search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முசிறி"

    • முசிறி சார்பு நீதிமன்றத்தை மாவட்டம் முதன்மை நீதிபதி ஆய்வு செய்தார்
    • விரைவில் திறப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு முசிறிக்கு வருகை புரிந்து, சார்பு நீதிமன்றம் அமைவதற்கு, வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய குற்றவியல் நீதிமன்ற கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுப்பணித்துறையினர்க்கு கட்டிடங்களை புனாரமைப்பு செய்து விரைவில் திறப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆய்வின் போது மாவட்ட உரிமையியல் நீதிபதி பாக்கியராஜ், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜெயசந்திரன், வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன், அரசு வழக்கறிஞர் சப்தரிஷி, மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன், வழக்கறிஞர்கள் ராஜன், பத்ம ராஜன், ரெங்கராஜன், விமல் ராஜ், ராஜசேகரன் வட்டாட்சியர் சண்முகப்பிரியா மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இருந்தனர்.

    முசிறி அருகே மொபட்டில் சென்ற முதியவர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி பரிதாபமாக இறந்தார்.
    முசிறி:

    முசிறி அடுத்த ஏவூர் அந்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (60) தொழிலாளி. இவர் கடந்த 1-ம் தேதி தனது மொபட் வண்டியில் முசிறிக்கு வந்தவர் வேலைகள் முடித்து கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். 

    அப்போது முசிறி அருகே பெரமூர் அய்யனார்கோவில் அருகில் மொபட் வண்டியில் சென்று கொண்டிருந்த துரைராஜ் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்துள்ளார். 

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த வரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்  துரைராஜ் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×