என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pmmodi"
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் கூடிய ஒரு மாற்றம் வர இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் கருத்து கணிப்பு என்று தவறான தகவலை பரப்பி இருக்கிறார்கள்.
எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். இந்தத் தேர்தலில் மோடி இல்லாத ஒரு அரசு தான் அமையும். தமிழ்நாட்டிலும் 37 தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
ஆனால் நேற்று வெளியான கருத்துக் கணிப்பில் ஒரு நிறுவனத்துக்கும் இன்னொரு நிறுவனத்துக்கும் இடையிலான வேறுபாடு சுமார் 100 இருக்கிறது. உண்மையான கணிப்பு என்றால் 5 தொகுதிகள்தான் வித்தியாசம் இருக்கும். நாளை மறுநாள் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதை மனதில் கொண்டு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நம்பகத்தன்மை இல்லை.
பா.ஜனதா ஏற்பாடு செய்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பாகவே தெரிகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை மோடி தன் கைக்குள் போட்டு இருக்கிறார். அவருக்கு ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது.
எனவே வாக்கு எண்ணிக்கையின் போது எந்த அத்துமீறலையும் செய்வார். அதனால் தான் முன்கூட்டியே இப்படி ஒரு கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
386 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 30 பேர் வீதம் கருத்து கேட்டு இருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும். நான் நமது தொண்டர்களுக்கு சொல்வதெல்லாம் வாக்கு எண்ணிக்கையின் போது உஷாராக இருக்க வேண்டும் என்பதுதான்.
தற்போது தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. நான் நந்தனத்தில் குடியிருக்கிறேன் எனது வீட்டுக்கு மஞ்சள் மற்றும் ஈஸ்ட் மேன் கலரில் தண்ணீர் வருகிறது. அதில் குளித்தால் நோய்கள் வரும். ஏற்கனவே பருவமழை பொய்த்துவிட்டது.
நீர் பற்றாக்குறை வரும் என்பது தெரிந்திருந்தும் தமிழக அரசு முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அஸ்லம் பாட்ஷா, ஜோதி ராஜன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகரன், எம்.எஸ்.திரவியம் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி:
திருச்சியில் நடைபெற்ற விழாவில் நடிகர் எஸ்.வி. சேகர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதார அடிப்படையில் தான் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். அவரது ஆசையை மோடி நிறைவேற்றி இருக்கிறார். இப்போது மோடி அஸ்திவாரம் தான் போட்டு இருக் கிறார். அதை கண்டே பலர் ஆடிப்போய் இருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் திருடர்கள், கடத்தல் காரர்களுக்கு தான் பாதிப்பு.
திருடர்களுக்கு போலீசை கண்டால் பிடிக்காது. அதனால் தான் எதிர்க்கட்சிகளுக்கு மோடியை பிடிக்க வில்லை. வெறும் அரசியல் மட்டுமே செய்து கொண்டு இருக்கக்கூடாது. அடுத்த தலைமுறையை பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறவர்களை தட்டி விடக்கூடாது.
தமிழ்நாட்டில் மோடியை பற்றி பேசுவது அனைத்தும் கற்பனை கதைகள். மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் கிடையாது. தேர்தலில் மோடி 300 இடங்களுக்கு மேல் பெற்று மீண்டும் பிரதமராக வருவார்.
மோடி கொண்டு வந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அங்கீகரித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்து மதத்தை கேவலப்படுத்தக்கூடிய எந்த செயலையும் மற்ற மதத்தினர் ரசிப்பது இல்லை என்பது தான் உண்மை.
இந்துக்கள் பொறுமைசாலிகள். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை 23-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணும்போது தெரிந்து கொள்வார்கள். கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. நான்கூட முன்பு கமல்ஹாசன் தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்று தவிர்க்க முடியாத இடத்துக்கு வருவார் என்று கூறி இருந்தேன். ஆனால் அவர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கமல்ஹாசனின் கட்சியே இல்லாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடையும் நேரத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நிருபர்களை சந்தித்தார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.
மோடி பிரதமராக பதவி ஏற்ற 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பில் மோடி “நான் உங்களுடைய கேள்விகள் எதற்கும் பதில் அளிக்க முடியாது. ஏனெனில் இது அமித்ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு என்று கூறி எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.
இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மோடி ஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் பத்திரிகையாளர் சந்திப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது. அவர் நிருபர்கள் சந்திப்புக்கு வந்தது எங்களுக்கு பாதி வெற்றி கிடைத்தது. அடுத்த முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பதில் அளிக்க அமித்ஷா அனுமதி அளித்தால் நல்லது.
இவ்வாறு ராகுல் காந்தி கிண்டலாக தெரிவித்தார்.
சூலூர்:
சூலூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று 2-வது கட்ட பிரசாரம் செய்தார். முதலிபாளையம், முத்து கவுண்டன் புதூர், குரும்ப பாளையம்,கரவழி மாதப்பூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் கட்சி தி.மு.க. அல்ல. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி. கைத்தறி நெசவாளர்களுக்கும், தி.மு.க.வுக்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. அந்த உறவோடு தான் உங்களை பார்க்கிறோம்.
