என் மலர்
செய்திகள்

கோவிலுக்குள் சிறுமியிடம் சில்மிஷம் செய்த பூசாரி விரட்டியடிப்பு
பல்லடம் அருகே கோவிலுக்குள் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட பூசாரியை பக்தர்கள் சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற காரணபெருமாள் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக சேரன் நகரை சேர்ந்த வாசுதேவன் (வயது 35) இருந்தார். நேற்று காலை 9 வயது மகளுடன் ஒரு பெண் சாமி கும்பிட வந்தார். கோவிலுக்குள் சிறுமியை விட்டு விட்டு சாமிக்கு பூ வாங்க சென்றார்.
அப்போது பூசாரி வாசுதேவன் சிறுமியின் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பூ வாங்கிக்கொண்டு வந்த தாய் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பூசாரியை திட்டிவிட்டு மகளை வெளியே அழுதுகொண்டே அழைத்து வந்தார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது கோவிலுக்குள் நடந்தவற்றை அவர் கூறினார். ஆத்திரமடைந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று பூசாரிக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவந்தது.
பின்னர் கோவில் பொறுப்பாளர் சிவசாமி சம்பவ இடத்திற்கு வந்து பூசாரியிடம் இருந்து சாவியை வாங்கிக்கொண்டு பூசாரி வாசுதேவனை வெளியேற்றினார். பின்னர் கோவிலை பூட்டி சாவியை எடுத்துச்சென்று விட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற காரணபெருமாள் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக சேரன் நகரை சேர்ந்த வாசுதேவன் (வயது 35) இருந்தார். நேற்று காலை 9 வயது மகளுடன் ஒரு பெண் சாமி கும்பிட வந்தார். கோவிலுக்குள் சிறுமியை விட்டு விட்டு சாமிக்கு பூ வாங்க சென்றார்.
அப்போது பூசாரி வாசுதேவன் சிறுமியின் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பூ வாங்கிக்கொண்டு வந்த தாய் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பூசாரியை திட்டிவிட்டு மகளை வெளியே அழுதுகொண்டே அழைத்து வந்தார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது கோவிலுக்குள் நடந்தவற்றை அவர் கூறினார். ஆத்திரமடைந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று பூசாரிக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவந்தது.
பின்னர் கோவில் பொறுப்பாளர் சிவசாமி சம்பவ இடத்திற்கு வந்து பூசாரியிடம் இருந்து சாவியை வாங்கிக்கொண்டு பூசாரி வாசுதேவனை வெளியேற்றினார். பின்னர் கோவிலை பூட்டி சாவியை எடுத்துச்சென்று விட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Next Story