search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto driver death"

    போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய ஆட்டோ டிரைவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மறையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது45). அவரது நண்பர் சங்கர். நண்பர்களான இருவரும் ஆட்டோ டிரைவராக உள்ளனர். சில நாட்களுக்கு முன் செல்வகுமார், சங்கரிடம் செலவுக்கு ரூ.100 கேட்டுள்ளார். அவர் ஆட்டோவில் இருந்த ஒரு பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்துள்ளார். பின்னர் அவர் வந்து பார்த்த போது ஆட்டோ பெட்டியில் இருந்த மொத்த பணமும் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து சங்கர் சந்தேகத்தின் பேரில் செல்வகுமார் மீது மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மயிலாடுதுறை இந்திராநகர் பின்புறம் உள்ள மயான பகுதி அருகே ஒரு மரத்தில் நேற்றுமுன்தினம் செல்வகுமார் பிணமாக தொங்கினார். அவரை அடித்துக்கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சில் சமரசம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    கீழ்பென்னாத்தூர் அருகே போலீசார் விரட்டியதால் ஆட்டோ டிரைவர் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் போலீசார் நேற்றிரவு கருங்காலி குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 5 பேர் கும்பல் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.

    போலீசாரை கண்ட அந்த கும்பல் தலைதெறிக்க சிதறி ஓடினர். அதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரிய அகரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 35). ஆட்டோ டிரைவர். என்பவர் ஓடிய போது தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த போலீசார் கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு வீரர்களுக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி அவரை உயிருடன் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாஸ்கர் செல்லும் வழியிலேயே இறந்தார்.

    இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சூதாட்டம் ஆடிய பாதம்பூண்டி பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் பன்னீர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மீஞ்சூர் அருகே மதுபோதையில் கோவில் குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரில் உள்ள பச்சையம்மன் கோவில் அருகே குளம் உள்ளது. இந்த குளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக கிடந்தது மீஞ்சூரை அடுத்த ராமரெட்டி பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பது தெரிந்தது.

    மது போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மனைவி சுஜாதாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுஜாதா கடந்த மாதம் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் மதுபோதையில் வந்த சுரேஷ் கோவில் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழித்துறை அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை:

    குழித்துறையை அடுத்த நட்டாலம் வாத்தியார் விளையைச் சேர்ந்தவர் ராஜேஷ், (வயது 35).

    ராஜேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆட்டோ டிரைவராக இருந்தார். இவரது ஆட்டோ, இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள கக்குளம் கரையில் குளத்தையொட்டி நின்றது.

    இன்று அதிகாலை குளத்திற்கு குளிக்க சென்றவர்கள் குளத்தின் கரை அருகே ஆட்டோ ஒன்று அனாதையாக நிற்பதை கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது குளத்திற்குள் ராஜேஷ் பிணமாக மிதப்பதை கண்டனர்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழித்துறை தீயணைப்பு வீரர்களை வரவழைத்து குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டனர். மீட்கப்பட்ட ராஜேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ராஜேஷ் குளத்தில் மூழ்கி இறந்தது எப்படி? என்பது பற்றி மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேஷ் மது போதையில் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கொன்று உடலை குளத்தில் வீசிச்சென்றார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    இந்த சம்பவம் இன்று நட்டாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி (வயது 47), ஆட்டோ டிரைவர்.

    தேவகோட்டை ராம் நகர் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று காலை காசி வழக்கம் போல் ஆட்டோ ஓட்டச் சென்றார்.

    இந்த நிலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள மரத்தில் ஆட்டோ மோதி நின்றதை அந்த வழியே சென்றவர்கள் நேற்று இரவு பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது காசி ரத்தக்காயங்களுடன் கிடந்தார்.

    அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், காசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவர் தற்செயல் விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது யாராவது வாக னத்தை மோதி விபத்தை ஏற்படுத்தினார்களா? என்பது மர்மமாக உள்ளது.

    விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடசேரியில் 8 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவரை நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த 8 பேர் கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியது. அவர்கள் சுப்பிரமணியனை அரிவாளாலும் வெட்டினர். இதில் சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனின் சகோதரரை அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனால் ஏற்பட்ட விரோதத்தில் சுப்பிரமணியனை, ரமேசும், அவரது உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனை தாக்கியதாக ரமேஷ்(19), வேல்முருகன் (58), அவரது 14 வயது மகன், சதீஷ் (19), ராஜா (19), முகமது தமீம் அன்சாரி (19) உள்பட மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இவர்களில் ரமேஷ், வேல்முருகன், அவரது 14 வயது மகன் மற்றும் முகமது தமீம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் இன்று அதிகாலை 6.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து வடசேரி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நோணாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    புதுவை நைனார் மண்டபம் நாகம்மாள் நகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது 57). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று அசோகன் ஆட்டோ சவாரிக்கு நோணாங்குப்பம் பேரடைஸ் ஹவுசுக்கு சென்றார். அங்கு ஆட்டோவை புதுவை- கடலூர் சாலையின் இடது புறத்தில் நிறுத்தி விட்டு எதிரே உள்ள கடைக்கு டீ சாப்பிட சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் அசோகன் மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்றது. மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த அசோகனை அருகில் நின்றவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அசோகன் இறந்து போனார்.

    இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், ஏட்டு புவனேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நொச்சிக்குப்பத்தில் 4-வது மாடியில் இருந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நொச்சிக் குப்பம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 2-வது பிளாக்கில் வசித்து வந்தவர் பாரதி (42). ஆட்டோ டிரைவர்.

    இவர் நேற்று இரவு 12 மணி அளவில் தான் வசித்து வரும் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.

    கைப்பிடிசுவரில் அமர்ந்திருந்த பாரதி திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி, பாரதியை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    கோவை அருகே ஆட்டோ டிரைவர் சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பேரூர் வெள்ளலூர் நால்வர் வீதியை சேர்ந்தவர் குமரவேல் (45). ஆட்டோ டிரைவர். இன்று காலை பீளமேடு போலீஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோவை நிறுத்தி விட்டு சவாரிக்காக காத்திருந்தார்.

    அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரவக்குறிச்சி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அரவக்குறிச்சி:

    மதுரை மாவட்டம், கருப்பம்பட்டி பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலைமுத்து (வயது 35). ஆட்டோ டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த மகேஷ்(32) மதன்குமார்(24), பழனி(22) ஆகியோரும் ஒரு காரில் மதுரையில் இருந்து கரூரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். காரை மகேஷ் ஓட்டி வந்தார். 

    கார் மதுரை- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே உள்ள தகரக்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சோலைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சோலைமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×