என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Manifesto"

    • நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பியூஷ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாராளுமன்ற மக்களை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி மே மாதம் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது.

    பல்வேறு மாநில கட்சிகள் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கியுள்ள காங்கிரஸ் கட்சி ஏப்ரல் ஐந்தாம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை இன்று அறிவித்துள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ள ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில் 27 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், பியூஷ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், அருணாச்சல பிரசேதம், ஒடிசா, குஜராத், அசாம், சத்தீஷ்கர், மத்தயி பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, ஹரியானா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 24 உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை. அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து யாரும் உறுப்பினராக இடம்பெறவில்லை.

    • சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும்.
    • அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான்.

    மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா நேற்று வெளியிட்டது அதில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.-யுமான சசி தரூர் கூறியதாவது-

    யுசிசி (பொது சிவில் சட்டம்) சட்டத்தில் என்ன இருக்கிறது? அதன் வரைவு வராமல் அது குறித்து ஏதும் கூற முடியாது. மற்ற சமூகங்கள் வரைவு சட்டத்தை எதிர்க்கவில்லை என்றால் ... நமது சமூகத்தை பிளவுபடுத்தும் எதையும் நாங்கள் விரும்பவில்லை, அதை ஒருங்கிணைக்க வேண்டும்... என்பது நமக்கு இருக்க வேண்டும்.

    "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும். அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான். ஆனால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" கருத்தின்படி ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் தேர்தல் என நிர்ணயத்து விட்டால், மெஜாரிட்டியை இழந்த அரசு வீழ்ந்த பிறகு, ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் குடியரசு ஆட்சியை அமல்படுத்துவார்களா?. இது ஜனநாயக விரோதம் இல்லையா?.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    • பெண்களுக்கு மாதந்தோறும 2500 ரூபாய் வழங்கப்படும்.
    • வீட்டு சமையல் சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும். தீபாவளி மற்றும் ஹோலி 2 சிலிண்டர் இலவசம்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் பல்வேறு சலுகைகள் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளன.

    இந்த நிலையில் டெல்லி மாநில தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா இதை வெளியிட்டுள்ளார்.

    அதில் குறிப்பிட்டுள்ள முக்கியம்சங்கள்:-

    * கர்ப்பிணி பெண்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அதனுடன் 6 ஊட்டச்சத்து தொகுப்புகளும் சேர்த்து வழங்கப்படும். இது தவிர முதல் குழந்தைக்கு 5 ஆயிரம் ரூபாயும், 2-வது குழந்தைக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

    * பெண்களுக்கு மாதந்தோறும 2500 ரூபாய் வழங்கப்படும்.

    * வீட்டு சமையல் சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு இரண்டு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

    * மூத்த குடிமக்கள் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 10 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு பெறுவார்கள்.

    * 60 வயது முதல் 70 வயது மூத்த குடிமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை பென்சன் வழங்கப்படும். 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    * விதவை பெண்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    • பாஜக-வின் தேர்தல் அறிக்கையை பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால், கெஜ்ரிவால் சிறப்பாக செய்கிறார் என்பதுதான்.
    • எங்களுடைய தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகளில் பாஜக போட்டியிட விரும்புகிறது.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையின் முதற்பகுதியை வெளியிட்டார். அதில் கர்ப்பிணி பெண்களுக்கு 21 ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு 2500 ரூபாய், மூத்த குடிமக்களுக்கு பென்சன், வயது முதிர்ந்தவர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்டவை இடம் பிடித்துள்ளன.

    இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையின்படி, டெல்லியில் செயல்பட்டு வரும் மொஹல்லா கிளினிக்குகள் மூடப்படும் என விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    அரவிந்த் கெஜ்ரிவாலின் அனைத்து திட்டங்களும் தொடரும் என நட்டா தற்போது தெரிவித்துள்ளார். இது அவர்களுடைய தேர்தல் அறிக்கை எனச் சொல்கிறார். பிரதமர் மோடியும் அவருடைய விளம்பரங்களில் இதையே கூறியுள்ளார்.

