search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theresa May"

    பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    லண்டன்:

    2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள தெரசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார். இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.



    இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மே ஏற்கனவே நெருக்கடியான சூழலில் இருக்கும் நிலையில், மூத்த மந்திரி பதவி விலகி இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
    ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், 2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.

    ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்துக்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

    ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை தோல்விகளை சந்தித்ததால், தெரசா மேவின் கோரிக்கையின் பேரில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு முன் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்புகள் அனைத்தும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் ஓட்டெடுப்பு தெரசா மேவுக்கு கைகொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால் இங்கிலாந்து, ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. #Brexit #TheresaMay
    பிரசல்ஸ்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் என அழைக்கப்படுகிறது.

    ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இன்று (வெள்ளிக்கிழமை) முடிய இருந்த நிலையில், அதனை தவிர்க்கும் வகையில் இங்கிலாந்து எம்.பி.க்கள் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும் மசோதா ஒன்றை நிறைவேற்றி அதற்கு ராணி எலிசபெத்தின் ஒப்புதலையும் பெற்றனர்.

    இதனால் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும்படி ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களிடம் தெரசா மே கோரிக்கை வைத்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.

    சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. இறுதியில், பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.  #Brexit #TheresaMay  
    பஞ்சாப்பில் நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து வரலாறின் அவமானமான கரை என பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். #JallianwalaBagh #TheresaMay
    லண்டன்:

    இந்தியப் சுதந்திர போராட்டத்தின்போது கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜாலியன்வாலா பாக்கில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தினர்.

    அப்போதைய பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி்ச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்த சம்பவம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் ஒரு துயரமான நாளாகும். இந்த சம்பவம் நடந்து இன்னும் 3 நாட்களில் 100 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது.
     
    இந்நிலையில், பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. வீரேந்திர சர்மா அந்நாட்டு பாராளுமன்ற மக்கள் சபையில் கடந்த 2017-ம் ஆண்டில் ஒரு தனிநபர் மசோதாவை கொண்டுவந்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    ’1919-ம் ஆண்டு பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக்கில் நடந்த படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அமைதியுடன் ஒன்று கூடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவித்ததை ஏற்க முடியாது. இதற்கு பிரிட்டன் அரசு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துயர சம்பவத்தை நினைவு தினமாக அறிவிக்க வேண்டும்’ என தனது தனிநபர் மசோதாவில் அபர் குறிப்பிட்டிருந்தார். அந்த மசோதாவிற்கு மேலும் 5 எம்.பி.,கள் ஆதரவாக கையெழுத்திட்டிருந்தனர்.

    இந்திய சுதந்திர போராட்டத்தில் இரத்தம் தோய்ந்த எழுத்துக்களால் குறிப்பிடப்பட்ட ஒரு சம்பவம் என்றால் அது பஞ்சாப்பில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்வம்தான். ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய தளபதியின் உத்தரவில் வெடித்த துப்பாக்கிகளுக்கு நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பலியாகினர்.



    இந்த கோர சம்பவத்தின் 99-வது ஆண்டு நினைவு தினம் 13-4-2018 அன்று அனுசரிக்கப்பட்டபோது, பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி விரேந்தர் சர்மா மீண்டும் கேள்வி எழுப்பினார். “அந்த கோர சம்பவத்தை நினைவு கூறும் கூட்டத்தில் பிரதமர் தெரேசா மே கலந்து கொள்ள வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.
     
    இதற்கு பதிலளித்த பிரதமர் தெரேசா மே, “உறுப்பினர் விரேந்தர் சர்மா எழுப்பிய பிரச்சனை மிகமிக முக்கியமானது. இதனை பரிசீலிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு என்னுடைய பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்கிறேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

    பிரிட்டன் நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் (லேபர்) கட்சி சார்பில் எம்.பி.யாக இருக்கும் விரேந்தர் சர்மா பஞ்சாபின் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் 13-ம் தேதி இந்த கோரப்படுகொலையின் நூற்றாண்டு துக்கநாள் அனுசரிக்கப்படும் நிலையில், இதே பிரச்சனையை மையமாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து வரலாறின் அவமானகரமானதொரு கரையாகும் என தெரிவித்துள்ளார்.

