search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brexit"

    பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக எம்பிக்கள் கொண்டு வந்த 8 மாற்று திட்டங்களையும் பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. #Brexit #BritishParliament
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.
     
    அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்சிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார்.

     “பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிக்குள் வெளியேறியாக வேண்டும்” என்று டொனால்டு டஸ்க் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, பிரெக்சிட் விவகாரத்திற்கு அறுதி பெரும்பான்மை அளிக்கக்கூடிய ஒப்பந்தத்தை முடிவுசெய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், பிரிட்டனின் பாராளுமன்றத்தின் நடவடிக்கையை எம்பிக்கள் ஓட்டெடுப்பின் மூலம் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வது தொடர்பாக எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்று பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிட் தொடர்பாக நேற்று 8 மாற்று ஒப்பந்தங்களை எம்பிக்கள் முன்வைத்தனர். ஆனால் இந்த ஒப்பந்தங்களுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. #Brexit #BritishParliament
     
    பிரெக்சிட் உள்ளிட்ட விவகாரங்களில் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த தொழிலாளர் கட்சி எம்பிக்கள் 7 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர். #Brexit #LabourMPsQuit
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு (பிரெக்சிட்) மார்ச் 29-ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அவர் வெற்றிகரமாக செய்து முடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.



    ஏனென்றால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை நிராகரித்த பிரிட்டன் பாராளுமன்றம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவையும் புறக்கணித்தது. இதனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில் தெரசா மே உள்ளார்.

    இதற்கிடையே பிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 எம்பிக்கள் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினர். பிரெக்சிட் விவகாரம் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும், இனி தனி அணியாக செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இவர்கள் தனிக்கட்சி எதுவும் இதுவரை தொடங்கவில்லை. ஆனால், தொழிலாளர் கட்சி மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்காக தங்களுடன் இணையும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதையடுத்து, தொழிலாளர் கட்சியில் இருந்து மேலும் சில எம்பிக்கள் வெளியேறலாம் என தெரிகிறது. யூத விரோத பிரச்சினையை சரிசெய்யாவிட்டால், ஏற்கனவே விலகிய 7 முன்னாள் எம்பிக்களுடன் இணைய விரும்புவது குறித்து யோசித்து வருவதாக இரண்டு எம்பிக்கள் கூறியுள்ளனர்.

    முக்கிய எம்பிக்கள் விலகியிருப்பது தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. #Brexit #LabourMPsQuit
    இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில், தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். #Brexit #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தியது. பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

    அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே முன்னெடுத்தார். ஆனால் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அவர் வெற்றிகரமாக செய்து முடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஏனென்றால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்றம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவையும் புறக்கணித்தது. இதனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில் தெரசா மே உள்ளார்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ, பிரெக்ஸிட்டுக்காக ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தமே இறுதியானது என்றும், இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்றும் கூறிவிட்டது. இது தெரசா மேவுக்கு மேலும் தலைவலியாக அமைந்துள்ளது.

    இதற்கிடையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ‘திடீர்’ திருப்பமாக 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தைக்காக பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் சென்றுள்ள தெரசா மே, அங்கிருந்தபடி தனது கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், எம்.பி.க்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்து விட்டு பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    அந்த கடிதத்தில் தெரசா மே கூறியிருப்பதாவது:-

    ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் எம்.பி.க்களின் நிலைப்பாட்டை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நமது நாட்டிற்கு எது சிறந்ததோ அதை செய்யவேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கமாக உள்ளது. அதை செய்ய நமக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை என்றாலும், அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். நாடாளுமன்றத்தின் மூலம் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்ற தவறினால் எந்த காரணத்துக்காக மக்கள் நம்மை அவர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்களோ அது தோல்வியில் முடியும். மக்களின் பிரகாசமான எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே எம்.பி.க்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட்டை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். #Brexit #TheresaMay
    பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TheresaMay #Brexit #UKLeader
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது என இங்கிலாந்து 2016-ல் முடிவு எடுத்தது. அப்போது நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

    இப்போது ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

    அவர் இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 14-ந் தேதி ஒரு தீர்மானம் வர உள்ளது.

    இந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஒன்று, இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது பிரசல்சில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். இதற்கு வழிவிட்டு பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், 49 சதவீத மக்கள், ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தக் கருத்துக்கணிப்பை பர்மிங்ஹாம் பி.எம்.ஜி. ரிசர்ச் அமைப்பு நடத்தியது.
    ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். #TheresaMay #Brexit #UKLeader
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறுவது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவு அளித்தனர்.

    முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தீவிரப்படுத்தினார். ஆனால் இதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது தெரசா மேவுக்கு சவாலாக உள்ளது.

    ஏனெனில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டபோதிலும், எப்படி எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.

    அதாவது ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பின்னர் பொருளாதாரம், வெளியுறவு கொள்கை என எந்த வகையிலும் இங்கிலாந்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பான ஒப்பந்தத்தின் மூலம் ‘பிரெக்ஸிட்’ நிகழ்ந்தாக வேண்டும்.

