search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து: ஆட்டோ டிரைவர் பலி
    X

    தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து: ஆட்டோ டிரைவர் பலி

    அரவக்குறிச்சி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அரவக்குறிச்சி:

    மதுரை மாவட்டம், கருப்பம்பட்டி பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலைமுத்து (வயது 35). ஆட்டோ டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த மகேஷ்(32) மதன்குமார்(24), பழனி(22) ஆகியோரும் ஒரு காரில் மதுரையில் இருந்து கரூரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். காரை மகேஷ் ஓட்டி வந்தார். 

    கார் மதுரை- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே உள்ள தகரக்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சோலைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சோலைமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×