search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people arrest"

    திருக்கோவிலூர் அருகே லாரிகளில் மணல் கடத்திய 3 டிரைவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூர் கூட்ரோட்டில் அரங்கநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 3 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரி டிரைவர்கள் சேலம் மாவட்டம் புலியாக்குறிச்சியை சேர்ந்த திராவிடமணி(வயது 27), கள்ளக்குறிச்சி தாலுகா லட்சியம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(50), திண்டிவனம் அருகே உள்ள நற்குணம் கிராமத்தை சேர்ந்த சிவா(28) ஆகியோரை போலீசார் கைது செய்து லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

    போத்தனூர் அருகே கத்திமுனையில் வாலிபரை மிரட்டி காரை வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை இடையர் பாளையத்தை சேர்ந்தவர் ஆசிக் (வயது 23).

    இவர் தனது காரில் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது காரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி ஆசிக்கின் கார் மற்றும் அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி போத்தனூரை சேர்ந்த சயித் பக்ருதீன்(40), சயித் அலி(25), யாசர் மூசாபத் (23), ஆசிஸ் ரகுமான்(22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார், ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் சயித்பக்ருதீன், சயித் அலி, யாசர் மூசாபத் ஆகியோர் அதேபகுதியில் ஒரு கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் பூஜை பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இந்த வழக்கில் ஜாகிர் உசைன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொள்ளையடித்த நகையை பங்குபோடுவதில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் உமாபதி. இவரது மகன் நவீன்குமார் (வயது 17). நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியில் சென்ற நவீன்குமார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தட்டான் மலை பகுதியில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. செங்கல்பட்டு டவுன் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக நவீன் குமாரின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், அபிஷேக் குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையடித்த நகையை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நவீன் குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது என்றார்.

    கொலையுண்ட நவீன் குமார் மற்றும் பிடிபட்ட அவரது நண்பர்கள் மீது பழைய குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. எனவே மனல் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. #tamilnews

    திருப்பதியில் தங்க நாணய மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் சிலர் தங்க நாணயங்களை தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்டு வருவதாக, திருப்பதி குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் அப்பண்ணா தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களுக்குச் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதி பாலாஜி காலனி சர்க்கிள் அருகில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    3 பேரும் வாயில்பாடு மண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணாரெட்டி, கலிகிரி மண்டலத்தைச் சேர்ந்த வெங்கடசிவாரெட்டி மற்றும் லட்சுமணன் எனத் தெரிய வந்தது.

    3 பேரும் கூட்டாக சேர்ந்து திருப்பதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம், தங்க நாணயங்களை தருவதாக கூறி, போலி தங்க நாணயங்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புக்கொண்டனர்.

    மேலும் திருப்பதி, சித்தூர், குண்டூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், நல்கொண்டா, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் பொதுமக்களிடம், தங்க நாணயங்களை தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறினர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்து 25 ஆயிரம், 2 கிராம் அசல் தங்க நாணயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    முசிறி நகர பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த நான்கு பேரை முசிறி போலீசார் கைது செய்தனர்.

    முசிறி:

    முசிறி அடுத்த மாங்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(45). நேற்று முசிறியிலிருந்து மாங்கரைப்பேட்டை செல்வதற்காக முசிறி நகர பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக ரமேஷ் காத்திருந்தார்.

    அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண் உட்பட 4 பேர் ரமேஷிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். அவர் சத்தம் போட்டார். உடனே 4 பேரும் தப்பி ஓடினர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தப்பி ஓடிய நான்கு பேரையும் பிடித்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் விசாரணை மேற்கொண்டதில் பிக்பாக்கெட் அடித்தவர்கள் தொட்டியத்தை சேர்ந்த உஷா (32), முசிறியை சேர்ந்த ராஜா (45), செல்வராஜ்(52), பெரியசாமி (37) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பிக்பாக்கெட் அடித்த ரூ ஆயிரம் மீட்கப்பட்டது. ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பெண் உள்பட நான்கு பேரையும் கைது செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா பதுக்கியதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 104 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை:

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதன் பேரில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி, பாப்பாபட்டி பகுதியில் கஞ்சா பதுக்கிய ஜெயக்குமார் (வயது 32), சந்திரன் (34), ராகதேவன் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

    செக்கானூரணி மீனாட்சி பட்டியில் வேளாங்கண்ணி என்பவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி பகுதியில் பரமன் (42), அவரது மனைவி லட்சுமி (36) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 1/2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அச்சம்பத்து பகுதியில் ராமசுப்பிரமணியன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கீரிப்பட்டி பகுதியில் போலித்தேவன் (45) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆஸ்டின்பட்டி, உச்சப்பட்டி, காந்திநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கிய சரஸ்வதி (62), கார்த்திக் பாலு (36) ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து 7 1/2 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூ. 17 ஆயிரத்து 200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் 104 கிலோ கஞ்சா பதுக்கியதாக 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கும்பலை பிடிக்கும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

    கிருமாம்பாக்கம் அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருமாம்பாக்கம்:

    கிருமாம்பாக்கம் அருகே மணப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 46). விவசாயி.

    இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் 2 மணியளவில் இவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கும் சத்தம் கேட்டது.

    திடுக்கிட்டு ஜெயராமன் எழுந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுபற்றி உடனே ஜெயராமன் கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் கிருமாம்பாக்கம் ஏரிக்கரையில் சந்தேகத்திற் கிடமான முறையில் நின்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பேட் பகுதியை சேர்ந்த ராஜி (35) மற்றும் ஜானகிராமன் (19) என்பதும் இவர்கள் ஜெயராமன் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் புரோக்கர் கைது செய்யப்பட்டனர். #bribe

    திருவண்ணாமலை:

    சென்னையை சேர்ந்தவர் சுனில்குமார். இவர், திருவண்ணாமலை பெரிய தெருவில் லாட்ஜ் வைத்துள்ளார். சுனில்குமார், கொசமடத் தெருவில் ஒரு நிலத்தை வாங்கி பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருவண்ணாமலை டவுன் சர்வேயர் (நில அளவையர்) கருணாகரனிடம் (வயது 50) விண்ணப்பித்தார்.

    பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு சர்வேயர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து, தனது லாட்ஜ் மேலாளர் ஜெயச்சந்திரன் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சுனில்குமார் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சரவணக்குமார் தலைமையிலான போலீசார் ரூ.20 ஆயிரம் பணத்தில் ரசாயனம் தடவி ஜெயச்சந்தி ரனிடம் இன்று கொடுத்து அனுப்பினர்.

    டி.எஸ்.பி. சரவணக் குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் சர்வேயர் அலுவலகத்திற்கு சென்று மறைந்து இருந்தனர். சர்வேயர் கருணாகரனிடம், ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை லஞ்சமாக ஜெயச்சந்திரன் கொடுத்தார்.

    பணத்தை சர்வேயர் கருணாகரன் பெற்றபோது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், லஞ்சம் வாங்க உடந்தையாக புரோக்கர் மூர்த்திையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #bribe

    விருத்தாசலம் அருகே பெயிண்டரை கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). பெயிண்டர். இவருக்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த நவீன், பரத்ராஜ், சுகுந்த், பிரேம், சுரேஷ் மற்றும் சிலர் நண்பர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் சதீஷ்குமார் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய நவீன் உள்ளிட்டவர்கள் சதீஷ்குமாரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

    இதில் முகம், கைகளில் காயமடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் சதீஷ்குமாரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார்.

    இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைராகி மடத்தைச் சேர்ந்த பரத்ராஜ் (26), மேட்டுத்தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    கோவை நகரில் பெண்களை குறி வைத்து நகைபறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை போத்தனூர், ராமநாதபுரம் பகுதிகளில் பெண்களை குறி வைத்து நகைப்பறிப்பில் கும்பல் ஈடுபட்டது. மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க உதவி கமி‌ஷனர் சோமசுந்தரம் மேற்பார்வையில் தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    விசாரணையில் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது. போத்தனூரை சேர்ந்த விக்னேஷ் (வயது 20), மணிகண்டன் (19) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் போத்தனூர், ராமநாதபுரம் பகுதியில் 5 பெண்களிடம் நகைப் பறித்ததை ஒப்புக் கொண்டனர்.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து 15 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    வேளச்சேரியில் லாட்ஜில் சூதாட்டமாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    வேளச்சேரி அன்னை இந்திரா நகரில் உள்ள லாட்ஜில் அறைகளை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் லாட்ஜில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது 4 அறைகளை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது.

    சூதாட்டத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டையை சேர்ந்த ஜான்சன், புரசைவாக்கத்தை சேர்ந்த ஜோசப், மேற்கு தாம்பரத்தை சேர்ந்த முத்து, குன்றத்தூரை சேர்ந்த வெங்கடேஷ், கொளத்தூர் கங்கேஸ்வரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சூதாட்டம் நடந்த லாட்ஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் சரவணன், முன்னாள் கவுன்சிலரான இவர் தினகரன் ஆதரவாளர் ஆவார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளார்.

    ×