search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் மாடியில் இருந்து  தவறி விழுந்து டிரைவர் பலி
    X

    டிரைவர் மணிமுத்து

    வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி

    • வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலியானார்.
    • தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தளக்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து (38), தனியார் மில்லில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுதா (32), இவர்களுக்கு யோகேஸ்வரி (13), புவனேஸ்வரி (12) என 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று இரவு மணிமுத்து வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மணிமுத்துவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×