search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pon Radhakrishnan"

    • மத்திய அரசின் திட்டங்கள் மக்களை தற்போது நேரடியாக சென்றடைகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்தார்.
    • கர்நாடகத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டமுடியாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பி னரும், நாடா ளுமன்ற பொறுப்பா ளருமான முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    பிரதமர் மோடி தலைமை யில் பா.ஜ.க. அரசு பொறுப் பேற்று 9 ஆண்டுகள் நிறை வடைகிறது. இந்த 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒருமாத காலம் அனைத்து பா.ஜ.க. பொறுப் பாளர்களும் தீவிர பிரசா ரத்தில் ஈடுபட தேசிய தலைவர் நட்டா உத்தர விட்டுள்ளார்.

    அதன்படி அனைத்து பொறுப்பாளர்களை கொண்ட குழுக்கள் அமைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களை நோக்கி பிரசாரம் செய்ய உள்ளோம். இந்த பணியில் 16 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். உலகின் வழி காட்டியாக பிரதமர் மோடி வரவேண்டும் என்று அனைத்து நாடுகளும் அவரை பாராட்டுகின்றன.

    கடந்த காலங்களில் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வில்லை. தற்போது மத்திய அரசின் திட்டம் நேரடியாக மக்களை சென்றடைகிறது. இதனால் உலகில் உயர்ந்த நாடுகள் வரிசையில் முதல் 5 இடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளர்ச்சியை நோக்கிய பாதையில் இந்தியாவை பா.ஜ.க. செல்ல வைத்துள்ளது.

    மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தமிழகத்தில் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மீது தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மத்திய அரசின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்கிறது. கர்நாடகத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டமுடியாது.

    இவ்வாறு கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவசாய அணி மாநில செயலாளர் பிரவீன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் ஆத்மா கார்த்திக், மணிமாறன், நாகேந்திரன், கணபதி, ஊடக பிரிவு மாநில செயலாளர் ஜெய குரு, மாவட்ட பார்வை யாளர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி அய்யாவை உணர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புனித தலமாகும்.
    • அய்யாவின் பதிக்குள் சென்று வழிபட விரும்புவோர் ஆண்களுக்கு உண்டான விதிமுறைகளை கட்டாய விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.

    நாகர்கோவில்:

    பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி அய்யாவை உணர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புனித தலமாகும். அய்யாவின் பதிக்குள் சென்று வழிபட விரும்புவோர் ஆண்களுக்கு உண்டான விதிமுறைகளான மேலாடை தவிர்த்தல், தலையில் தலைப்பாகை அணிதல், நெற்றியில் திருநாமம் இடல் போன்ற கட்டாய விதிமுறைகளை கடைபிடித்தாகவேண்டும்.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை தி.மு.க.வின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ், சாமிதோப்பு தலைமை பதிக்குள் அழைத்து சென்றுள்ளார்.

    உடன் சென்ற அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேலாடையின்றி, தலைப்பாகை அணிந்து சென்றுள்ளனர். ஆனால் அய்யாவை அவமதிக்கும் வகையில், அவர் வகுத்து வைத்த விதிமுறைகளை வேண்டுமென்றே மீறும் வகையில் உதயநிதி ஸ்டாலினும், மகேசும் செயல்பட்டுள்ளனர். உதயநிதிஸ்டாலின், மகேஷ் ஆகியோர் தாங்கள் செய்த தவறுக்கு அய்யாவை வணங்கி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

    மேலும், அவர்களை பதியின் சார்பில் உள்ளே அழைத்து சென்ற முதன்மை குரு பால ஜனாதிபதி தாம் வகிக்கும் பொறுப்பை துறக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • தி.மு.க. அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை மதிக்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி அ.தி.மு.க. நிர்வாகிகள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன். இன்னொரு கட்சிக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அளவிற்கு நான் இல்லை. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சி என்றும், எப்போதும் அப்படியே திகழ்வதற்கான வாய்ப்பு வரும் என நம்புகிறேன்.

    தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக ஏன் இதை சொல்லி இருக்கிறார் என தெரியவில்லை. நாங்களும் அவர்களோடு சமரசம் செய்யமாட்டோம். தமிழக மக்களும் தி.மு.க.விடம் சமரசம் செய்ய தயாராக இல்லை. தமிழக மக்களுக்காக தி.மு.க.வை எதிர்த்து போராடுவதற்கு பா.ஜ.க. எப்போதும் தயாராக உள்ளது.

    அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் போலீசார் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளார்கள் என தெரியவில்லை. இதேபோல் எல்லா விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளார்களா? இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

    கடந்த 2017-ம் ஆண்டு சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் படித்தபோது உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து அப்போது மத்திய மந்திரியாக இருந்த நான், அவரது உடலை மீட்டு சேலத்தில் ஒப்படைத்துவிட்டு திரும்பியபோது என் மீதும் செருப்பு வீசப்பட்டது. எனது காரிலும் தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது.

    தி.மு.க. அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது சரியானது அல்ல. ஆனால் அமைச்சர் மீதே வீசி இருக்கிறார்கள் என்று சொன்னால், அன்று நானும் மந்திரியாக இருந்தபோதுதான் என் மீது செருப்பு வீசப்பட்டது. அப்போது அதனை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஒரு ஆவேசத்தில் மக்கள் இருக்கும்போது அதனை பெரிய மனதோடு விலகிச்செல்ல வேண்டும். மந்திரி மீது மட்டுமல்ல, சாதாரண மனிதன் யார் மீதும் செருப்பு வீசக்கூடாது.

    கன்னியாகுமரி மாவட்டம், தேங்காபட்டணம் துறைமுகத்தில் இதுவரை 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த துறைமுகத்தில் நிரம்பி இருக்கக்கூடிய மணலை எடுக்க வேண்டும். அதன் பணிகளை தமிழக அரசு விரைவாக முடிக்க வேண்டும். அதற்கான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது. சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. எல்லையை கண்காணிப்பதில் எந்த அளவிற்கு மற்றவர்கள் தயாராக இருக்கிறார்களோ, அதேபோல இந்திய எல்லையை பாதுகாப்பதில் நம்முடைய நாடும் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட தலைவர் கதிரவன், மாநில நிர்வாகிகள் சுப.நாகராஜன், ஆத்மா கார்த்திக், மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கன்னியாகுமரி உள்பட 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.



    அதேபோல பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினார்கள். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்கும்போது தமிழகத்தில் அந்த கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை தற்போது நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பாரதிய ஜனதா கட்சியினரிடம் ஏற்பட்டு உள்ளது.

    அதற்கேற்ப டெல்லி வரும்படி பொன்.ராதா கிருஷ்ணனுக்கு பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்தது. அதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

    ஏற்கனவே 1999-ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக பதவி வகித்து உள்ளார். அதேபோல கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்று மத்திய மந்திரியானது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பா.ஜன தாவுக்கு 5 தொகுதி ஒதுக்கப்பட்டது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும் மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியிலும், தேசிய செயலாளரான எச்.ராஜாவும், சி.பி.ராதா கிருஷ்ணனும், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டனர். இந்த 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

    2014 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் 1½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால் தற்போது 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரிடம் பின்தங்கி இருக்கிறார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை விட 20 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி இருக்கிறார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியை தழுவினார்.

    கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் நடராஜனிடமும், ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரன் முஸ்லிம்லீக் வேட்பாளர் நவாஸ்கனியிடமும் பின்தங்கி இருக்கிறார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தமிழர்கள் உள்ள பகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். வாரணாசி தொகுதியில் கடந்த முறை போட்டி இருந்தது.

    ஆனால் இந்த முறை யாரும் போட்டியாக கருத முடியாது. ஒட்டு மொத்த மக்களும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். அங்குள்ள சிறுபான்மை மக்கள், இஸ்லாமிய மக்கள் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க இருப்பதாக கூறினார்கள். 5 ஆண்டுகளில் மோடி பல திட்டங்களை செய்துள்ளார். இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி பேசும் கே.எஸ்.அழகிரியின் பார்வையில் கோளாறு இருப்பதாக தெரிகிறது.


    சந்திரசேகரராவை சந்திக்க முதலில் ஸ்டாலின் மறுத்ததாக தகவல் வந்தது. இப்போது சந்தித்து உள்ளார். அப்போது நல்ல டீ குடித்து இருப்பார்கள். அவ்வளவு தான் நடந்து இருக்கும். இதன் பின்னாடி எந்த பலனும் இருக்க போவதில்லை.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற போகிறது. பா.ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க கூடிய வகையில் பலம் பொருந்திய கட்சியாக வர போகிறது. கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி ஆட்சி அமைத்ததோ அதுபோல் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்.

