search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priest"

    பல்லடம் அருகே கோவிலுக்குள் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட பூசாரியை பக்தர்கள் சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற காரணபெருமாள் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக சேரன் நகரை சேர்ந்த வாசுதேவன் (வயது 35) இருந்தார். நேற்று காலை 9 வயது மகளுடன் ஒரு பெண் சாமி கும்பிட வந்தார். கோவிலுக்குள் சிறுமியை விட்டு விட்டு சாமிக்கு பூ வாங்க சென்றார்.

    அப்போது பூசாரி வாசுதேவன் சிறுமியின் கையை பிடித்து இழுத்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பூ வாங்கிக்கொண்டு வந்த தாய் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பூசாரியை திட்டிவிட்டு மகளை வெளியே அழுதுகொண்டே அழைத்து வந்தார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது கோவிலுக்குள் நடந்தவற்றை அவர் கூறினார். ஆத்திரமடைந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று பூசாரிக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவந்தது.

    பின்னர் கோவில் பொறுப்பாளர் சிவசாமி சம்பவ இடத்திற்கு வந்து பூசாரியிடம் இருந்து சாவியை வாங்கிக்கொண்டு பூசாரி வாசுதேவனை வெளியேற்றினார். பின்னர் கோவிலை பூட்டி சாவியை எடுத்துச்சென்று விட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    தக்கலையில் பரிகார பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவியை கடத்தி 2-வது திருமணம் செய்த பூசாரி, போலீசார் தேடி வருவதை அறிந்து சரணடைந்தார்.
    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    அவரது தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. டாக்டர்களிடம் சென்று சிகிச்சை அளித்தபோதும் அவர் குணமடையவில்லை.

    இதற்கிடையில் உறவினர்கள் சிலர் கோவில்களுக்கு அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்தால் மாணவியின் உடல்நலம் சீராகும் என்று கூறினர். இதனால் அவரது தந்தை பல கோவில்களுக்கும் அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்து வந்தார். அவர்கள் வீடு அருகே உள்ள ஒரு கோவிலுக்கும் மாணவியை அடிக்கடி பரிகார பூஜைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி தனது வீட்டில் இருந்த மாணவி திடீரென்று மாயமாகிவிட்டார். வீட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மாயமானது பற்றி கொற்றிக்கோடு போலீசில் தந்தை புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி கூறியிருந்தார்.

    போலீசாரும் மாயமான மாணவி பற்றி தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்போது அந்த மாணவியை அவரது வீடு அருகே உள்ள கோவிலில் பூஜைகள் செய்யும் பூசாரியே கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் பூசாரியும், மாணவியும் போலீசில் நேற்று மாலை தஞ்சம் அடைந்தனர்.

    அந்த பூசாரியும் தானும் 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும், தனது படிப்பு முடியும் நிலையில் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் பூசாரியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு சித்திரங்கோடு பகுதியில் வசித்து வந்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.

    பூசாரியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளதும், மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அது பற்றி மாணவியிடம் போலீசார் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்கள். மேலும் அவர்களின் பெற்றோரையும் போலீஸ் நிலையம் வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் பூசாரியுடன்தான் வாழ்வேன் என்று மாணவி பிடிவாதமாக கூறிவிட்டார். பெற்றோர் அவரை தங்களுடன் வரும்படி கண்ணீருடன் கேட்டுக்கொண்ட போதும் மாணவி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவர் மேஜர் என்பதால் அவரை பூசாரியுடன் போலீசார் அனுப்பிவைத்தனர். முறைப்படி திருமணம் செய்து கொண்டு அதை பதிவு செய்து தங்களிடம் காட்ட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
    பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை விடுதலை செய்யாவிட்டால், துருக்கி மீதான நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். #USTurkeyClash
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்து உள்ளது.

    ஆனால் அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கி ஏற்க மறுத்து விட்டது.

    இதன் காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின்மீது 2 மடங்கு வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது. ஆனாலும் துருக்கி தளர்ந்துபோகாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு சற்று உயர்ந்து உள்ளது.