    இதற்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு ஒப்புதலையும் பெற்றார். ஆனால் அந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் போர்க்கொடி உயர்த்தினர்.

    இதனால் அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இது தெரசா மேவுக்கு தலைவலியாக அமைந்தது. இதையடுத்து எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறலாம் என தெரசா மே வலியுறுத்தினார். ஆனால் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள் தெரசா மேவின் முடிவை நிராகரித்தனர்.

    மாறாக ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பிடம் மறுபேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும்படி எம்.பி.க்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதியானது என்றும், பேசுவதற்கு வேறொன்றும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ காலக்கெடு விரைவில் முடிய இருப்பதால் தெரசா மே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார்.

    இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தெரசா மே நேற்று பெல்ஜியம் சென்றார். அங்கு அவர் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் கிளாட் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களை தெரசா மே வலியுறுத்துவார் என இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் உள்ள சிக்கலுக்கு தீர்வுகாண்பதே இங்கிலாந்தின் நோக்கமாக உள்ளது. இதற்காக பிரதமர் பல்வேறு வழிகளை திறந்து வைத்துள்ளார். அதே சமயம் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டுவருவது அல்லது புதிதாக ஒரு அம்சத்தை சேர்ப்பது என எதுவாகினும் அது சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் தெளிவாக உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TheresaMay #Brexit #UKLeader
    ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான பிரிட்டனின் முடிவு தொடர்பாக மீண்டும் பொது வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என லண்டன் நகர மேயர் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார். #Londonmayor #Brexitsecondreferendum
    லண்டன்:

    ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.

    இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. பெரும்பாலான மக்கள் ‘பிரெக்ஸிட்’ எனப்படும் வெளியேறும் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

    ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவகாரத்தில், பிரதமர் தெரசா மேவின் கொள்கை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரெக்ஸிட் விவகாரத்துறை மந்திரி டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நடவடிக்கையை, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மிகவும் பலவீனமான முறையில் கையாள்வதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    பிரெக்ஸிட் நடவடிக்கையின்போது பிரிட்டனின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பேரங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே, எனது பதவியை விட்டு விலகுகிறேன் என்று தனது ராஜினாமா கடிதத்தில் டேவிட் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

    ஐரோப்பிய யூனியலிருந்து பிரிந்தாலும், அதன் உறுப்பு நாடுகளுடன் தளர்வான ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை, பொது வர்த்தகச் சந்தை ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கு தெரசா மே தலைமையிலான அரசு பரிசீலித்து, செயல் திட்டங்களை வகுத்து வருகிறது.

    ஐரோப்பிய யூனியலிருந்து வெளியேறும் விவகாரத்தில் தெரசா மே முன்னெடுத்துவரும் சில திட்டங்களை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி மட்டுமின்றி, ஆளும்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எதிர்த்து வருகின்றனர்.

    உள்கட்சியில் அவருக்கு எதிராக சுமார் 70 எம்.பி.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தெரசா மே பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான வழிவகை என்ன? என்பது தொடர்பாக அவர்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இவர்களின் செயல்பாடுகளால் எனது பதவிக்கு ஆபத்து வராது என தெரசா மே கூறி வருகிறார். சிலரது மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் இறுதி திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, அது ஏற்புடையது தானா? என்பதை பாராளுமன்றம் தீர்மானிக்கட்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

    இந்நிலையில், குழப்ப நிலையில் உள்ள பிரதமர் தெரசா மேவின் நடவடிக்கைகள் நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்பதால் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என லண்டன் நகர மேயர் சாதிக் கான் குறிப்பிட்டுள்ளார்.

    பிரிட்டனில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழில் அவர் இன்று எழுதியுள்ள கட்டுரையில் தெரசா மே முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அவர் நடத்திவரும் பிரெக்சிட் பேரம் பிரிட்டன் மக்களின் வாழ்க்கைத்தரத்தை சீர்குலைத்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.

    அரசின் இந்த தோல்வியினால் ஐரோப்பிய யூனியனில் இருந்து நாம் வெளியேற வேண்டுமா? என்ற எண்ணத்துக்கு பெரும்பாலான மக்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளதால் பிரெக்சிட் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்பட வேண்டும் எனவும் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார்.

    மறு வாக்கெடுப்புக்கு அவசியம் இல்லை என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரமி கார்பைன் கூறிவரும் நிலையில் அதே கட்சியை சேர்ந்த முத்த உறுப்பினரும் லண்டன் நகர மேயருமான சாதிக் கான் தற்போது முன்வைத்துள்ள கருத்து பிரிட்டன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எனினும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள தொழிலாளர் கட்சி மாநாட்டில் லண்டன் மேயரின் இந்த கருத்து தொடர்பாக பரிசீலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Londonmayor #Brexitsecondreferendum 
    பிரெக்ஸிட் தொடர்பான வர்த்தக மசோதாவில் உள்ள அம்சங்களுக்கு பல எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், பாராளுமன்றத்தில் மசோதா சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #Brexit #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பல்வேறு முக்கிய நடைமுறைகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக விலகி விடும் என்பதால் வர்த்தகம், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய யூனியனுடன் நடத்தப்பட்டு வருகிறது.

    பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரசா மே கையாளும் முறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

    ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பலர் தெரசா மே-வை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினர். இதனால், எரிச்சலடைந்த தெரேசா, “என் பின்னாள் நின்று எனக்கு ஆதரவாக இருங்கள். இல்லையெனில் பிரெக்சிட் ஒருபோதும் நிறைவேறாது”என எச்சரிக்கை விடுத்தார்.

    இவ்வாறாக, சொந்த கட்சியிலேயே எதிர்ப்பும் ஆதரவும் கலந்து இருந்த நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் தொடர்புடைய வர்த்தக மசோதாவை அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழ்சபையில் பிரதமர் தெரசா மே நேற்று தாக்கல் செய்தார். 318 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும் 285 பேர் மசோதாவை எதிர்த்தும் வாக்களித்தனர். 

    கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, மேல் சபையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சொந்த கட்சியினரே கிளர்ச்சியை தொடங்கிய நிலையில், என்னை ஆதரிக்காவிட்டால் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது என எதிர்ப்பாளர்களுக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார். #Brexit
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரேசா மே கையாளும் முறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

    மேலும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பலர் தெரேசா மே-வை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினர். இதனால், எரிச்சலடைந்த தெரேசா எதிர்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். 

    அதில், “என் பின்னாள் நின்று எனக்கு ஆதரவாக இருங்கள். இல்லையெனில் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது”என அவர் தெரிவித்துள்ளார்.
    பிரெக்ஸிட் விவகாரத்தில் டேவிட் டேவிஸ் இன்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், சிறிது நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பதவியில் இருந்து விலகியுள்ளார். #Brexit #BorisJohnson #UK
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிதி நடைமுறைகள் மற்றும் வர்த்தக தொடர்புகள் உள்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டிய பிரிட்டன் நாட்டு மந்திரிகள் இருவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், பிரெக்ஸிட் விவகாரம் திட்டமிட்டபடி முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
    பிரட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை பிரிட்டன் ஒத்திவைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். #Brexitbecomeslaw #UKleaveEU #TonyBlair

    லண்டன்: 

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, வரும் 29-3-2019-க்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மும்முரம் காட்டி வருகிறார். 

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவுக்கு சட்ட வடிவம் கொடுக்கும் மசோதா மீது பிரிட்டன் பாராளுமன்றத்தில் பல மாதங்களாக விவாதம் நடைபெற்று வந்தது. மசோதாவை ஆதரித்தும், எதிர்த்தும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காரசாரமாக உரையாற்றினர். 

    இதனிடையே, 1972-ம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைவது தொடர்பாக உருவாக்கப்பட்ட சட்டத்திற்கு மாற்றாக ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்



    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை பிரிட்டம் ஒத்திவைக்கவேண்டும் என பிரட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த முடிவு பிரிட்டனை பெரிய அளவில் பாதிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறுகையில், நமது அரசு நாட்டின் நலன்களைப் பற்றிய யோசனை செய்வதை விட்டுவிட்டு, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரின் நன்மைக்காக செயல்பட்டு வருகிறது, தலைவராக இருக்கவேண்டிய பிரதம மந்திரி ஒரு பிணை கைதியை போல உள்ளார். 

    இதற்கிடையில், பிரிட்டனின் வருங்காலத்திற்காக போராடுவதில் முக்கிய பங்கு கொண்டுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் அதை செய்ய மறந்துவிட்டார். ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியால் முடியாது என்பதால் பாராளுமன்றம் தன்னைத் தானே உறுதிப்படுத்த வேண்டும்.

    இப்போது மக்கள் தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும், ஏன் எனில் எப்படிப்பட்ட நாடு வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது பிரிட்டனுக்கு பெரிய அடியாக இருக்கும். நாம் யோசிக்க அவகாசம் வேண்டியுள்ளது. எனவே மார்ச் 2019 என்ற காலக்கெடுவை அதிகரிக்க வேண்டும்.இரண்டாம் உலக போருக்கு பின்னர் நாம் எடுக்க இருக்கும் முக்கிய முடிவு இதுதான். 

    உலகின் மிகப்பெரிய வணிகச் சந்தை மற்றும் மிகப்பெரிய அரசு யூனியன் என்னும் அந்தஸ்தை பிரிட்டன் இழந்துவிட்டது. அமெரிக்கா தனது முக்கிய நட்பை இழந்துவிட்டது. ஐரோப்பிய யூனியனுக்கு வெளியில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு நாம் தான் என்று கூறி கொள்ளலாம். ஆனால் அது உண்மையல்ல. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவெடுத்த பின்னர், அமெரிக்கா உடன் பிரிட்டம் நெருக்கமாக இருக்கிறதா?, உறவு பலமாதாக இருக்கிறதா? 

    இவ்வாறு அவர் கூறினார். #Brexitbecomeslaw #UKleaveEU #TonyBlair
    ×