search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியலூர்"

    • மிகக்குறைந்த எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி அரசு டாக்டா்கள் சாதனை
    • அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மிகக்குறைந்த எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி அரசு டாக்டா்கள் சாதனை படைத்துள்ளனர்.


    அரியலூர் ,தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம், அங்கனூரை சேர்ந்த ஆனந்தின்(வயது 25) மனைவி சத்தீஸ்வரி. 7 மாத கர்ப்பமாக இருந்த சத்தீஸ்வரிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து குழந்தையையும், தாயையும் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் ஆலோசனைப்படி டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழந்தைகள் நல மருத்துவ குழுவினர் மற்றும் நர்சுகள் சத்தீஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 750 கிராம் எடையில் மட்டுமே இருந்தது. இதனையடுத்து இங்குபேட்டரில் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரலாற்றிலேயே மிகக்குறைந்த எடையிலான குழந்தை இதுவே என்றும், அதனை காப்பற்றியது சாதனை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர், டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.





    • அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 479 அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துளாரங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்


    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 479 அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செந்துறை அடுத்த குழுமூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாகத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். இதே போல் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துளாரங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.ராமலிங்கம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட மாவட்ட மேலாளர் கே.கவிதா , வட்டாட்சியர் துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், முருகன், வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட ஒன்றியத்துக்குள் உள்பட்ட அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தினை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர். ஆக மாவட்டத்தில் 479 அரசுப் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.




    • அரியலூர் வந்த சாதனை மாணவிக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
    • ஆசிய சதுரங்க போட்டி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அன்புரோஜா. குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இளையமகள் சர்வாணிகா (வயது 7). இவர் அப்பகுதியில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சர்வாணிகா, செஸ் போட்டியில் ஆர்வம் அதிகம் கொண்டதால் பெற்றோர் அவருக்கு உரிய பயிற்சியினை அளித்தனர். ஒன்றிய அளவிலான மண்டல அளவிலான, மாவட்ட அளவிலான போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட சர்வாணிகா வெற்றி பெற்ற சாதித்து உள்ளார்.

    இந்நிலையில் இலங்கையில் கடந்த 3-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற 16-வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சர்வாணிகா 3 பிரிவுகளிலும் வெற்றி பெற்று சா தனை படைத்துள்ளார். 7 வயதுக்குட்பட்டோருக்கான முதல் பரிவில் நடைபெற்ற 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாம் பிரிவல் நடைபெற்ற 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து நடைபெற்ற மூன்றாம் பிரிவில் 9 சுற்றுகளில் வெற்றி பெற்றார்.இதன் மூலம் 3 பிரிவுகளில் நடைபெற்ற 23 ஆட்டங்களிலும் வெற்றியை பெற்று, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 3 பிரிவுகளிலும் த ங்க பதக்கங்கள் மற்றும் அணிக்கான பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 தங்கப்பதக்கங்களையும், 3 கோப்பைகள் மற்றும் அணிக்கான கோப்பைகள் உட்பட மொத்தம் 5 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே உள்ளிட்ட பல வெளிநாட்டு அதிபர்களும் பாராட்டியுள்ளனர். அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து,நேற்று மாலை உடையார்பாளையத்திற்கு சர்வாணிகா வருகை தந்தார். அவரை ஊர் பொதுமக்கள் மின் விளக்குகள் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி வைத்து மேளதாளங்கள் முழங்க வீட்டிற்கு அழைத்து சென்றனர். 

    வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.
    அரியலூர்

    அரியலூர் அருகே உள்ள மண்டையன்குறிச்சியை சேர்ந்த சுந்தரராசு மனைவி வேம்பு(வயது 25). இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வேம்புவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் வேம்பு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். 

    இந்த வழக்கு சம்பந்தமாக பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா உசேன்நகரம் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி மற்றும் சுதாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையும் மீட்கப்பட்டது.
    ×