search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukottai"

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனியில் இரவு நேரங்களில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    மேலும் நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
    அரியலூர்:

    கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
    சிவகங்கை:

    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #GajaStorm
    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
     
    இந்நிலையில் கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    புதுக்கோட்டை மற்றும் விராலிமலையில் இன்று திமுக மற்றும் அதிமுக போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DMK #ADMK
    புதுக்கோட்டை:

    அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிரட்டல் விடுத்ததாக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று விராலிமலையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் திமுகவின் போராட்டத்திற்கு எதிராக அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இரண்டு கட்சிகள் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் போராட்டம் நடத்துவதற்கு இரு தரப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. #DMK #ADMK
    மாணவர்கள் படித்து முடித்தவுடன் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
    புதுக்கோட்டை:

    தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாணவ தொழில் முனைவு விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு தொழில்நெறி பயிற்சி கையேட்டினை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்களிடையே சுய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்து படிப்பு முடித்தவுடன், சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.

    மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சிகள், கருத்தரங்குகள், ஆலோசனைகள், நிகழ்வுகள், ஆராய்ச்சி மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் படித்து முடித்தவுடன் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும். இவ்வாறு தொழில் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும். மேலும் சுய தொழில் மட்டுமல்லாமல் தங்களது குடும்பம் சார்ந்த தொழில்களையும் மேற்கொள்ளலாம்.

    தமிழக அரசு சுய தொழில் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பயிற்சியுடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் பல்வேறு பிரிவினர்களுக்கு மானிய விலையில் கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த முகாமில் கலந்து கொண்டு உள்ள மாணவ, மாணவிகள் முகாமின் மூலம் சுய தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை அறிந்து படித்து முடித்தவுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் ஓய்வுபெற்ற தமிழக அரசு கூடுதல் செயலாளர் டேனியல் பிரேம்நாத், மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி, தொழில் மைய மாவட்ட மேலாளர் இளங்கோவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜசேகர், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள உடற்பயிற்சி கருவிகளில் உடற்பயிற்சிகள் செய்தார். இதில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கல்வி நிதியில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்விக் அதிகாரி வனஜா, மாவட்ட கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவப்பூரில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசினார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. மழை நீரால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.இதன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டதோடு, பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நேற்று மாலை 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்லும் முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த மழை குளிர்ச் சியை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே செந்துறை பகுதியில் நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தன. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே பருவ மழை காலத்திற்கு முன்பாக நீர்வரத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் மரங்கள் முறிந்து சாலையில் கிடப்பதை படத்தில் காணலாம்

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் போதிய அளவு மழை பெய்யாததால் அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால் ஆழ் குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை கறம்பக்குடி பகுதியில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் வயல் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழை மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கரூர் மாவட்டத்தில் கரூர் தாந்தோணி மலை, சுங்கவாயில், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் குளித்தலை பகுதியில் மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை லேசான தூரலுடன் மழை பெய்தது.#tamilnews
    புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை தொண்டைமான் நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பள்ளி கோடை விடுமுறைக்காக அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார்.

    நேற்று மாலை அந்த சிறுமி தனது பாட்டி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாண்டியன் (வயது 40) என்பவர் அந்த சிறுமி அருகே வந்து பேசியுள்ளார்.

    பின்னர் நுங்கு வாங்கி தருவதாக கூறி அந்த சிறுமியை ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரின் பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமி வலி தாங்காமல் தனது பாட்டியில் கூறி அழுதுள்ளார்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அவரது பாட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தார். இதுபோன்று சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை தரும் காமுகர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×