என் மலர்
நீங்கள் தேடியது "Wild elephant attacks"
- நேற்று ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- பாதுகாப்புக் கருதி சக்கரதர்பூர் ரயில்வே கோட்டத்தில் 6 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரே ஒரு ஒற்றை காட்டு யானை தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பலரையும் தாக்கிவந்த அந்த ஆண்யானை, நேற்று இரவு (ஜன.5) நோவாமுண்டி மற்றும் ஹட்கம்ஹாரியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புகுந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரை மிதித்துக் கொன்றது. நேற்று முன்தினம் இதே யானை கோல்ஹான் பகுதியில் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் உட்பட 7 பேரைக் கொன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் யானையை மீண்டும் காட்டிற்குள் விரட்ட, மேற்கு வங்கத்தின் பாங்குரா (Bankura) மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், யானைகளின் நடமாட்டம் காரணமாக பாதுகாப்புக் கருதி சக்கரதர்பூர் ரயில்வே கோட்டத்தில் 6 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக தலா ரூ.20,000 நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. யானை தாக்குதலைத் தடுக்க வனத்துறை தவறிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் மது கோடா மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த மாவட்டத்தில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
- 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
- வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை துடியலூரை அடுத்த கதிர்நாயக்கன் பாளையம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. அங்கு மத்திய ரிசர்வு போலீஸ் பயிற்சி மையம் (சி.ஆர்.பி.எப்) செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி பள்ளியில் அதிகாரியாக நெல்லையை சேர்ந்த ராதிகா மோகன் (56) என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் வேலையை முடித்து வீட்டு மற்றொரு பெண் அதிகாரியுடன் வளாகத்தில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது வளாகத்தில் உள்ள உடைந்த மதில் சுவர் வழியாக ஒற்றை காட்டு யானை உள்ளே புகுந்தது. இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனை பார்த்த யானை அவர்களை துரத்தியது.
ராதிகா மோகன் அருகில் வந்த யானை அவரை லேசாக தட்டி அங்கிருந்து சென்றது. இதில் அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
பின்னர் பலத்த காயம் அடைந்த அதிகாரி ராதிகா மோகனை மீட்டு வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக துடியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் இருந்து யானையை வெளிேய விரட்டினர். இந்த நிலையில் கதிர்நாயக்கன் பாளையம் லட்சுமி நகர் பகுதியில் ஒரு ேதாட்டத்தில் ஒற்றை காட்டுயானை புகுந்து உலாவுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினர்.சி.ஆர்.பி.எப் மையத்தில் இருந்து வெளியே வந்த யானை லட்சுமி நகர் பகுதியில் வந்திருக்கலாம் என வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இனி யானை அந்த பகுதிகளில் வராமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.






