search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loksabha elections 2019"

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பா.ஜன தாவுக்கு 5 தொகுதி ஒதுக்கப்பட்டது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும் மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியிலும், தேசிய செயலாளரான எச்.ராஜாவும், சி.பி.ராதா கிருஷ்ணனும், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டனர். இந்த 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

    2014 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் 1½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால் தற்போது 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரிடம் பின்தங்கி இருக்கிறார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை விட 20 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி இருக்கிறார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியை தழுவினார்.

    கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் நடராஜனிடமும், ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரன் முஸ்லிம்லீக் வேட்பாளர் நவாஸ்கனியிடமும் பின்தங்கி இருக்கிறார்கள்.

    உத்தரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் சாந்தலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.



    பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ. 500 கொடுத்துச்சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நீங்கள் எங்கள் கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் வாக்களிக்க முடியாது என்றும் கூறியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே வாக்காளர்கள் விரலில் மை வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    இன்று காலை தொடங்கிய இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரிலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவனிலும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    உத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில், சமாஜ்வாதியின் சார்பில், ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.



    மத்திய அமைச்சர், மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச பாஜக தலைவர், மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஏழு கட்டத்திலும் தேர்தலை சந்திக்கும், பீகாரில் உள்ள, எட்டு தொகுதிகளில், 157 பேர் போட்டியிடுகின்றனர். இதில், நான்கு மத்திய அமைச்சர்களும் அடங்குவர்.

    இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் முன்னிட்டு இன்று காலை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரில் வாக்களித்தார். அதே போல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
    நாடு முழுவதும் 59 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்கிறது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 59 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் போட்டியிடும், உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்கிறது.

    ஹிமாச்சாலப்பிரதேசத்தில் 4, ஜார்கண்டில் 3, சண்டிகரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பஞ்சாப்பில் 13, மேற்கு வங்கத்தில் 9, மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

    நாட்டின், 17-வது மக்களவை தேர்தல், இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. மக்களவைவில் உள்ள, 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என, மார்ச், 10ல் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏப்., 11 முதல் இதுவரை, ஆறு கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடந்துள்ளது. கடைசி கட்ட ஓட்டுப் பதிவு, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளுக்கு இன்று நடக்கிறது.



    உத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த மக்களவை தேர்தலில், 3.71 லட்சம் வித்தியாசத்தில் மோடி வென்றார். அவருக்கு, 5.51 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. தற்போது, பிரதமர் மோடியை எதிர்த்து, காங்., சார்பில், அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில், சமாஜ்வாதியின் சார்பில், ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர், மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச பாஜக தலைவர், மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    மத்திய பிரதேசத்தில், மத்திய அமைச்சர்கள், காந்திலால் புரியா, அருண் யாதவ் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஏழு கட்டத்திலும் தேர்தலை சந்திக்கும், பீஹாரில் உள்ள, எட்டு தொகுதிகளில், 157 பேர் போட்டியிடுகின்றனர். இதில், நான்கு மத்திய அமைச்சர்களும் அடங்குவர். பாட்னா சாஹிப் தொகுதி, மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக அமைந்துள்ளது.

    மத்திய சட்ட அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் இங்கு போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியின் தற்போதைய, எம்பியான நடிகர் சத்ருகன் சின்ஹா, பாஜகவில் இருந்து விலகி, தற்போது, காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடுகிறார். 
    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மிரட்டல் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati
    லக்னோ:

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணா பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பியான ஜோதிராதித்ய சிந்தியா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லோகேந்திர சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் திடீரென தேர்தலில் இருந்து விலகியதுடன், காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி மீது மாயாவதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதில் பாஜகவுக்கு காங்கிரஸ் எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. குணா மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை காங்கிரஸ் அரசு கட்டாயப்படுத்தி, வாபஸ் பெற வைத்துள்ளது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி தனது சொந்த சின்னத்தில் தேர்தலை சந்தித்து காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும். அத்துடன், மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்.

    உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றாலும், பகுஜன் சமாஜ் கட்சி- சமாஜ்வாடி கூட்டணி வெற்றி பெறக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். இது அவர்களின் சாதி மனப்பான்மை, குறுகிய மனப்பான்மை மற்றும் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

    குணா தொகுதியில் மே 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Mayawati
    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி 10.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #LokSabhaElections2019 #PollingPercentage
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்தனர். காலை 10 மணி நிலவரப்படி சராசரியாக 10.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அசாமில் 12.36 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    பீகாரில் 12.64 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 10.36 சதவீதம், கோவாவில் 11.70 சதவீதம், குஜராத்தில் 9.99 சதவீதம், திரிபுராவில் 5.83 சதவீதம், மேற்கு வங்காளத்தில் 16.85 சதவீதம், சத்தீஸ்கரில் 12.58 சதவீதம், மகாராஷ்டிராவில் 6.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜம்மு காஷ்மீரில் குறைந்தபட்சமாக 1.59 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.

    பிரதமர் மோடி அகமதாபாத்தின் ராணிப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது தாயார் ஹீராபென்மோடி ரெய்சானில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.



    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் வேட்பாளருமான சசி தரூர், திருவனந்தபுரத்தில் உள்ள பூத்தில் ஓட்டு போட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் கும்மணம் ராஜசேகரன், இடது ஜனநாயக முன்னணி சார்பில் திவாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். #LokSabhaElections2019 #PollingPercentage
    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 13-ந் தேதி ராகுல்காந்தி மீண்டும் கர்நாடகம் வருகை தர உள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். #RahulGandhi #LokSabhaElections2019
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையடுத்து, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் பெங்களூரு, கலபுரகி, ஹாவேரியில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி இருந்தார்.

    இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 13-ந் தேதி ராகுல்காந்தி மீண்டும் கர்நாடகம் வருகை தருகிறார். அன்றைய தினம் ஒரே நாளில் சித்ரதுர்கா, கோலார், மைசூரு ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ராகுல்காந்தி பேச உள்ளதாகவும், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாகவும் காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.



    முதலில் சித்ரதுர்காவுக்கு வருகை தரும் ராகுல்காந்தி, பின்னர் கோலாருக்கு செல்ல உள்ளார். அதன்பிறகு, தான் மைசூரு மாவட்டத்திற்கு அவர் செல்ல இருக்கிறார். மைசூரு மாவட்டம் கிருஷ்ணராஜநகரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச இருக்கிறார். கிருஷ்ணராஜநகர் மைசூரு மாவட்டத்தில் இருந்தாலும், அந்த பகுதி மண்டியா பாராளுமன்ற தொகுதியில் இருக்கிறது.

    இதனால் மண்டியா தொகுதியின் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் நிகில் குமாரசாமியை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன், முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். #RahulGandhi #LokSabhaElections2019
    மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தால் கர்நாடகம் வளர்ச்சி அடையும் என்று வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத்தை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது சித்தராமையா கூறினார். #Siddaramaiah #Congress #LokSabhaElections2019
    பெங்களூரு :

    பெங்களூரு மத்திய பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் ரிஸ்வான் ஹர்ஷத் போட்டியிடுகிறார். நேற்று அவரை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ஜமீர் அகமது கான் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

    அவர்கள் பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜிநகர் வார்டு, பின்னிப்பேட்டை, ஆசாத் நகர், சி.வி.ராமன் நகர், நாகவாரா, ஆவலஹள்ளி, மகாதேவபுரா ஆகிய இடங்களுக்கு கொளுத்தும் வெயிலில் திறந்த வேனில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ரிஸ்வான் ஹர்ஷத்துக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர். பின்னர் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வாக்காளர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

    கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக எனது தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நடை மேம்பாலம், இந்திரா மலிவு விலை உணவகம், பெண்களுக்கு பி.யூ. கல்லூரி வரை இலவச கல்வி இப்படி பல்வேறு வசதிகளும், திட்டங்களும் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

    ஆனால் பா.ஜனதா சார்பில் என்ன செய்து கொடுக்கப்பட்டது என்று கூறுங்கள் பார்ப்போம். இத்தொகுதி எம்.பி.யான பி.சி.மோகன் இதுவரை உங்களை(மக்களை) நேரில் சந்தித்து இருக்கிறாரா? சொல்லுங்கள் பார்ப்போம். மக்களுக்காக எதையும் செய்யாத பி.சி.மோகனை நீங்கள் தேர்தெடுக்க வேண்டுமா? அல்லது மக்களுக்காக பல திட்டங்களை செய்து வரும் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டுமா? என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி செய்த சாதனைகள் பூஜ்ஜியம் தான். அவர் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ததும், மங்கி பாத்தில் பேசியதும்தான் அவருடைய சாதனை. அதனால் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரியுங்கள்.

    ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நாடு வளம் பெறும். கர்நாடகமும் வளர்ச்சி அடையும்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #Siddaramaiah #Congress #LokSabhaElections2019
    சென்னையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று 24 இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று வடசென்னை தொகுதி ராயபுரத்தில் திறந்த வேனில் பிரசாரத்தை தொடங்கினார். மத்திய சென்னை தொகுதியில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் பிரசாரத்தை முடித்தார்.

    இன்று மத்திய சென்னை, தென்சென்னை தொகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார். திருவல்லிக்கேணியில் மதியம் 2 மணியளவில் பிரசாரத்தை தொடங்கும் அவர் கே.கே.நகரில் முடிக்கிறார்.

    இன்று 24 இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    பார்த்தசாரதி கோவில் பாரதியார் வீடு பின்புறம், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் அருகில், சூளை போஸ்ட் ஆபீஸ், அயனாவரம், டி.பி. சத்திரம், சி.எம்.டி.ஏ. காலனி, புஷ்பா நகர், காமராஜர் காலனி நாகவள்ளியப்பன், கோவில், அசோக் நகர் 1-வது தெரு, அயோத்தியா மண்டபம், முத்துரங்கன் சாலை-தி.நகர், கோட்டூர்புரம் சாலை பொன்னியம்மன் கோவில் மார்க்கெட் அருகில், ரேஸ் கோர்ஸ் சாலை.

    மத்திய கைலாஷ்- குருநானக் கல்லூரி வழியாக காந்தி சாலை, அம்பிகா தெரு, திருவான்மியூர், மேற்கு அவென்யு, அண்ணா தெரு, லட்சுமி காந்தி சாலை, சாஸ்திரிநகர் முதல் அவென்யு, ஆர்.கே.மடம், தெற்கு மாட வீதி வழியாக மாங்கொல்லை.

    வடக்குமாட வீதி, லஸ்கார்னர், திருவள்ளூர் சாலை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி, அரங்கநாதர் சப்வே, கரும்பாடி அம்மன் கோவில், விருகம்பாக்கம் ஏரிக்கரை, தசரதபுரம் சாலை சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை, காசி தியேட்டர், பாரதிநகர், பச்சையம்மன் கோவில் ஏரிக்கரை, ஆற்காடு சாலை, கே.கே.நகர் சாலை சந்திப்பு.  #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    ×