ஆட்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது தான் இருப்பவர்களுடைய கவலையாக இருக்கிறது. இந்த ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சியாக உள்ளது. அதனை தாங்கி பிடிப்பது மோடி அரசு.
மத்திய அரசு எது சொன்னாலும் கூனி குறுகி கேட்கும் ஆட்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி உள்ளது.
ஜி.எஸ்.டி.யால் வணிகர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜி.எஸ்.டி. பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
கைத்தறி தொழில் நவீனமயமாக்கப்படும். கைத்தறிக்கு தேவையான உபகரணங்கள் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படும். கைத்தறி ரகங்களை விற்க கண்காட்சி அரங்குகள் ஏற்படுத்தப்படும்.
மற்ற கட்சிகள் பிரசாரத்திற்கு வருவார்கள். வென்றால் அதை செய்வோம். இதை செய்வோம் என்பார்கள். வென்றதும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.
இதற்கு உதாரணம் பிரதமர் மோடி. ஆண்டுக்கு 2 கோடி பேர் வீதம் 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். இது வரை ஒருவருக்கு கூட வேலை கிடைக்கவில்லை.
23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.22 தொகுதி இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் 119 இடங்களை பெற்று நாம் ஆட்சி அமைப்போம். தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் மத்தியிலும், மாநிலத்திலும் வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதனை எதிர்த்து நான் நோட்டீஸ் அனுப்பினேன். இவ் விவகாரத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் பெற்ற தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்ற விடுமுறை காரணமாக அ.தி.மு.க. மேல் முறையீடு செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகார் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
55 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் ஆட்சியில் செய்யமுடியாத முன்னேற்றத்தை, எங்கள் பாஜக ஆட்சி 55 மாதங்களில் செய்து முடித்திருக்கிறது. 5 ஆண்டுகளில் கரை படியாத நேர்மையான ஆட்சியினை பாஜக நடத்தி இருக்கிறது. மேலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. நான் இதை கோவில் நகரமான தியோகார் பகுதியில் இருந்து கூறுவதை பெருமையாக கருதுகிறேன்.
இது மட்டுமின்றி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான அரசை நடத்தும் பொறுப்பை தந்துள்ளனர். இதனால் மிகுந்த பெருமைக்குரியவன் ஆகிறேன். உங்கள் காவலாளியான நான் எப்போதும் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவதையே கடமையாக கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் தனது பேச்சில் குறிப்பிட்டார். பள்ளப்பட்டி என்ற ஊரில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்து அவர் இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியானது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கமல்ஹாசனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. அவர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்து பயங்கரவாதி என்ற பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்த ஒரு தனிநபரையும் காயப்படுத்துவதில்லை. அதுபோல யாரையும் கொலை செய்வதையும் இந்து மதம் அனுமதித்ததில்லை.
அந்த அடிப்படையில் பார்த்தால் எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. பயங்கரவாதியாக ஒருவர் இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது.
இவ்வாறு பிரதமர் மோடி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்த மதமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை பயங்கரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன்.
இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, பயங்கரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.
சூலூர்:
சூலூர் தொகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், நீலாம்பூர், குரும்பபாளையம், கருமத்தம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சுற்றி வருகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். எனக்கு ஆசை இருந்தால் எனது சித்தி (சசிகலா) சிறைக்கு செல்லும்போதே நான் முதல்-அமைச்சர் ஆகி இருக்கலாம். இல்லை என்றால் ஜெயலலிதா இறந்த அன்றே ஆகி இருக்கலாம்.
எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் ஓட்டு வாங்கியா முதல்-அமைச்சரானார். அவருடன் இருக்கும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அணி மாற முயற்சித்தனர். இது கூவத்தூரில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரியும்.
சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக்கியது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும்தான். அதுபோன்று முதல்-அமைச்சராக இருப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் தகுதியற்றவர், சசிகலாவை முதல்-அமைச்சராக மாற்ற வேண்டும் என்று சொன்னவர்களே அவர்கள்தான். 2 நாட்கள் எங்களுடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா சொன்னதும், ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர், அங்கு அமர்ந்து தர்மயுத்தம் தொடங்குகிறேன் என்று நாடகம் ஆடினார்.
ஓ.பன்னீர்செல்வம் சரியில்லை என்பதால்தான், கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக வைத்தோம். அடுத்த நாளே அவர் துரோகம் செய்துவிட்டார்.
இந்த கட்சியை காப்பாற்ற டி.டி.வி.தினகரன் வந்து உள்ளார் என்று ஜெயலலிதாவே கூறிவிட்டு சென்றார் என செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினாரே?. ஆனால் இப்போது தினகரனுக்கு எந்த ஊர் என்று கூறுகிறார். இதுதான் கலிகாலம். எந்த ஒரு துரோகத்துக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. 7 ஜென்மத்துக்கும் அதை அனுபவித்து ஆக வேண்டும்.
18 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்தார்கள். அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்துவிடக்கூடாது என்று மோடியை சந்தித்தார்கள். ஆனால் மோடியாலும் முடியவில்லை. அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. அதில் ஒரு தொகுதியில்கூட அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது என்று உளவுத்துறை கூறி இருக்கிறது. இதனால்தான் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்து உள்ளனர். அதற்கும் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. எனவே வருகிற 23-ந் தேதி நீங்கள் வீட்டிற்கு செல்வது உறுதி.
