search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - மு.க. ஸ்டாலின் பேச்சு
    X

    பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - மு.க. ஸ்டாலின் பேச்சு

    பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #dmk #congress #ponradhakrishnan
    சென்னை:

    கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  வசந்தகுமாருக்கு 'கை'  சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

    திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன். திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ.  ஆட்சியாளர்கள் தங்கள் சாதனையாக பேச எதுவும் இல்லாததால், எங்களை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் நிறைவேற்றினாரா?  நாகர்கோவில் நகருக்கு சுற்றுச்சாலை அமைப்பேன் என்ற வாக்குறுதியை செயல்படுத்தினாரா? கன்னியாகுமரியில் புதிய ரயில்வே கோட்டம் அமைப்பேன். காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பேன் போன்ற வாக்குறுதிகளை பொன்ராதாகிருஷ்ணன் நிறைவேற்றினாரா? போன்ற கேள்விகளை மு.க.ஸ்டாலின் எழுப்பினார். #mkstalin #dmk #congress #ponradhakrishnan
    Next Story
    ×