search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    479 அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
    X

    479 அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

    • அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 479 அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துளாரங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்


    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 479 அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செந்துறை அடுத்த குழுமூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாகத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். இதே போல் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துளாரங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.ராமலிங்கம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட மாவட்ட மேலாளர் கே.கவிதா , வட்டாட்சியர் துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், முருகன், வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட ஒன்றியத்துக்குள் உள்பட்ட அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தினை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர். ஆக மாவட்டத்தில் 479 அரசுப் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.




    Next Story
    ×