவு நீர் நிரம்பி வெளியேறியது. அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. சேறும் சகதியுமாக கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.

    மேலும் சாலை முழுவதும் மழை நீருடன் குப்பைகள் தேங்கி சேறும் சகதியமாக மாறியது. பொதுமக்கள் சாலையில் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    கானாறை தூர்வாரி உடைந்துள்ள கானாற்றின் சுவற்றை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×