    ஆனால், ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது போல் இதற்காக மன்னிப்பு ஏதும் கோராத தெரசா மே, இதுதொடர்பாக பிரிட்டன் நாட்டு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த ‘வருத்தத்தை’ நான் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    ஜாலியன்வாலா பாக் சம்பவத்துக்கும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த வேதனைக்கும் நாங்கள் வருந்துகிறோம் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். #JallianwalaBagh #shamefulscar #Indianhistory #BritishIndianhistory #TheresaMay
    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல் அளித்துள்ளார். #Brexit #QueenElizabeth #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் தேதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

    எனவே இதனை தவிர்க்கும் விதமாக ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி பிரிட்டன் பாராளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மசோதா அங்கு ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேறியது.

    அதனை தொடர்ந்து அந்த மசோதா மேல்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. அதன் பின்னர் அந்த மசோதா ராணி எலிசபெத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர் இந்த மசோதாவில் கையெழுத்திட்டார். இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதை தடுக்கும் நடவடிக்கை சட்டமானது.



    அதாவது இனி பிரிட்டன் ஒப்பந்தத்துடன் மட்டுமே ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடியும். இதற்காக பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க ஒப்புதல் பெற வேண்டும். #Brexit #QueenElizabeth #TheresaMay

    ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலிக்கிறார். #TheresaMay #BrexitDeal
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் இழுபறி நிலை நீடிக்கிறது.

    2016-ம் ஆண்டு நடந்த பொதுவாக்கெடுப்புக்கு பின்னர் பிரதமர் பதவிக்கு வந்த தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை தொடங்கினார்.

    இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஒரு ஒப்பந்தம் போட்டார். இந்த ஒப்பந்தம் முதன்முதலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் வந்தபோது வரலாற்று தோல்வியை சந்தித்தது. 230 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தெரசா மேயின் அந்த ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தோல்வி அடைந்தது நினைவுகூரத்தக்கது. 15 நாட்களுக்கு முன்பாக 2-வது முறையும் ஒப்பந்தம் தோல்வியைத் தழுவியது.



    இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர், இரு தரப்பினரிடையே சிறப்பு வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தம், மூன்றாம் முறையாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தோல்வியை தழுவியது.

    ஒப்பந்தத்தை ஆதரித்து 344 ஓட்டுகளும், எதிர்த்து 286 ஓட்டுகளும் விழுந்தன. இது தெரசா மேயுக்கு தலைவலியாக உருவாகி உள்ளது. ஒப்பந்தம் நிறைவேறி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதும் பதவி விலகுகிறேன் என அவர் உறுதி அளித்தும்கூட இந்த விவகாரத்தில் இங்கிலாந்து எம்.பி.க்கள் அவர் பக்கம் இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது.

    இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தை 4-வது முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து ஓட்டெடுப்பு நடத்துவதற்கான வழிவகைகளை பிரதமர் தெரசா மேயும், மந்திரிகளும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று முன்தினம் ஒப்பந்தம் தோல்வியை தழுவிய பின்னர் பேசிய பிரதமர் தெரசா மே, இங்கிலாந்துக்கு மாற்றுவழி தேவைப்படுகிறது என கூறியது நினைவுகூரத்தக்கது.

    எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பைன், “ஒன்று தெரசா மே தனது திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அவர் உடனே பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தி வருகிறார்.

    ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் அதிருப்தி எம்.பி.க்கள் 34 பேரின் ஆதரவை பெறும் முயற்சியில் அரசு இதுவரை தோல்வியைத்தான் கண்டு வருகிறது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்கு பிரதமர் தெரசா மே முயற்சிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேறுவதை தவிர்க்கும் வகையில் பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்கு தெரசா மேயுக்கு ஏப்ரல் 12-ந் தேதி வரை அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #TheresaMay #BrexitDeal
    ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று தோல்வி அடைந்தது. #BritishMPs #BritishMPsrejected #TheresaMaydeal #leavingEU #Brexit
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.
      
    மேலும், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்சிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார். 

    ‘பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறியாக வேண்டும்’ என்று டொனால்டு டஸ்க் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிட் தொடர்பாக 8 மாற்று உடன்படிக்கைகளை எம்பிக்கள் முன்வைத்தனர். ஆனால் இந்த உடன்படிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

    இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை தொடர்பாக மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தது.

    இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்பட்ட உடன்படிக்கைக்கு எதிராக 344 எம்.பி.க்களும், ஆதரவாக 286 எம்.பி.க்களும் வாக்களித்தனர். 

    மூன்றாவது முறையாகவும் இந்த ஒப்பந்தம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அவசர கூட்டத்துக்கு டொனால்ட் டஸ்க் அழைப்பு வித்துள்ளார். #BritishMPs #BritishMPsrejected #TheresaMaydeal #leavingEU #Brexit
    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது. #BrexitDeal #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தியது.

    அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவாக வாக்களித்ததால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என முடிவானது.

    அதனை தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக பதவி ஏற்ற தெரசா மே முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.



    ஆனால் அது அவருக்கு அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. ஏனெனில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டபோதிலும், எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.

    ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கான ஒப்புதலையும் பெற்றார்.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது இந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

    அதன் பின்னர் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறலாம் என்கிற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்தார்.

    ஆனால் இங்கிலாந்து எம்.பி.க்கள் அதையும் நிராகரித்தனர். அத்துடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.

    தெரசா மே அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதியானது என்றும், பேசுவதற்கு இடம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறி விட்டது.

    இந்த நிலையில் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை கொண்டு வந்தார்.

    இதையடுத்து மாற்றங்களுடன் கூடிய அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

    அப்போது இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 242 ஓட்டுகள் கிடைத்தன. எனினும் ஒப்பந்தத்தை எதிர்த்து 391 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர். இதனால் 149 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தெரசா மே, சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து வெளியேறும் என தான் இன்னும் நம்புவதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கும். அதையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 50-ன் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என கூறினார்.
    ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக தெரசா மே கொண்ட வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2-வது முறையாக தோல்வி அடைந்தது. #BrexitDeal #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது.

    இதில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

    இதன் மூலம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #BrexitDeal #TheresaMay 
    ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார். #BrexitDeal #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார்.

    அதே சமயம் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான ஐரோப்பிய கூட்டமைப்பு உடனான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். #BrexitDeal #TheresaMay 
    இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில், தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். #Brexit #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தியது. பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

    அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே முன்னெடுத்தார். ஆனால் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அவர் வெற்றிகரமாக செய்து முடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஏனென்றால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்றம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவையும் புறக்கணித்தது. இதனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில் தெரசா மே உள்ளார்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ, பிரெக்ஸிட்டுக்காக ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தமே இறுதியானது என்றும், இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்றும் கூறிவிட்டது. இது தெரசா மேவுக்கு மேலும் தலைவலியாக அமைந்துள்ளது.

    இதற்கிடையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ‘திடீர்’ திருப்பமாக 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தைக்காக பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் சென்றுள்ள தெரசா மே, அங்கிருந்தபடி தனது கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், எம்.பி.க்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்து விட்டு பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    அந்த கடிதத்தில் தெரசா மே கூறியிருப்பதாவது:-

    ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் எம்.பி.க்களின் நிலைப்பாட்டை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நமது நாட்டிற்கு எது சிறந்ததோ அதை செய்யவேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கமாக உள்ளது. அதை செய்ய நமக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை என்றாலும், அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். நாடாளுமன்றத்தின் மூலம் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்ற தவறினால் எந்த காரணத்துக்காக மக்கள் நம்மை அவர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்களோ அது தோல்வியில் முடியும். மக்களின் பிரகாசமான எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே எம்.பி.க்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட்டை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். #Brexit #TheresaMay
    பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TheresaMay #Brexit #UKLeader
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது என இங்கிலாந்து 2016-ல் முடிவு எடுத்தது. அப்போது நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

    இப்போது ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

    அவர் இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 14-ந் தேதி ஒரு தீர்மானம் வர உள்ளது.

    இந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஒன்று, இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது பிரசல்சில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். இதற்கு வழிவிட்டு பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், 49 சதவீத மக்கள், ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தக் கருத்துக்கணிப்பை பர்மிங்ஹாம் பி.எம்.ஜி. ரிசர்ச் அமைப்பு நடத்தியது.
    ×