என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதமலை மலைப்பாதையில் சாலை பணி தீவிரம்
    X

    மருதமலை மலைப்பாதையில் சாலை பணி தீவிரம்

    • 10-ந் தேதிக்கு பிறகு வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை
    • கந்த சஷ்டி விழா 13-ந் தேதி நடப்பதால் அதிகாரிகள் மும்முரம்

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு என அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    முக்கிய விழா நாட்கள், விஷேச தினங்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    மலைக்கோவில் பகுதியில் கடந்த 5-ந் தேதி லிப்ட் அமைப்பது, தார்சாலை அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கியது.

    இதன் காரணமாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கோவிலுக்கு செல்பவர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்க சென்று வருகின்றனர்.

    தற்போது இந்த பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. மலைப்பாதையில் 2.27 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் பணி நடந்துள்ளது. மீதி 300 மீட்டர் தூரம் வரையிலான சாலை அமைக்கும் பணி மட்டுமே உள்ளது. அந்த பணியும் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வருகிற 13-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இந்த விழாவில் கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கந்த சஷ்டி விழா தொடங்குவதற்குள், மருத மலை மலைப்பாதையில் நடந்து வரும் பணிகள் அனைத்தும் முடிந்து, வருகிற 10-ந் தேதிக்குள், வாகனங்கள் மீண்டும் மலைப்பாதையில் இயக்கப்படலாம் என தெரிகிறது.

    இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலைபணி கள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×