search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கண்டுகொள்ளப்படாத சாலை
    X

    பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கண்டுகொள்ளப்படாத சாலை

    • பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கம்பன் நினைவிட சாலையை சரிசெய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
    • தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் நினைவிடம் செல்லும் சாலை பல ஆண் டுகளாய் குண்டும், குழியு மாய் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிய டைந்து வருகின்றனர். நாட் டரசன் கோட்டையிலிருந்து கருதுப்பட்டி, கண்டனிப் பட்டி வழியே காளையார் கோவில் செல்லும் சாலை உள்ளது.

    நாட்டரசன்கோட்டையி லிருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கி.மீ. தூரம் செல்லும் இந்த சாலை பின்னர் தொண்டி தேசிய நெடுஞ்சாலையுடன் இணை கிறது. நாட்டரசன்கோட்டை வழியே காளையார்கோவில் செல்லும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகின்றனர். 4 கி.மீ. தூரமுள்ள இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

    மண் சாலையாக இருந்து முதன்முறையாக தார்ச்சா லையாக மாற்றப்பட்ட பின் னர் எவ்வித பராமரிப் பும் செய்யாமல் விடப்பட்டுள் ளது. நாட்டரசன்கோட்டை யிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள கம்பன் நினைவிடத்திற்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். கம்பன் நினைவிடத்திற்கு சிறிது தூரம் முன்புவரை நாட்டர சன்கோட்டை பேரூராட்சி சாலையாகவும், எஞ்சிய 3 கி.மீ. தூரம் காளையார் கோவில் யூனியன் சாலையா கவும் உள்ளது.

    இதில் பேரூராட்சி எல் லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் புதிய சாலை அமைக்கப்பட்டது. எஞ்சிய 3 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலை அமைக்க காளையார் கோவில் யூனியன் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக் காததால் சாலை, போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலை யில் உள்ளது.

    மதுரை, தொண்டி சாலையில் செல்லும் சுற்று லாப்பயணிகள் நாட்டரசன் கோட்டை ஊருக்குள் வந்து கண்ணுடையநாயகி அம்மன் கோவில், கம்பன் நினைவி டம் சென்று மீண்டும் மதுரை, தொண்டி சாலை யில் இணைந்து கொள்ளும் வகையில் உள்வட்ட சாலை யாக இருந்தது. பல ஆண்டு களாய் சாலை பழுதால் தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட் டுள்ளது.

    இதுகுறித்து கிராம மக் கள் கூறுகையில், பிரதான சுற்றுலாத்தலமான கம்பன் நினைவிட சாலை பழுத டைந்து சுமார் 10 ஆண்டுக ளுக்கும் மேல் ஆகிவிட்டது. கடந்த 2013-ம் ஆண்டு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு இச்சாலையை பார்வையிட் டது. சாலை பழுது குறித்து பல்வேறு புகார்கள் அனுப்பி யும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக புதிய சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×