என் மலர்
நீங்கள் தேடியது "ஜார்க்கண்ட்"
- முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது.
- அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்
உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அரியானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குமார் குஷாக்ரா 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட்டானார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 263 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அரியானா அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் அணி தனது முதல் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது.
- சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது.
- அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்
உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன. இரு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அரியானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குமார் குஷாக்ரா 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட்டானார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது. இதையடுத்து 263 ரன்கள் என்ற இலக்குடன் அரியானா அணி களமிறங்கவுள்ளது.
- சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெறுகிறது.
- இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட்- அரியானா அணிகள் மோதவுள்ளன.
புனே:
உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மத்திய பிரதேசம், பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான், ஆந்திரா, ஜார்க்கண்ட், ஐதராபாத், அரியானா ஆகிய 8 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. பிரிவு 1ல் மும்பை, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான் அணிகளும், பிரிவு 2ல் பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் அணிகளும் உள்ளன.
இந்த அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின. அதன் முடிவில் ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட்- அரியானா அணிகள் மோதவுள்ளன.
இரு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஜார்க்கண்ட் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது.
புனே:
சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், புனேவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜார்க்கண்ட் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான இஷான் கிஷன் 30 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்தார்.
மத்திய பிரதேச அணி சார்பில் வெங்கடேஷ் அய்யர் 3 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 182 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேச அணி களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்ஷ் கவாலி 61 ரன்னில் அவுட்டானார்.
ஹர்பிரீத் சிங் பாட்டியா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை வெற்றிக்கு போராடினார்.
இறுதியில், மத்திய பிரதேச அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணி திரில் வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் அணி தான் ஆடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
- ஜார்க்கண்ட் கல்வி மந்திரியாக பதவி வகித்து வந்த ராம்தாஸ் சோரன் காலமானார்.
- அவரது மறைவை ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
டேராடூன்:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கத்சிலா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்தாஸ் சோரன். மாநில பள்ளி கல்வி மந்திரியாக பதவி வகித்து வந்த ராம்தாஸ் சோரன், சமீபத்தில் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராம்தாஸ் சோரன் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவை ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தினார்.
இதுதொடர்பாக, ஹேமந்த் சோரன் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இதுபோன்று எங்களை விட்டு விட்டு நீங்கள் இப்படி சென்றிருக்கக் கூடாது என பதிவிட்டுள்ளார். ராம்தாஸ் சோரனின் மகன் சோமேஷ் சோரனும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.
- 81 வயதான ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை 3 முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார்.
- ஷிபு சோரன் எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
81 வயதான ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார். எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.
ஷிபு சோரனின் மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் தனது தந்தையின் மரணச் செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். அவரது பதிவில், "அன்பான டிஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஜாம்ஷெட்பூரில் பெய்து வரும் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- அங்குள்ள குடியிருப்புப் பள்ளியில் 162 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.
ராஞ்சி:
வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. ஜார்க்கண்ட் முழுதும் பருவமழை தீவிரமாகி உள்ளது. ஜூலை 5-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராஞ்சி வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் 162 மாணவர்கள் சிக்கித் தவித்தனர்.
பள்ளி கட்டிடம் நீரில் மூழ்கியதால் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் மேல் தளத்துக்கு மாற்றினர். அங்கு அவர்கள் இரவு முழுவதும் இருந்தனர்.
தகவலறிந்து அதிகாலையில் அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் கிராம மக்களின் உதவியுடன் மாணவர்களை பத்திரமாக மீட்டனர். மீட்புப் பணிக்காக படகுகள் பயன்படுத்தப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தைகள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
- பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 27 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- பப்பு லோஹாரா தலைக்கு ரூ.10 லட்சம் பிரபாத் கஞ்சு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.
மாவோயிஸ்டுகளை கூண்டோடு ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மண்டலத்தில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 27 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய தலைவர் பசவராஜ் கொல்லப்பட்டார்.
70 வயதான பசவ ராஜு, இந்தியாவின் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்டு தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது தலைக்கு ரூ. 10 கோடி வரை பரிசு அறிவிக்கப்பட்டது.
இவரைப் போலவே ஜன்முக்தி பரிஷத் என்ற மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களான பப்பு லோஹாரா மற்றும் பிரபாத் கஞ்சு ஆகியோரை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.
