search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான பாண்டியன்
    X
    கைதான பாண்டியன்

    பாட்டி வீட்டிற்கு சென்ற 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை - வாலிபர் கைது

    புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை தொண்டைமான் நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பள்ளி கோடை விடுமுறைக்காக அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார்.

    நேற்று மாலை அந்த சிறுமி தனது பாட்டி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாண்டியன் (வயது 40) என்பவர் அந்த சிறுமி அருகே வந்து பேசியுள்ளார்.

    பின்னர் நுங்கு வாங்கி தருவதாக கூறி அந்த சிறுமியை ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரின் பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமி வலி தாங்காமல் தனது பாட்டியில் கூறி அழுதுள்ளார்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அவரது பாட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தார். இதுபோன்று சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை தரும் காமுகர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×