    மொஹல்லா கிளினிக்குகள் டெல்லியில் மூடப்படும் என ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். இது எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. இன்று நாங்கள் டெல்லி முழுவதும் சென்று, மொஹல்லா கிளினிக்குகளை விரும்புகிறீர்களா? இல்லையா? என கேட்க இருக்கிறோம்.

    மொஹல்லா கிளினிக்குகளை ஆதரிப்பவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். மொஹல்லா கிளினிக்குகள் இடிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் பாஜக-வுக்கு வாக்களியுங்கள். கெஜ்ரிவால் செய்யும் அனைத்தையும் அவர்களே செய்ய வேண்டியிருந்தால், ஏன் பாஜகவை கொண்டு வர வேண்டும்? கெஜ்ரிவாலின் வேலையை கெஜ்ரிவால் சிறப்பாகச் செய்வார், ஏனென்றால் அவருக்கு அது தெரியும். இதை மக்களிடம் கேட்க இருக்கிறோம்.

    பொதுமக்கள் கூட, கெஜ்ரிவால் செய்ததை நீங்கள் செய்கிறீர்கள் என்றால், நாங்கள் உங்களை ஏன் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் எனக் கேட்கிறார்கள்.

    பாஜக-வின் தேர்தல் அறிக்கையை பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால், கெஜ்ரிவால் சிறப்பாக செய்கிறார். அவரது பணியை பாஜக பாராட்டுகிறது என்பதுதான்.

    எங்களுடைய தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகளில் பாஜக போட்டியிட விரும்புகிறது. இதைவிட துரதிருஷ்டம் என்னவாக இருக்க முடியும்?. இதைவிட மோசமான பார்வை கொண்ட கட்சியை எனது வாழ்நாளில் நான் பார்த்தது கிடையாது. அவர்களுக்கு டெல்லி குறித்து சிந்தனை, பார்வை, திட்டம் கிடையாது.

    இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பூஜ்யத்துக்குள் ராஜ்யம் நடத்துவதாக மத்திய மந்திரியும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கை ஜீரோ (பூஜ்யம்) என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையே சூப்பர் ஹீரோ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



    இந்த கருத்திற்கு மத்திய மந்திரியும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். நாகர்கோவில் அருகே பறக்கையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன் ராதாகிருண்ணன், “பாஜக தேர்தல் அறிக்கை பூஜ்யம் அல்ல. பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். அந்த பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்திருப்பது தெரியும்’ என்று குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    மத்திய அரசின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Modi #BJPSankalpPatra
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை அறிமுகப்படுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.



    தொடர்ந்து பேசிய மோடி கூறியதாவது:-

    நாம் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் மனங்களின் குரலாக எதிரொலிக்கின்றது. இந்த நாட்டின் எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் இது பிரதிபலிக்கின்றது. தேசியவாதம் என்பது நமது முன்னுரிமையான குறிக்கோள். நல்லாட்சி என்பது நமது தாரக மந்திரம்.

    நமது தேர்தல் அறிக்கையில் கால நிர்ணயத்துடன் நிறைவேற்றத்தக்க 75 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பன்நோக்கு பார்வையுடன் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முன்னேற வேண்டுமானால் முன்னேற்றம் என்பதை மிகப்பெரிய பொது இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்கு தூய்மை இந்தியா திட்டம் தந்த வெற்றியை நான் நினைவுகூர வேண்டும். இந்த திட்டம் இன்று எத்தனை பெரிய வெகுஜன இயக்கமாக இன்று மாறியுள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதே நமது இலக்கு. ‘ஒரே நோக்கம்-ஒரே திசையிலான பயணம்’ என்ற குறிக்கோளுடன் முன்னேற்றத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

    வரும் 2047-ம் ஆண்டு நமது 100-வது சுதந்திர திருநாளை கொண்டாடும்போது இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த நாடாக திகழ வேண்டும் என்பதுதான் நமது தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கடந்த ஐந்தாண்டுகளில் நல்லாட்சி, எளிமையான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி மற்றும் பொறுப்புள்ள ஆட்சியாக நாம் செயல்பட்டதால் அரசின் திட்டப்பலன்கள் உரியவர்களை சென்றடைய முடிந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019 #Modi #BJPSankalpPatra

    ×