search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people arrest"

    சங்கரன்கோவிலில் தொழிலாளி மீது தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 35). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் ஏற்பட்ட துக்க நிகழ்வின் போது இவருக்கும், அந்த ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாக்கியராஜ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று கருணாகரன் வீட்டில் இறந்த உறவினருக்கு விஷேசம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக சங்கரன்கோவிலுக்கு வந்து விட்டு பாட்டத்தூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில் கருணாகரனை வழிமறித்த அதே ஊரை சேர்ந்த பாக்கியராஜ், மாரியப்பன் (40), சுரேஷ் (26), மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (16) மற்றும் அவர்களது உறவினர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி உள்ளிட்டோர் வழிமறித்தனர். இதில் இவர்களுக்கும், கருணாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் கருணாகரனை அவதூறாக பேசி அடித்து உதைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் காயமடைந்த கருணாகரன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுண் போலீசார் பாக்கியராஜ், மாரியப்பன், சுரேஷ், ஆனந்தராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய சமுத்திரபாண்டியை தேடி வருகின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபிதாபி ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சிலரது உடமைகளை சோதனை செய்ததில் தங்கப் பேனா, சாக்லேட், பேப்பர், ஸ்குரு டிரைவர், சோப்பு பவுடர் ஆகியவற்றில் தங்ககட்டிகளை பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது.

    சென்னை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 6 பேரிடம் இருந்து 2.6 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்து கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.78 லட்சமாகும். சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.

    சென்னையில் இருந்து நேற்று இரவு இலங்கை சென்ற பயணிகளை சோதனை செய்தனர். அப்போது இலங்கை பயணி ஒருவரிடமும், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகளிடமும் சோதனை செய்தபோது அமெரிக்க டாலரும், ஐரோப்பிய நாட்டின் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ரூ. 16 லட்சம் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடலூரில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    கூடலூர்:

    கூடலூர் வனப்பகுதியில் சந்தனம், ரோஸ்வுட், வெண்தேக்கு, ஓமம் உள்பட விலை உயர்ந்த மரங்கள் உள்ளது. இதனால் கேரளா- கர்நாடகா மற்றும் தமிழக எல்லைகள் இணையும் பகுதியில் வனத்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பல இடங்களில் நின்றிருந்த சந்தன மரங்களை இரவு நேரத்தில் மர்ம கும்பல் வெட்டி கடத்தி சென்றது. இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கூடலூர் ஆவின் பால் வளாகம், கோத்தர்வயல் பகுதியில் கடந்த வாரம் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. இது குறித்து கூடலூர் வன அலுவலர் ராகுல் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையில் வனவர் ரவிச்சந்திரன், வன காப்பாளர்கள் பிரகாஷ், சங்கர், பிரதீப் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த வனத்துறை தனிப்படையினர் நேற்று முன்தினம் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர். அப்போது இரவு 2 மணிக்கு கூடலூர் சின்னப்பள்ளிவாசல் தெருவில் இருந்து கோத்தர்வயலுக்கு செல்லும் சாலையில் சந்தேகப்படும்படி 4 பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் கையில் மரக்கட்டைகள் வைத்திருந்தனர்.

    வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் மரக்கட்டைகளை போட்டு விட்டு இருள் சூழ்ந்த பகுதிக்குள் தப்பி ஓடினர். இதனால் அவர்களை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் அந்த கும்பல் விட்டு சென்ற மரக்கட்டைகளை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சந்தன மரங்கள் என தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நாலாபுறமும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வெவ்வேறு இடங்களில் பதுங்கி இருந்த 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கூடலூர் ஈட்டிமூலா வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கூடலூர் பகுதியில் பல இடங்களில் வளர்ந்து இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியது தெரிய வந்தது.

