என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடி அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது
Byமாலை மலர்3 Aug 2018 6:48 AM GMT
காட்பாடி அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
வேலூர்:
காட்பாடி அடுத்த மேல்பாடிலத்தாலை கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பிரிஷிலா. இவர் வீரந்தாங்கல் வட்டார வள மையத்தில் துப்புரவு வேலை செய்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரிஷிலாவுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.
குடும்பத்தினர் போனில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. பிரிஷிலா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பிரசவத்திற்காக பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
பிரசவ வலி அதிகமாக இருந்ததால், ஓடும் ஆம்புலன்சிலேயே பிரிஷிலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய்- குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தாயும், குழந்தையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்பாடி அடுத்த மேல்பாடிலத்தாலை கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பிரிஷிலா. இவர் வீரந்தாங்கல் வட்டார வள மையத்தில் துப்புரவு வேலை செய்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரிஷிலாவுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.
குடும்பத்தினர் போனில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. பிரிஷிலா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பிரசவத்திற்காக பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
பிரசவ வலி அதிகமாக இருந்ததால், ஓடும் ஆம்புலன்சிலேயே பிரிஷிலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய்- குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தாயும், குழந்தையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X