search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukkottai govt hospital"

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை பிரசவத்தில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரேஷ்குமார். இவரது மனைவி ஹன்சிகா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ஹன்சிகா திடீரென உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    டாக்டர்களின் தவறான சிகிச்சையால்தான் ஹன்சிகா மற்றும் குழந்தை இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் டாக்டர்களுக்கும், ஹன்சிகாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதனிடையே அங்கு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக வந்திருந்த போலீசார், ஹன்சிகாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருடனும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலையாமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இது குறித்து மருத்துவக்கல்லூரி மகப்பேறு துறை தலைவர் கற்பகம் கூறும்போது, அனுசுயா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்தநிலையில் தான் அவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

    நாங்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம். இருப்பினும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு இருந்ததாலும், ரத்த அணுக்கள் மிகக்குறைவாக இருந்ததாலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையும் இறந்து விட்டது.

    இதுகுறித்து அவரது உறவினர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து விட்டதாகவும், சரியான புரிதல் இல்லாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதனிடையே போலீசார் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து ஹன்சிகாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் தாய்-சேய் உடலை பெற்று சென்றனர்.

    பிரசவத்தின் போது தாய்- சேய் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை குப்பையன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் திவ்யபாரதி (வயது 17), பிளஸ்-2 முடித்துள்ளார்.

    இந்தநிலையில் திவ்யபாரதிக்கு நெஞ்சில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவரை அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் திவ்ய பாரதியின் நெஞ்சில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யபாரதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு வலி குணமாகவில்லை. இதையடுத்து திவ்யபாரதியை அவரது பெற்றோர் மீண்டும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கட்டி இருக்கும் நெஞ்சு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாமல் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்தது பரிசோதனையில் தெரியவந்தது.

    எனவே இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திவ்யபாரதியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். #Tamilnews
    ×