    இந்த நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை விடுதலை செய்யாவிட்டால், துருக்கி மீதான நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “பல்லாண்டு காலம் அமெரிக்கா மூலம் துருக்கி பலன் அடைந்து உள்ளது. பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் தேசப்பற்றாளர். அந்த அப்பாவி மனிதரை விடுதலை செய்வதற்காக நாங்கள் எதுவும் தர மாட்டோம். ஆனால் நாங்கள் துருக்கி மீது மீண்டும் நடவடிக்கை எடுப்போம்” என கூறி உள்ளார். எனவே துருக்கியில் இருந்து இறக்குமதி செய்கிற மேலும் பல பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.  #USTurkeyClash
    கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கேட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 பாதிரியார்கள் இன்று சரணடைந்தனர். #Kerala #PriestRapeCase
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொள்ளம் பகுதியில் தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த தவறு குறித்து பாவ மன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை, அவர் கூறிய தகவலை வைத்துக் கொண்டு அந்த பாதிரியார் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த தகவலை இன்னும் சில பாதிரியார்களுக்கும் பகிர்ந்து அவர்களும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் அவரது கணவரின் மூலமாக வெளிவந்ததை அடுத்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற கேரளாவின் சில பாதிரியார்கள் முயற்சி செய்த தகவலும் அம்பலமானது.

    இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து 4 பாதிரியார்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர் ஜாப் மேத்யூ, ஜான்சன் மேத்யூ ஆகிய இரண்டு பாதிரியார்களும் தாமாக முன்வந்து சரணடைந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு ஜாமின் அளிக்கப்பட்டது.

    இதேபோல், தலைமறைவாக இருந்த 2 பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் மற்றும் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோர் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களின் மனு நிராகரிக்கப்படவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    அந்த மனுவை விசாரித்த அமர்வு, அவர்களின் மனுவை நிராகரித்து சரணடையும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் திருவல்லா நீதிமன்றத்தின் முன்பும், பாதிரியார் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் போலீசாரிடமும் சரணடைந்தனர்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இருவரும் சரணடைந்ததால், விரைவில் இவர்கள் ஜாமினில் வெளிவருவார்கள் என தெரிகிறது. #Kerala #PriestRapeCase
    கேரளாவில் பாதிரியாரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் அளித்த கன்னியாஸ்திரியை மிரட்டி புகாரை வாபஸ் பெறும்படி வற்புறுத்திய தலைமை பாதிரியாரிடம் விசாரிக்க கேரள போலீசார் விரைந்துள்ளனர். #Kerala #NunSexualAssaultCase
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாதிரியாரால் கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து போலீசார் இந்த புகாரின் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.

    இதையடுத்து இந்த புகார் மீதான விசாரணை கேரள போலீசாரால் முடுக்கி விடப்பட்டது. இந்த புகாருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தனிப்பட்ட பகையை மனதில்கொண்டு கன்னியாஸ்திரி பெண் இந்த புகாரை அளித்துள்ளதாகவும் அந்த பாதிரியார் தரப்பில் கூறப்படுகிறது.

    சமீபத்தில் அந்த கன்னியாஸ்திரிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஜலந்தர் பகுதியின் தலைமை பாதிரியார் ஜேம்ஸ் எர்தைல், புகாரை வாபஸ் பெருமாறு மிரட்டியுள்ளார். மேலும், தனது பேச்சைக் கேட்டு புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டால், 10 ஏக்கர் நிலமும், தனி மடம் ஒன்றும் அமைத்து தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த கன்னியாஸ்திரி, பாதிரியாரின் செல்போன் உரையாடலைக் கொண்டு அவர்மீதும் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக தலைமை பாதிரியார் ஜேம்ஸ் எர்தலிடம் விசாரணை நடத்துவதற்காக டி.எஸ்.பி சுபாஷ் தலைமையிலான தனிப்படை ஜலந்தர் பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டள்ளனர். #Kerala #NunSexualAssaultCase
    கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கோரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் மூன்றாவது பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கணவருக்கு தெரியாமல் செய்த தவறுக்கு மனம் வருந்தி பாவ மன்னிப்பு கேட்பதற்காக கோட்டயம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பாவமன்னிப்பு கேட்பதற்காக நடந்தவற்றை கூற, அதனை பதிவு செய்த பாதிரியார், அதனை வைத்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

    அவர் மட்டுமன்றி, இன்னும் 4 பாதிரியார்களும் இதேபோன்று அந்த பெண்ணை பயன்படுத்தியுள்ளனர். அவரது கணவர் மூலம் வெளியான இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து, கேரள குற்றப்பிரிவு போலீசார் 4 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில் 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜான்சன் மேத்யூ எனும் பாதிரியார் பதனம்திட்டா மாவட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, பாதிரியார்களின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  #Kerala
    கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண் கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக பாதிரியார்களை கைது செய்ய போலீசார் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்பு பாதிரியார் ஒரு வரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணமும் நடைபெற்றது. தன்னை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்ததை பாவமன்னிப்பு அறிக்கை செய்ய அந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று பாதிரியாரிடம் நடந் தவைகளை கூறி பாவமன்னிப்பு கேட்டார்.

