search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandhi park"

    • வவ்வால்களின் எச்சம் மூலம் வைரஸ், பாக்டீரியா கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.
    • கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகரத்தில் வ.உ.சி. பூங்காவிற்கு அடுத்தபடியாக, காந்தி பூங்கா மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது.

    இது தற்போது புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. எனவே பூங்காவிற்கு வரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக சலீவன் வீதி, தெலுங்கு வீதி ,ம.ந.க.வீதி உப்பார வீதி , ஆர். எஸ் புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் நடைபயிற்சிக்கு வந்து செல்கின்றனர். எனவே அங்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும்.

    இந்த நிலையில் காந்தி பூங்கா பகுதியில் உள்ள அனைத்து மரங்களிலும் வவ்வால்கள் தஞ்சம் அடைந்து உள்ளன. அவற்றின் கீச்சு குரல்கள் எந்த நேரமும் ஒலித்து கொண்டு உள்ளன. இது அமைதியை தேடி பூங்காவுக்கு வரும் மக்களிடம் ஒரு சிலநேரங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

    இதுகுறித்து நடைபயிற்சிக்கு வந்திருந்த பெண்கள் சிலர் கூறுகையில், தினந்தோறும் நடைபயிற்சிக்கு வரும் எங்களுக்கு காந்தி பூங்கா ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இங்கு ஏராளமானோர் தினமும் வந்திருந்து இளைப்பாறி விட்டு செல்வர்.

    இந்த நிலையில் காந்தி பூங்கா மரங்களில் சமீப காலமாக வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் தஞ்சம் புகுந்து உள்ளன. அவற்றின் இரைச்சல் எந்த நேரம் கேட்டுக் கொண்டு உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது.

    பொதுவாக வவ்வால்கள் வீட்டிற்குள் வந்தால் அபசகுணம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் ஊருக்கு பொதுவான பூங்காவில் அந்த வவ்வால்களை பார்க்கும்போது மனதிற்குள் இனம்புரியாத ஒரு பதட்டம், பயம் ஏற்படுகிறது.

    மேலும் வவ்வால்கள் போடும் எச்சங்கள், ஒருசில வைரஸ் கிருமியை பரப்பும் சக்தி உடையவை. அவற்றை குழந்தைகள் மிதிக்க வேண்டி உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    வவ்வால்களின் எச்சம் மூலம் மிகக் குறைந்த அளவு வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள் பரவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே அவற்றில் இருந்து பொதுமக்கள் விலகி நிற்பது நல்லது என்று கால்நடை வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.எனவே காந்தி பூங்கா பகுதியில் இருந்து வவ்வால்களை அப்புறப்படுத்தினால் அனைவரும் பயம், தயக்கம் இன்றி நிம்மதியாக இளைப்பாறலாம். எனவே கோவை மாநகராட்சி இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள உடற்பயிற்சி கருவிகளில் உடற்பயிற்சிகள் செய்தார். இதில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கல்வி நிதியில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்விக் அதிகாரி வனஜா, மாவட்ட கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவப்பூரில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசினார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    ×