    அவர்களிடம் இருந்த சந்தன மரக்கட்டைளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கூடலூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கர்நாடகா மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த லிங்கராஜ் (வயது 25), அஜிஷ் (43), கூடலூர் 1-ம் மைல் பகுதியை சேர்ந்த ஓஜீர் (39), ஜைனூல்ஆபிது (35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது குறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    கைது செய்யப்பட்டவர்கள் சந்தன மரங்களை வெட்டி கர்நாடகாவுக்கு கடத்தி அங்கு ஒரு கிலோ ரூ.2 ஆயிரம் என விற்பனை செய்து வந்துள்ளனர். இதேபோல் கூடலூர் பகுதியில் 7 கிலோ வரை சந்தன கட்டைகளை கடத்தி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    செஞ்சி அருகே செல்போன் டவரில் பேட்டரிகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் இருந்து டவர் சரியாக கிடைக்கவில்லை என்று புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து விழுப்புரம் இளநிலை தொடர்பு அலுவலர் சத்தியசீலன் தலைமையில் ஊழியர்கள் அந்த செல்போன் டவரை ஆய்வு செய்வதற்காக வந்தனர்.

    அப்போது அந்த டவரில் இருந்த பேட்டரிகளை திருடி 4 வாலிபர்கள் காரில் ஏற்றி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அதிகாரிகள் உடனே அவர்கள் 4 பேரையும், பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து செஞ்சி போலீசில் ஒப்படைத்தனர்.

    அந்த வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை சேர்ந்த அஜீத் (வயது20), பெங்களூரை சேர்ந்த கிரண் (22), கிஷோர் (21), சந்தோஷ் (21) என்பதும், இவர்கள் செல்போன் டவர்களில் உள்ள பேட்டரிகளை திருடியதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் வந்த கார் மற்றும் திருடிய பேட்டரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    முத்தியால்பேட்டையில் பட்டதாரி வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சாமிபிள்ளை தோட்டம் வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பார்த்திபன் (வயது 21). பி.காம். பட்டதாரியான இவர், முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பார்த்திபன் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழிமறித்தது. கொலை வெறியுடன் வந்த அவர்களை பார்த்ததும் பார்த்திபன் தப்பி ஓட முயன்றார்.

    ஆனால், அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி பார்த்திபனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் அவர் இறந்து விட்டதாக கருதி அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டது.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த சம்பவத்தை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

    இதையடுத்து தகவல் அறிந்ததும் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பார்த்திபனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பார்த்திபனை வெட்டிக்கொல்ல முயன்றது கருவடிகுப்பத்தை சேர்ந்த ஹரி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் என்பது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் ஹரிக்கும், பார்த்திபனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் அவர்களிடையே பெண் தகராறும் இருந்து வந்துள்ளது.

    இதனால் பார்த்திபனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஹரி நேற்று இரவு தனது நண்பர்களான மோகன், சிரஞ்சீவி உள்பட 4 பேரை அழைத்து சென்று பார்த்திபனை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து ஹரி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருவல்லிக்கேணியில் பஸ் டிரைவரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை விவேகானந்தர் இல்லத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு சென்ற 32பி மாநகர பஸ்சை பாபு சாலேசா (40) என்பவர் ஓட்டிச் சென்றார். திருவல்லிக்கேணி நெடுஞ் சாலையில் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் மெதுவாக நகர்ந்து சென்றது. எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மாநகர பஸ்சுக்கு எதிரே நின்று கொண்டு பஸ்சை பின்னோக்கி இயக்குமாறு கூறினர்.

    அதற்கு டிரைவர் பஸ்சுக்கு பின்னால் நிறையபேர் நிற்பதால் பினே நகர்த்த இயலாது. நீங்கள் விலகி செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் 3 பேரும் சேர்ந்து டிரைவரை தாக்கினார்கள். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள்ளாக 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசில் டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் தேடினர். இன்று காலையில் முகமதுபாஷா (19), யூனிஸ்பாஷா (19), தமீம் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே டிராக்டரில் மண் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே டிராக்டரில் மண் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையில் போலீசார் அய்யனார் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வைகை ஆற்றுப்படுகையில் சிலர் டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சின்னமனூர் ஒத்தத் தெருவைச் சேர்ந்த பசும்பொன்பாண்டி, குட்டமுத்து, முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ், மாரியப்பன் என்பது தெரிய வந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணியில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணியில் உள்ள தணிகாசல அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. இதனை சிலர் ஆக்கிரமித்து வந்தனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ரகுநாதன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் தீனதயாளன், சுரேஷ் குமார், தனசேகர் பாபு ஆகியோருக்கும் ரகுநாதனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து ரகுநாதனை தாக்கினர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளன், சுரேஷ்குமார், தன சேகர் பாபுவை கைது செய்தனர்.

