என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pregnant"
மதுரை:
மதுரை சமயநல்லூர் அருகிலுள்ள பொதும்பு காந்திஜி நகரைச் சேர்ந்தவர் முத்துமாரி மகன் சங்கையா (வயது19). இவர் சோழவந்தான் ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
அந்த பெண்ணின் பெற்றோர் சென்னையில் வசிக்கின்றனர். எனவே சோழவந்தானில் பாட்டி வீட்டில் அந்த பெண் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற சங்கையா அங்கு தனியாக இருந்த அவரை கற்பழித்தார். இதில் அந்த பெண் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குப்பதிவு செய்து சங்கையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள ஆலம்பாடியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (38). இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் அய்யாவு மகன் மூர்த்தி (24) என்பவர் நான் உங்களின் மகளை காதலிக்கிறேன். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டார். இதற்கு வெள்ளைச்சாமி மறுப்பு தெரிவித்து விட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை வலுத்தது.
அப்போது மூர்த்தி உருட்டுக்கட்டையால் வெள்ளைச்சாமி மற்றும் அவரது மனைவியை தாக்கினார். இதுதொடர்பாக வெள்ளைச்சாமி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வானன் (வயது 20), கூலித் தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை பலமுறை தமிழ்வாணன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து நடந்த விபரங்களை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.
இதனை கேட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனது மகளின் நிலைக்கு காரணமான காதலன் தமிழ்வாணனை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் தமிழ்வாணன் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழ்வாணனை கைது செய்தார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்க நடிகை மேகன் மர்கலை காதலித்தார். இவர்களது திருமணம் கடந்த மே மாதம் லண்டனில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கோலாகலமாக நடந்தது.
இந்த நிலையில் இளவரசர் ஹாரியின் மனைவி இளவரசி மேகன் மர்கல் கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 12 வாரம் கர்ப்பமாக இருப்பதாக கென்சிங்டன் அரண்மனை அலுவலகம் அறிவித்தது.
ஹாரி-மேகன் தம்பதியின் முதல் குழந்தை அடுத்த ஆண்டு (2019) வசந்த காலத்தில் பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஹாரி மேகன் தம்பதிக்கு பிறக்க போகும் குழந்தை இங்கிலாந்து அரச குடும்பத்தின் முடிசூட்டு வரிசையில் 7-வது இடத்தில் உள்ளது. #MeghanMarkle #Harry
சேதராப்பட்டு:
திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டை அடுத்த பஞ்சவடியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை புதுவையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். இதில் அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மாணவிக்கு 16 வயது தான் ஆகி இருந்தது. எனவே புதுவை குழந்தைகள் நல கமிட்டிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
மாணவி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி தலைவர் லட்சுமிபதிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை மேற்கொண்டார்.
அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியபோது தங்கள் பகுதியை சேர்ந்த ராம்கி (வயது 25) என்பவருடன் நெருங்கி பழகியதாகவும் அவர் தன்னை ஏமாற்றி கற்பழித்து விட்டதாகவும் கூறினார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராம்கி கைது செய்யப்பட்டு கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கீரிப்பாறை அருகே உள்ள மலைக்கிராம பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.
அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் குடும்ப விவரங்களை டாக்டர்கள் விசாரித்தனர்.
அப்போது அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற தகவல் தெரியவந்தது. திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆனதால் அந்த பெண் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சிகிச்சை பெற வந்ததும் தெரியவந்தது. அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் இதுபற்றி கீரிப்பாறை போலீசாருக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.
கீரிப்பாறை போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயதான 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறியதால் அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பிணியானார்.
8 மாதம் ஆனதால் இனி மேலும் அதனை மறைக்க முடியாது என்பதால் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த பெண் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய அந்த மாணவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில் அந்த இளம்பெண் மீதே நடவடிக்கை பாயும் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
வேலூர்:
குடியாத்தம் தாலுகா நல்லாகவணியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு 22 வயது இளம்பெண்ணை தூக்கிச்சென்று அங்குள்ள மலையடிவாரத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி தொடர்ந்து 5 மாதம் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்தபெண் கர்ப்பிணியானார். உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மோகனிடம் அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 28.8.2013 அன்று இளம்பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இறந்துள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய மோகனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும் ரூ.5 ஆயிரம் அபராதத்தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும், இந்த தொகை போதாது என்பதால் உரிய இழப்பீடு வழங்க வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
மதுரை விரகனூர் அருகே உள்ள கோழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி யாஸ்மின். இவர் கருவுற்றிருப்பதாக கூறி 8 மாதங்களாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாகவும், அதன்பின்னர் குழந்தை இல்லை என்று கூறியதாகவும் அவரது கணவர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வி இணை இயக்குனர்கள் பதில் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #HumanRightsCommission
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 20). டிப்ளமோ பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதேபகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பல முறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார்.
இதையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மாணவியை சேர்த்தனர். அங்கு மாணவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆஸ்பத்திரியில் இருந்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவி அளித்த புகாரின்பேரில் மனோஜ்குமார் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
காட்பாடி அடுத்த மேல்பாடிலத்தாலை கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பிரிஷிலா. இவர் வீரந்தாங்கல் வட்டார வள மையத்தில் துப்புரவு வேலை செய்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரிஷிலாவுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.
குடும்பத்தினர் போனில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. பிரிஷிலா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பிரசவத்திற்காக பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
பிரசவ வலி அதிகமாக இருந்ததால், ஓடும் ஆம்புலன்சிலேயே பிரிஷிலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய்- குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தாயும், குழந்தையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்