    ஆனால் அதை வைத்தே அந்த பெண்ணை மிரட்டி அந்த ஆலயத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் ஜோசப் மேத்யூ, ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி.மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகிய 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இது பற்றி அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததும் அவர் அது பற்றி வாட்ஸ்-அப்பில் தகவல் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து அந்த 4 பாதிரியார்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். தங்கள் மீதான புகாரை மறுத்த பாதிரியார்கள் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

    முதலில் ஜோசப் மேத்யூ, ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகியோரும் அதைத் தொடர்ந்து ஜாண்சன் வி.மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை கோர்ட்டு வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    இதற்கிடையில் பாதிரியார்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி பாதிக்கப்பட்ட பெண் திருவல்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலமும் அளித்தார். இதனால் இந்த விவகாரம் சூடு பிடித்தது.

    அடுத்த கட்டமாக பாதிரியார்கள் 4 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கூறியதாவது:-

    இளம்பெண்ணை 4 பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். ஆதாரங்கள் கிடைத்த பிறகு தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக போலீசார் கைது நடவடிக்கையை தாமதபடுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது. இந்த சம்பவம் நடந்து 9 வருடங்கள் ஆகிவிட்டதால் ஆதாரங்களை சேகரிக்க போலீசாருக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார். #tamilnews
    கேரளாவில் பாலியல் பலத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பாதிரியார் ஒருவர் தன்மீதான புகாரை மறுத்து உள்ளார். #KeralaPriests
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு அறிக்கை செய்வதற்காக சென்றார். திருமணத்திற்கு முன்பு தன்னை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அது பற்றி தனது கணவருக்கு தெரியாது என்று கூறி அவர் அங்குள்ள பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டார்.

    அந்த பாதிரியார் இந்த வி‌ஷயத்தை பெண்ணின் கணவரிடம் கூறிவிடுவதாக மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியோவாக எடுத்து மேலும் 4 பாதிரியார்களுக்கு அவர் அனுப்பியதால் அந்த பாதிரியார்களும் பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினர்.

    தனது மனைவிக்கு நடந்த இந்த கொடுமையை அறிந்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆலய நிர்வாகிகளிடம் அவர் புகார் செய்ததால் 5 பாதிரியார்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பாதிரியார் ஒருவர் தன்மீதான புகாரை மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அவர் நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்தவர் என்ற முறையில் எனக்கு அவரை தெரியும். நான் பணிபுரியும் ஆலயத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் எதிர்தரப்பினர் என்மீது பாலியல் குற்றம் சுமத்தி என்னை மிரட்டுகிறார்கள். நான் அந்த பெண்ணை எனது செல்போனில் ஆபாச படம் எடுத்திருந்தால் எனது செல்போனை சோதனை செய்து அதை கண்டுபிடிக்கலாம் என்றார்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறும்போது நான் யாரையும் மிரட்டுவதற்காக புகார் செய்யவில்லை. எனது மனைவிக்கு நடந்த கொடுமை தெரியவந்ததும், நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே புகார் செய்தேன். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இதில் உண்மை தெரியவரும். #tamilnews
    கேரளா அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண்ணுக்கு 5 பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KeralaPriests
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்.

    திருவல்லா பகுதியை சேர்ந்த ஒரு பெண் இந்த ஆலயத்திற்கு வந்து ஒரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு அறிக்கை செய்தார். தான் இப்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் வசித்து வருவதாகவும், திருமணத்திற்கு முன்பு தனக்கு ஒரு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தாகவும் கூறி அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

    இந்த பாவ அறிக்கையை ரகசியமாக வைக்க வேண்டிய அந்த பாதிரியார் அதை வைத்தே அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அவர் மேலும் 4 பாதிரியார்களிடம் கூறி உள்ளார். அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சியையும் ரகசியமாக படம்பிடித்து அதையும் மற்ற பாதிரியார்களுக்கு அனுப்பினார். இதனால் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

    பாதிரியார்கள் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தனது கணவரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஆலயத்திற்கு சென்று நிர்வாகத்தினரிடம் தனது மனைவிக்கு 5 பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி புகார் செய்தார்.

