என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாவமன்னிப்பு கேட்ட பெண் பலாத்காரம்: என்னை மிரட்டுவதற்காக பொய் புகார்- பாதிரியார்
Byமாலை மலர்2 July 2018 9:22 AM GMT (Updated: 2 July 2018 9:22 AM GMT)
கேரளாவில் பாலியல் பலத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பாதிரியார் ஒருவர் தன்மீதான புகாரை மறுத்து உள்ளார். #KeralaPriests
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு அறிக்கை செய்வதற்காக சென்றார். திருமணத்திற்கு முன்பு தன்னை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அது பற்றி தனது கணவருக்கு தெரியாது என்று கூறி அவர் அங்குள்ள பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டார்.
அந்த பாதிரியார் இந்த விஷயத்தை பெண்ணின் கணவரிடம் கூறிவிடுவதாக மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியோவாக எடுத்து மேலும் 4 பாதிரியார்களுக்கு அவர் அனுப்பியதால் அந்த பாதிரியார்களும் பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினர்.
தனது மனைவிக்கு நடந்த இந்த கொடுமையை அறிந்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆலய நிர்வாகிகளிடம் அவர் புகார் செய்ததால் 5 பாதிரியார்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பாதிரியார் ஒருவர் தன்மீதான புகாரை மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அவர் நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்தவர் என்ற முறையில் எனக்கு அவரை தெரியும். நான் பணிபுரியும் ஆலயத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் எதிர்தரப்பினர் என்மீது பாலியல் குற்றம் சுமத்தி என்னை மிரட்டுகிறார்கள். நான் அந்த பெண்ணை எனது செல்போனில் ஆபாச படம் எடுத்திருந்தால் எனது செல்போனை சோதனை செய்து அதை கண்டுபிடிக்கலாம் என்றார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறும்போது நான் யாரையும் மிரட்டுவதற்காக புகார் செய்யவில்லை. எனது மனைவிக்கு நடந்த கொடுமை தெரியவந்ததும், நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே புகார் செய்தேன். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இதில் உண்மை தெரியவரும். #tamilnews
கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு அறிக்கை செய்வதற்காக சென்றார். திருமணத்திற்கு முன்பு தன்னை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அது பற்றி தனது கணவருக்கு தெரியாது என்று கூறி அவர் அங்குள்ள பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டார்.
அந்த பாதிரியார் இந்த விஷயத்தை பெண்ணின் கணவரிடம் கூறிவிடுவதாக மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியோவாக எடுத்து மேலும் 4 பாதிரியார்களுக்கு அவர் அனுப்பியதால் அந்த பாதிரியார்களும் பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினர்.
தனது மனைவிக்கு நடந்த இந்த கொடுமையை அறிந்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆலய நிர்வாகிகளிடம் அவர் புகார் செய்ததால் 5 பாதிரியார்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பாதிரியார் ஒருவர் தன்மீதான புகாரை மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அவர் நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்தவர் என்ற முறையில் எனக்கு அவரை தெரியும். நான் பணிபுரியும் ஆலயத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் எதிர்தரப்பினர் என்மீது பாலியல் குற்றம் சுமத்தி என்னை மிரட்டுகிறார்கள். நான் அந்த பெண்ணை எனது செல்போனில் ஆபாச படம் எடுத்திருந்தால் எனது செல்போனை சோதனை செய்து அதை கண்டுபிடிக்கலாம் என்றார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறும்போது நான் யாரையும் மிரட்டுவதற்காக புகார் செய்யவில்லை. எனது மனைவிக்கு நடந்த கொடுமை தெரியவந்ததும், நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே புகார் செய்தேன். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இதில் உண்மை தெரியவரும். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X