search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wrong treatment"

    • பெற்றோர் தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே காடாம்புலியூர் தெற்கு மேம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி.

    இவர்களுக்கு பானுஸ்ரீ என்ற 4½ வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இந்த பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் நேற்று முன்தினம் பண்ருட்டி தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பானுஸ்ரீக்கு உடலில் அலர்ச்சி ஏற்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் பண்ருட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பானுஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பானுஸ்ரீயின் பெற்றோர் தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கர்ப்பிணி எனக் கூறி தவறான சிகிச்சை அளித்தது தொடர்பான புகார் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #HumanRightsCommission
    சென்னை:

    மதுரை விரகனூர் அருகே உள்ள கோழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி யாஸ்மின். இவர் கருவுற்றிருப்பதாக கூறி 8 மாதங்களாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாகவும், அதன்பின்னர்  குழந்தை இல்லை என்று கூறியதாகவும் அவரது கணவர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த வி‌ஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வி இணை இயக்குனர்கள் பதில் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #HumanRightsCommission
    புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை குப்பையன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் திவ்யபாரதி (வயது 17), பிளஸ்-2 முடித்துள்ளார்.

    இந்தநிலையில் திவ்யபாரதிக்கு நெஞ்சில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவரை அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் திவ்ய பாரதியின் நெஞ்சில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யபாரதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு வலி குணமாகவில்லை. இதையடுத்து திவ்யபாரதியை அவரது பெற்றோர் மீண்டும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கட்டி இருக்கும் நெஞ்சு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாமல் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்தது பரிசோதனையில் தெரியவந்தது.

    எனவே இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திவ்யபாரதியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். #Tamilnews
    ×