search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devakottai"

    • தேவகோட்டை நகராட்சி சிறப்பு கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது.
    • தற்பொழுது ஆணையாளர் இல்லாததால் நகராட்சியில் பில் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திடுவது தேங்கி உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி யின் சிறப்பு கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத் தலைவர்:-குப்பைகளை அள்ளுவதில் பணியாளர்கள் தொய்வில்லாமல் அனைவரும் பணிக்கு வர வேண்டும்.

    தி.மு.க. கவுன்சிலர் பாலமுருகன்:- பணியாளர்கள் வரி வசூல் செய்ய காலையில் செல்வதால் அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படு கிறது. இதனால் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வரி வசூல் செய்தால் நல்லது.

    தலைவர் சுந்தரலிங்கம்:- கொரோனா காலத்தில் வரி வசூல் பாக்கி காரணமாக பணியாளர்களின் பணி அதி கரித்து உள்ளது. அதற்கு முன்புள்ள காலங்களில் வரி வசூல் நகராட்சி 100 சதவீதம் செய்து சாதனை புரிந்துள்ளது. சில மாதங்களில் அவை சரி செய்யப்படும்.

    துணைத் தலைவர்:- 2019-ம் ஆண்டுக்கான வரி தற்போது வரி உயர்வு உள்ளபடி வசூல் செய்வதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கவுன்சிலர் பிச்சை யம்மாள்:- எனது வார்டு களில் உள்ள பொது கழிப்பிட கட்டிடத்தில் போர்வெல் சரி செய்ய வேண்டும்.

    கவுன்சிலர் சுதா:- தூய்மைப் பணியாளர்கள் அவர்கள் பணிக்கு வரும் போது உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது.

    தலைவர் சுந்தரலிங்கம்:- தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இது குறித்து கவனம் செலுத்தப்படும்.

    கவுன்சிலர் அய்யப்பன்:- தற்பொழுது ஆணையாளர் இல்லாததால் நகராட்சியில் பில் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திடுவது தேங்கி உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாக பணிகள் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தலைவர் சுந்தரலிங்கம்:- அரசு சார்பில் சில தினங்களில் ஆணையாளர் அல்லது பொறுப்பாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வரும்.

    கவுன்சிலர் அனிதா:- தற்போது 115 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் எதன் அடிப்படையில் வார்டுகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள்?

    சுகாதார ஆய்வாளர்:- தள்ளுவண்டியில் செல்லும் பணியாளர்கள் சுமார் 250 வீடுகளிலும், பேட்டரி வண்டியில் செல்லும் பணியாளர்கள் சுமார் 400 வீடுகளிலும், மினி வேனில் செல்லும் பணியாளர்கள் சுமார் 800 வீடுகளிலும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் உள்ளனர்.

    தி.மு.க. கவுன்சிலர் பாலமுருகன்:- நகராட்சியில் அனைத்து வார்டுகளில் உள்ள பொது சுகாதார கழிப்பறை கட்டிடங்களை முழுமையாக பராமரிப்பு செய்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

    தலைவர் சுந்தரலிங்கம்:- இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலியானார்.
    • தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தளக்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து (38), தனியார் மில்லில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுதா (32), இவர்களுக்கு யோகேஸ்வரி (13), புவனேஸ்வரி (12) என 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று இரவு மணிமுத்து வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மணிமுத்துவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேவகோட்டை அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் நாரணமங்கலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இங்கு சாத்திக்கோட்டையை சேர்ந்த வேம்பன் மகன் சேகர் (வயது 40) என்பவர் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று பணிகளை முடித்து விட்டு மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளார். இதில் எதிர்பாரத விதமாக மின்சாரம் சேகர் மீது பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சேகர் இறந்தார்.

    சேகரை காப்பாற்றுவதற்காக அவருடன் பணியாற்றும் சாமிகண்ணு முயற்சி செய்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி (வயது 47), ஆட்டோ டிரைவர்.

    தேவகோட்டை ராம் நகர் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று காலை காசி வழக்கம் போல் ஆட்டோ ஓட்டச் சென்றார்.

    இந்த நிலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள மரத்தில் ஆட்டோ மோதி நின்றதை அந்த வழியே சென்றவர்கள் நேற்று இரவு பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது காசி ரத்தக்காயங்களுடன் கிடந்தார்.

    அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், காசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவர் தற்செயல் விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது யாராவது வாக னத்தை மோதி விபத்தை ஏற்படுத்தினார்களா? என்பது மர்மமாக உள்ளது.

    விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை அருகே சொத்து பிரச்சினையில் பெண்ணுக்கு அரிவாளால் வெட்டிய மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள களபாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மீனாள் (வயது68). இவர்களது மகன் குமார் (40).

    கடந்த சில மாதங்களாகவே குமார் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு பெற்றோருடன் வற்புறுத்தி வந்துள்ளார். அவர்கள் மறுக்கவே குமார் அடிக்கடி பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு குமார் தனது சித்தப்பா மணிவண்ணனுடன் சென்று தாய் மீனாளிடம் சொத்து குறித்து மீண்டும் பிரச்சினை செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய் என்றும் பாராமல் மீனாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வேலாயுதபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா பிளவர், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குமார் மற்றும் மணிவண்ணனை கைது செய்தனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பரம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஆறுமுகம் (வயது35). எலக்ட்ரீசியனான இவர், சேந்தல்பெரியாணைச் சேர்ந்த போஸ் (43) என்பவருடன் அருகில் உள்ள திருமணவயல் கிராமத்திற்கு தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் மாலையில் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். ஆறுமுகம் முன்னே செல்ல போஸ் பின்தொடர்ந்து சென்றார். திருமணவயல் கண்மாய் அருகே சென்றபோது திடீரென்று போஸ் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஆறுமுகம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த போஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாபிளவர், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 2 தனியார் பஸ்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கருதாவூரணி. இங்கு தனியார் வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.

    இன்று மதியம் இங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 தனியார் பஸ்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் 2 ஆம்னி பஸ்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் பஸ்களுக்கு தீ வைத்து விட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×