    பா.ஜனதாவிடம் தி.மு.க. சார்பில் தூது அனுப்பப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாக கூறுகிறீர்கள். ஒருவேளை சந்திரசேகர ராவ் மூலமாக தூது அனுப்பி இருப்பார்.

    திரை மறைவில் எதுவும் பேசுவதற்கு பா.ஜனதா தயாராக இல்லை. இதை யார் சொல்லியிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவர் பொய் மட்டுமே கூறிவருகிறார். மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குஷ்பு கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பொய் பேசுவதாக கூறும் சகோதரி குஷ்பு, சமீபத்தில் அவரிடம் தவறு செய்தவர் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

    பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? என்பது இங்குள்ள வாக்காளர்களுக்கு தெரியும். இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் அதற்கு பதிலாக அமையும்.

    ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று குஷ்பு சொல்வது உண்மைதான். அவர் பிரதமர் ஆனால் இப்போது விழித்து இருக்கும் மக்கள் அனைவரும் தூங்கி விடுவார்கள்.

    உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு தலை நிமிர்ந்து பேசியவர் தான் பிரதமர் மோடி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் யாராவது இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று இவர்களால் கூறமுடியுமா?

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் உறுதியான வளர்ச்சி திட்டம் என்பதால் ஒரு சிலரின் தூண்டுதல் பேரில் தடை வந்துள்ளது.


    8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் விரும்பும் போது அதனை யாராலும் தடுக்க முடியாது. இதனை தான் மத்திய மந்திரி பியுஸ்கோயலும் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் நடத்தும் சோதனைகளில் உள்நோக்கம் இருப்பதாகவும், பின் நோக்கம் இருப்பதாகவும் யாரும் நினைக்க வேண்டாம்.

    நான் பிரசாரத்திற்கு சென்றபோது கூட தேர்தல் அதிகாரிகள் பல முறை என் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.

    பிச்சை எடுப்பவர்கள் பிச்சை போடுபவர்களை தர்ம பத்தினி என கூறுவார்கள். அதுவே அவர்கள் பிச்சை போடாவிட்டால் அவர்களை மூதேவி என்பார்கள்.

    கூட்டணிக்கு அ.தி.மு.க.வை பா.ஜ.க. மிரட்டி பணிய வைத்ததாக குற்றச்சாட்டுகள் கூறும் மு.க. ஸ்டாலின் அதனை வேட்பு மனு தாக்கல் செய்த போதே கூறி இருக்க வேண்டும். தேர்தலுக்கு 3 நாட்கள் இருக்கும்போது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
    100 நாள் வேலை திட்டம் குறித்து காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருவதாக கன்னியாகுமரி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MGNREGA
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெருக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இதுவரை 99,952 நபர்களுக்கு நமது மாவட்டத்தில் வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.



    மேலும் இவர்களுடைய ஊதியம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.163 ஆக இருந்த சம்பளம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் ரூ.229 ஆக தினக்கூலி உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 100 நாள் வேலை உறுதி திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை வேண்டுமென்றே மறைத்து காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து செய்யப்படும் என்ற பொய் செய்தியை தொடர்ந்து கிராமங்களில் பரப்பி வருகிறார்.

    இந்த பொய்யுரைகளை நமது மாவட்ட மக்கள் நம்ப மாட்டார்கள். எனினும் இது குறித்த உண்மையை நமது மக்களுக்கு சொல்வதை எனது கடமையாக கருதுகிறேன். மத சார்பற்ற கூட்டணி என்று தெரிவித்துவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் மத கலவரத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தனது நிறுவன பொருட்கள் மூலம் பணத்தை கொடுப்பதாக செய்திகள் வருகின்றன.

    படிப்பறிவு உள்ள நமது மாவட்ட மக்களின் வாக்குகளை எவராலும் விலை கொடுத்து வாங்கிடமுடியாது என்பதை கூடிய விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் உணர்ந்து கொள்வார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MGNREGA

    கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று நான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை. தேர்தல் நெருங்கும் போது தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அந்த கட்சிகளின் தலைவர்கள் பரபரப்பு கிளப்புவது வாடிக்கை. அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரனும் அப்படி பரபரப்பு கிளப்பி உள்ளார்.