    சேலம், கூடலூரில் இருந்து ரூ.72 லட்சம் ஹவாலா பணம் கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் மதுவிலக்கு அதிகாரி உதயகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சாந்தி சந்திப்பு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாலக்காடு- திருவனந்தபுரத்திற்கு சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சுக்குள் சந்தேக்கப்படும்படி ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்தது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது அவரிடம் இல்லை. முறையான காரணமும் அவர் கூறவில்லை. இதனையடுத்து ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த மதுவிலக்கு அதிகாரிகள் பணத்தையும், வாலிபரையும் குழல்மன்னம் போலீசில் ஒப்படைத்தனர்.

    குழல்மன்னம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வயநாடு கோட்டத்தரையை சேர்ந்த விபிசின் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் ஏதற்காக பணம் கடத்தினார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோன்று பாலக்காடு மதுவிலக்கு அதிகாரி ரியாஸ் தலைமையில் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது ரூ.60 லட்சம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மலப்புரம் கண்ணமங்கலத்தை சேர்ந்த அப்துல் சமீது (35), யாஸ்துல் பசாரி (30) ஆகியோர் என்பதும் இவர்கள் சேலத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு இந்த பணத்தை கடத்தி வருவதாகவும் கூறினர்.

    அவர்கள் 2 பேரையும் பாலக்காடு தெற்கு போலீசார் கைது செய்து ரூ.60 ஹவாலா பணத்தையும் பறிமுதல் செய்தனர். #tamilnews

    திருவண்ணாமலை ஆசிரமத்தில் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த சென்னை போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள தனியார் ஆசிரமத்திற்குள் கடந்த 21-ந் தேதி கொள்ளை கும்பல் புகுந்தனர். ஆசிரம நிர்வாகி கலைநம்பி (வயது 77) மற்றும் பெண்பணியாளர் பாலம்மாள் (63) ஆகியோரை கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கினர்.

    பிறகு, ஆசிரமத்தில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு கும்பல் தப்பிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கலைநம்பி தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் ரூ.1 கோடிக்கு விற்றார். இந்த பணத்தை தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். கலைநம்பி ரூ.1 கோடியை ஆசிரமத்திலேயே வைத்திருக்கலாம் என்று நினைத்தே கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    கலைநம்பிக்கு நெருக்கமானவர்கள் யார் யார்? என்ற பட்டியலை போலீசார் சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அவருடைய போன் அழைப்புகளும் சோதனை செய்யப்பட்டன.

    அப்போது, ஆசிரமத்திற்கு நன்கொடை கொடுப்பதாக மர்ம நபர் போனில் பேசியது தெரியவந்தது. அந்த நபர் வருவதாக கூறிய நேரத்தில் தான் கொள்ளை நடந்ததாக ஆசிரம நிர்வாகி கலைநம்பி தெரிவித்தார். அந்த நபர் யார் என்று விசாரித்தபோது, தேனி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (43) என்பது தெரியவந்தது.

    லட்சுமணனை பிடிக்க திருவண்ணாமலை போலீசார் முயன்றபோது, ஏற்கனவே வேறொரு வழக்கில் அவரை சென்னை போலீசார் கைது செய்தது தெரியவந்தது. இதையடுத்து, திருவண்ணாமலை போலீசார், சென்னை சென்று லட்சுமணனை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

    கிடுக்கிப்பிடியாக நடத்திய விசாரணையில் லட்சுமணன் மற்றும் அவர் கூட்டாளிகள் காஞ்சீபுரத்தை சேர்ந்த திலீப் (28), பெரம்பலூரை சேர்ந்த செல்வக்குமார் (42) ஆகிய 3 பேரும் ரூ.1 கோடியை கொள்ளையடிப்பதற்காக நன்கொடையாளர்கள் என்று போனில் பேசி ஆசிரமத்திற்கு சென்று நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

    திலீப் மற்றும் செல்வக் குமாரையும் போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். இவர்களில் செல்வக்குமார், சென்னையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருவதும், தற்போது சஸ்பெண்டில் இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு உள்பட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். மோசடி வழக்கில் வியாபாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ATMrobbery

    புதுச்சேரி:

    புதுவையில் கும்பல் ஒன்று ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் என்கிற கருவியை ரகசியமாக பொருத்தி ஏ.டி.எம். கார்டுகளில் தகவல்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை உருவாக்கியது.