இவர்களுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்துவிட்டு, தி.மு.க.வுடன் சேர்ந்து எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தார்கள். அதற்கு காரணம் மோடிதான். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர அவர்தான் காரணம்.
வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மோடி நினைத்தால் கூட தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்காது. அவரால் காப்பாற்றவும் முடியாது.
துரோகத்தை வேரறுக்க, துரோகம் என்பதை இனி அரசியல்வாதிகள் பதவிக்காக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். தன்னை முதல்-அமைச்சராக்கியவருக்கு துரோகம் செய்தவர்கள், மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள். நீங்கள் அனைவரும் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவுக்குத்தான் ஓட்டுப்போட்டீர்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்கவில்லை. தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தயவு செய்து நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு தலைநிமிரவும், தமிழக மக்கள் வாழ்வு மலரவும், யாரிடமும் மண்டியிடாத, தமிழக மக்களுக்காக ஜெயலலிதா எப்படி செயல் பட்டாரோ அதுபோன்று இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அவருக்கும், மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.
மோடி மீதும், பா.ஜனதா மீதும் மம்தாபானர்ஜி தினமும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அந்த வரிசையில் நேற்று அவர் புதிய குற்றச்சாட்டு ஒற்றை வெளியிட்டார். பர்கானாஸ் மாவட்டம் அசோக் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பண பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களுக்கு பா.ஜனதாவினர் ஏராளமான பணத்தை அள்ளி கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாரதிகோசின் காரில் இருந்து ஏராளமான பணத்தை கைப்பற்றி உள்ளனர். ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலர் தங்களுக்கு வழங்கப்படும் இசட்பிளஸ், ஒய் பிளஸ் பாதுகாப்பு படையை பயன்படுத்தி பணப்பெட்டிகளை கடத்தி செல்கிறார்கள்.
தங்களது வாகனத்திலேயே கட்டு கட்டாக பணத்தை அடுக்கி பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்கள். தேர்தல் சமயத்தில் ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகிறார்கள்.
பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர்களும் பிரசாரத்துக்கு வரும் போது அவர்களது ஹெலிகாப்டர்களையோ, கார்களையோ பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த கார்களில் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை கடத்துவதே இதற்கு காரணம் ஆகும்.
பிரதமர் மோடி வந்த விமானத்தில் இருந்து ஒரு பெட்டி எடுத்து செல்லப்படுவதை சில தினங்களுக்கு முன்பார்த்தோம். அதன் பிறகு படம் எடுக்க தடை செய்து விட்டார்கள். எனவே பா.ஜனதா தலைவர்களால் இதுபோல எத்தனை பெட்டிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டதோ? யாருக்கு தெரியும்.
பணத்தால் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம். எப்போது பணம் கொண்டு சென்றாலும் கண்டுபிடித்து விடுவோம்.
இரவில் பணத்தை பட்டு வாடா செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த பணத்தை எல்லாம் விழித்திருந்து பிடிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறேன். பிரசாரம் ஓய்ந்து விட்டதால் எளிதாக பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது.
இவ்வாறு மம்தாபானர்ஜி கூறினார்.
புதுடெல்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் பற்றி ஆவணங்களின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று சுப் ரீம்கோர்ட்டு கடந்த மாதம் 10-ந்தேதி அறிவித்தது.
இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நாட்டின் காவலாளி (பிரதமர் மோடி) திருடன் என்பதை சுப்ரீம் கோர்ட்டே ஒப்புக் கொண்டு விட்டது” என்றார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ராகுல் தனக்கு சாதகமாக திரித்து கூறுவதாக பா.ஜனதா பெண் எம்.பி. மீனாட்சி லெகி, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ராகுலிடம் விளக்கம் கேட்டு கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது.
அதற்கு பதில் அளித்த ராகுல், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க வில்லை. இதையடுத்து 2-வது தடவையாக ஒரு மனு மூலம் ராகுல் பதில் அளித்தார்.
அந்த விளக்கமும் சுப்ரீம் கோர்ட்டுக்கு திருப்தி தர வில்லை. இதைத் தொடர்ந்து மோடியை திருடன் என்று கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக ராகுல் பதில் அளித்தார். இதைத் அடுத்து இந்த வழக்கை முடித்து வைக்குமாறு ராகுல் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
ஆனால் இதை பா.ஜனதா பெண் எம்.பி. மீனாட்சி லெகி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஏற்கவில்லை. அவர் வாதாடுகையில் சில கோரிக்கைகளை முன் வைத்தார். அவர் கூறியதாவது:-
பிரதமரை மோசமாக விமர்சித்த விவகாரத்தில் ராகுல் கேட்டுள்ள மன்னிப்பை இந்த கோர்ட்டு ஏற்க கூடாது. அவரது மனுவை நிராகரிக்க வேண்டும்.
ராகுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையெனில் அவரை கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் ராகுல் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு வக்கீல் முகுல் ரோத்தகி வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்