    கருப்பு முருகானந்தம் அந்த ஊரைச் சேர்ந்தவர். அவருக்கு தினகரனுடன் நல்ல நட்பு உண்டு. பல வி‌ஷயங்களுக்கு அவரிடம் பேசி இருக்கலாம். எனக்கு தெரிந்து இது ஒரு நாள் செய்திக்கு பயன்படலாம். மற்றபடி எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை.


    குமரி மாவட்ட அரசியல் பற்றி தினகரனுக்கு தெரியாது. என்னிடம் கேட்டிருந்தால், கன்னியாகுமரி தொகுதியில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறி இருப்பேன்.

    தினகரனுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது அவர் மத்திய மந்திரிகளை சந்திக்க முயற்சித்ததாகவும், அது நடக்காத விரக்தியில் இப்படி பேசி இருக்கலாம் என கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

    தனிப்பட்ட முறையில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாங்கள் பழகுவது உண்டு. சமீபத்தில் அவர் கட்சி தொடங்கிய பின்பு நான் சந்திக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பேசுவதை வெளியே கொண்டு வருவது அநாகரீகம் என்பதை தினகரன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் டோக்கன் கொடுத்தார். நான் கடை வைக்கவில்லை. கடை வைத்திருப்பவர்கள் டோக்கன் கொடுப்பார்கள்.

    மீனவ கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்குள்ள மக்கள் என்னை வரவேற்றனர். நாங்கள் 1998 -க்கு பிறகு அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்று இருக்கிறோம்.

    வடகிழக்கு மாகாணத்தில் 90 சதவீதம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அங்கு இப்போது பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan #TTVDhinakaran
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பூஜ்யத்துக்குள் ராஜ்யம் நடத்துவதாக மத்திய மந்திரியும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கை ஜீரோ (பூஜ்யம்) என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையே சூப்பர் ஹீரோ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



    இந்த கருத்திற்கு மத்திய மந்திரியும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். நாகர்கோவில் அருகே பறக்கையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன் ராதாகிருண்ணன், “பாஜக தேர்தல் அறிக்கை பூஜ்யம் அல்ல. பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். அந்த பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்திருப்பது தெரியும்’ என்று குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #dmk #congress #ponradhakrishnan
    சென்னை:

    கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  வசந்தகுமாருக்கு 'கை'  சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

    திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன். திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ.  ஆட்சியாளர்கள் தங்கள் சாதனையாக பேச எதுவும் இல்லாததால், எங்களை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் நிறைவேற்றினாரா?  நாகர்கோவில் நகருக்கு சுற்றுச்சாலை அமைப்பேன் என்ற வாக்குறுதியை செயல்படுத்தினாரா? கன்னியாகுமரியில் புதிய ரயில்வே கோட்டம் அமைப்பேன். காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பேன் போன்ற வாக்குறுதிகளை பொன்ராதாகிருஷ்ணன் நிறைவேற்றினாரா? போன்ற கேள்விகளை மு.க.ஸ்டாலின் எழுப்பினார். #mkstalin #dmk #congress #ponradhakrishnan
    தாமரைக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று பொன் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். #ponradhakrishnan #bjp

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். புதூர், கருமன்கூடல், சரல், செம்பன்விளை, இரும்பிளி பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நான் ஏற்கனவே எனது சம்பளத்தை மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக செலவு செய்து வருகிறேன். இந்த தேர்தலில் எனக்கு போட்டியாக யாரும் இல்லை. மக்கள் முடிவு செய்து விட்டார்கள். பாரதீய ஜனதா தான் வெற்றி பெற வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அவர் தான் நமது வேலைக்காரன். அவர் பல்வேறு திட்டங்களை நமது மாவட்டத்திற்காக செயல்படுத்தி உள்ளார். 40 ஆயிரம் கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். எனவே தாமரைக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

    60 ஆண்டு கனவு திட்டமான துறைமுக திட்டத்தை செயல் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டேன். தடுத்து நிறுத்துவேன் என கூறி வருகிறார். கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய காங்கிரஸ் வேட்பாளர் இங்கிருந்து நாங்குநேரிக்கு சென்று விட்டார். மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் தான் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

    பொதுமக்கள் சிந்தித்து பார்த்து தங்களது வாக்குகளை சிதறாமல் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். #ponradhakrishnan #bjp

    ×