search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home robbery try"

    திருப்போரூரில் வீட்டுக்குள் அரிவாளுடன் புகுந்த கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் வேண்டவராசி அம்மன்கோயில் அருகே வசித்து வருபவர் ரவி. டைலர் கடைவைத்துள்ளார். நேற்று இரவு வீட்டில் ஏ.சி. வேலை செய்யாததால் முன்பக்க வீட்டை பூட்டி விட்டு தூங்கினார்.

    அதிகாலை 3 மணி அளவில் மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்தனர். சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கம் முன்னாள் கவுன்சிலர் வைன் குரல் கொடுத்து கொண்டு எழுந்து வந்தார். அவரை பார்த்தவுடன் கொள்ளையர்கள் 2 பேர் அரிவாளுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனணர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் சாலையில் தீப்பொறி வரும் அளவுக்கு தேய்த்தவாறு மிரட்டியபடி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொள்ளையில் 2 பேர் ஹெல்மெட் அணிந்தும் 4 பேர் முகத்தை மூடியபடியும் இருந்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருமாம்பாக்கம் அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருமாம்பாக்கம்:

    கிருமாம்பாக்கம் அருகே மணப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 46). விவசாயி.

    இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் 2 மணியளவில் இவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கும் சத்தம் கேட்டது.

    திடுக்கிட்டு ஜெயராமன் எழுந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுபற்றி உடனே ஜெயராமன் கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் கிருமாம்பாக்கம் ஏரிக்கரையில் சந்தேகத்திற் கிடமான முறையில் நின்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பேட் பகுதியை சேர்ந்த ராஜி (35) மற்றும் ஜானகிராமன் (19) என்பதும் இவர்கள் ஜெயராமன் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    ×