பப்பு லோஹாரா தலைக்கு ரூ.10 லட்சம் பிரபாத் கஞ்சு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளை இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது கடுமையான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்த மோதலில் மாவோயிஸ்டு முக்கிய தலைவர்களான பப்பு லோஹாரா மற்றும் பிரபாத் கஞ்சு இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த மோதலின் போது மாவோயிஸ்டு ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் வேட்டை நடந்து வருகிறது.
- பொகாரோ மாவட்டத்தில் மின்னல் தாக்கி 2 பேர் பலியாகினர்.
- நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில் கனமழை மற்றும் பலமான காற்றுடன் கூடிய மின்னல் தாக்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளானது.
மாவட்டத்தின் இரு பகுதிகளில் பெய்த கனமழையின் போது நீரில் மூழ்கி 5 பேரும், 2 பேர் மின்னல் தாக்கியும் உயிரிழந்தனர்.
சந்தன்கியாரி பகுதியில் உள்ள கம்ஹாரியா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் குளித்தபோது ஒரு பெண் மற்றும் அவரது 2 மகள்கள் உள்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மின்னல் தாக்கி ஒரு விவசாயி மற்றும் 7 வயது சிறுமி உயிரிழந்தனர். மழை தொடர்பான இறப்புகளில் 7 பேர் பலியாகினர் என அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.
- ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார்.
கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இன்று ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினார்.
ஜார்க்கண்டில் முதலீடு செய்வது தொடர்பாக இருவரும் விவாதித்தனர் என்று கூறப்படுகிறது.\
- சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்
- கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.
ஜார்க்கண்டில் பங்ச்சந்தையில் பணத்தை இழந்ததால் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சிட்கோரா காவல் பகுதியில் வசித்தவர் சஞ்சீவ் குமார் (25 வயது). இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
குமார், ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பங்குச் சந்தையில் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பங்குச் சந்தையில் தனது பணத்தை இழந்ததால் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில், பலமுறை கதவைத் தட்டியும் அவர் பதிலளிக்காததால், அவரது குடும்பத்தினர் அவரது அறைக்குள் நுழைந்து பார்த்தபோது கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவிட்டனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வளர்கின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050
- ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
- ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
திருப்பூர்:
ஆலப்புழா, மங்களூரு ரெயில்கள் புறப்படும், சென்று சேரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தினமும் மாலை 4:05 மணிக்கு கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 5:50 மணிக்கு சென்னை சென்று சேரும். இன்று முதல் இந்த ரெயில் மாலை 3:40 க்கு ஆலப்புழாவில் இருந்து புறப்படும். 20 நிமிடம் முன்பாக காலை 5:30 மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 10:33 க்கே வந்து விடும்.இதுவரை மதியம் 1:30 க்கு மங்களூருவில் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில் (12602) இனி மதியம் 1:55க்கு புறப்படும். சென்னைக்கு மறுநாள் காலை 5:35மணிக்கு பதில் மாலை 6:10மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 10:30மணிக்கு பதிலாக10:45 மணிக்கு வரும்.
ெரயில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து எர்ணாகுளத்துக்கு நவம்பர் 14, 21, 28ந் தேதி சிறப்பு ெரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக நவம்பர் 17, 24, டிசம்பர் 1ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து ஹட்டியாவுக்கு ெரயில் இயக்கப்படும். இந்த ெரயில் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பயணித்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை கடந்து ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியா சென்று சேர்கிறது. 5 ஏ.சி., 11 படுக்கை வசதி, 3 பொது பெட்டி உள்ளிட்ட 22 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும். ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
கேரள மாநிலம், கோழிக்கோடு - கண்ணனூர் வழித்தடத்தில், தலசேரி - எடக்கோடு இடையே மின்வழித்தடம் சிக்னல் பராமரிப்பு மேலாண்மை பணி நடக்கிறது. இதனால் சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு இயக்கப்படும் ெரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று கோழிக்கோடு வரை மட்டும் இயக்கப்படும். வடகரா, தலச்சேரி, கண்Èர், கண்ணபுரம், பையனூர்,கொடிகுலம், காசர்கோடு வழியாக மங்களூரு செல்லாது. அதே நேரம், மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ெரயில் இயக்கத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.