    பின்னர் இந்த கார்டுகள் மூலம் கடைகளில் பொருட்கள் வாங்கியது போல் காட்டி ஸ்வைப்பிங் எந்திரம் மூலம் பணத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடி செய்தனர். இவ்வாறு பல கோடி ரூபாய் மோசடி நடந்தது.

    இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், பாலாஜி, ஜெயச்சந்திரன், டாக்டர் விவேக் ஆனந்த், கமல், ஷியாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் மீட்கப்பட்டது.

    இந்த மோசடியில் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் தான் இந்த மோசடி கும்பலின் தலைவர்களாக இருந்து செயல்பட்டனர்.

    போலீஸ் விசாரணை நடப்பதை அறிந்ததும் அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள். இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குருமாம்பட்டை சேர்ந்த கணேசன் (வயது 33), ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த சிவகுமார் (30), லாஸ்பேட்டையை சேர்ந்த டேனியல் சுந்தர்சிங் (33) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இவர்களில் கணேசன் உருளையன்பேட்டையில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். சிவகுமார் காந்தி வீதியில் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். டேனியல் சுந்தர்சிங் கொசக்கடை வீதியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

    ஏ.டி.எம். மோசடி கும்பல் இவர்களின் கடையில் பொருட்கள் வாங்கியது போல் காட்டி அங்குள்ள ஸ்வைப்பிங் எந்திரத்தில போலி ஏடி.எம். கார்டுகளை பயன்படுத்தி தங்கள் வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றி இருக்கிறார்கள்.

    இதற்கு 3 பேரும் உடந்தையாக இருந்து வங்கி கணக்குக்கு மாற்றி தொகையில் இருந்து 10 சதவீதம் கமி‌ஷனாக பெற்றுள்ளனர்.

    இதன் அடிப்படையில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கணேசனிடம் இருந்து ரூ. 40 ஆயிரமும், சிவகுமாரிடம் இருந்து ரூ. 50 ஆயிரமும், டேனியல் சுந்தர்சிங்கிடம் இருந்து ரூ.75 ஆயிரமும் மற்றும் ஸ்வைப்பிங் எந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இந்த மோசடியில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி வருகிறார்கள்.

    3 பேர் கைதானது குறித்து சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு ரகீம், சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    இந்த மோசடியில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் தெரிய வில்லை.

    சந்துருஜி, சத்யா இருவரையும் கைது செய்தால் தான் மற்ற முழுவிவரங்கள் தெரிய வரும். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் அவர்கள் பெங்களூர், விசாகபட்டினத்தில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அங்கு போலீசார் சென்றனர். ஆனால், அதற்குள் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வருகிறோம். அவர்கள் பற்றிய தகவல் யாருக்காவது கிடைத்தால் 9489205301 என்ற போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #ATMrobbery

    தேவகோட்டை அருகே சொத்து பிரச்சினையில் பெண்ணுக்கு அரிவாளால் வெட்டிய மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள களபாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மீனாள் (வயது68). இவர்களது மகன் குமார் (40).

    கடந்த சில மாதங்களாகவே குமார் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு பெற்றோருடன் வற்புறுத்தி வந்துள்ளார். அவர்கள் மறுக்கவே குமார் அடிக்கடி பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு குமார் தனது சித்தப்பா மணிவண்ணனுடன் சென்று தாய் மீனாளிடம் சொத்து குறித்து மீண்டும் பிரச்சினை செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய் என்றும் பாராமல் மீனாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வேலாயுதபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா பிளவர், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குமார் மற்றும் மணிவண்ணனை கைது செய்தனர்.

    ×