    மேலும் இதுபற்றிய விவரங்களை ஆடியோவாக பதிவு செய்த கணவர் அதை வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டார். உருக்கமாக பேசியிருந்த அவரது ஆடியோ பலருக்கும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆலய நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து 5 பாதிரியார்களையும் சஸ்பெண்டு செய்துள்ளது.

    அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் அவர்கள் மீது முறைப்படி போலீசில் புகார் செய்யப்படும் என்றும் ஆலய நிர்வாகம் அறிவித்து உள்ளது. #KeralaPriests
    கோவிலில் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் பறிக்கும் செயலில் பூசாரிகள் ஈடுபடக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. #MaduraiHighCourt
    மதுரை:

    ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.250, ரூ.150, ரூ.100 கட்டண தரிசன முறை அமலில் உள்ளது. இந்த கட்டண டிக்கெட் வாங்கும் பக்தர்கள் சாமியை அருகில் நின்று தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

    கோவிலுக்கு சம்பந்தமே இல்லாத பலர் கோவில் முன்பகுதியில் நின்று கொண்டு பக்தர்களை சாமி அருகே அழைத்துச் சென்று தரிசிக்க வைப்பதாக கூறி டிக்கெட் வாங்காமல் கோவிலுக்குள் அழைத்து செல்கின்றனர்.

    அதே நேரத்தில் டிக்கெட்டுக்கு உரிய கட்டணத்தை வசூலித்துக்கொள்கின்றனர். இப்பணத்தை கோவில் நிர்வாகத்திடம் செலுத்துவதில்லை.

    இவ்வாறு கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த தனி குழு அமைக்கவும், கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள், பக்தர்களிடம் பணம் வசூலிக்க தடை விதித்தும், கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும், கோவிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் எம்.வி. முரளிதரன், டி. கிருஷ்ணவள்ளி ஆகியோர் ஏற்கனவே விசாரித்து தீர்ப்பினை ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் இன்று பிறப்பித்து உள்ளனர்.

    கோவிலில் சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட பூசாரிகளால் மட்டுமே பூஜைகள் செய்யப்படுகின்றன என்பதை இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலர் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பக்தர்களையும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி ஒரே விதமாக நடத்த வேண்டும்.

    கோவில் ஊழியர்கள் மற்றும் பூசாரிகள் வருகைக்காக பயோமெட்ரிக் பதிவு கருவியை பொருத்த வேண்டும். பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் பூசாரிகள் ஈடுபடக்கூடாது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை கமி‌ஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    சட்டபூர்வமாக நியமிக்கப்படாத பூசாரிகள் குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் மற்றும் கோவில் அதிகாரி ஆகியோர் வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர். #MaduraiHighCourt
    தூத்துக்குடியில் 13 பேர் மரணத்திற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நடத்த விடமாட்டோம் என காயம் அடைந்த பாதிரியார் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூட்டப்புளியைச் சேர்ந்த பாதிரியார் லியோ ஜெயசீலன் (வயது 70) என்பவர் காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களோடு கலந்து கொண்டு அந்த ஆலைக்கு எதிராக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டேன். மில்லர்புரம் பகுதியில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மக்களோடு நடந்து சென்றேன்.

    கலெக்டர் அலுவலகத்தில் சென்றபோது போலீசார் தடியடி நடத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டனர். இது மிகவும் துயரமானது. நான் துப்பாக்கியால் சுடப்பட்ட போது, மக்கள் நன்மைக்காக போராடுகிறோம். இப்படி துப்பாக்கியால் சுடுகிறார்களே! என்று வேதனை அடைந்தேன். காயம் அடைந்த என்னை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த ஸ்டெர்லைட் ஆலை மக்களை விட்டு அகன்று செல்ல வேண்டும். ஆலை மூடப்பட வேண்டும். இந்த அரசு தங்களின் பதவிகளை தக்க வைப்பதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரசு ஆதரவு இருப்பதால், இந்த ஆலையை நடத்தியே தீருவேன் என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். விவசாயத்தை அழித்து, 13 பேர் சாவுக்கு காரணமான இந்த ஆலையை நாங்கள் நடத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×