search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Gold abducted"

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபிதாபி ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சிலரது உடமைகளை சோதனை செய்ததில் தங்கப் பேனா, சாக்லேட், பேப்பர், ஸ்குரு டிரைவர், சோப்பு பவுடர் ஆகியவற்றில் தங்ககட்டிகளை பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது.

    சென்னை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 6 பேரிடம் இருந்து 2.6 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்து கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.78 லட்சமாகும். சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.

    சென்னையில் இருந்து நேற்று இரவு இலங்கை சென்ற பயணிகளை சோதனை செய்தனர். அப்போது இலங்கை பயணி ஒருவரிடமும், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகளிடமும் சோதனை செய்தபோது அமெரிக்க டாலரும், ஐரோப்பிய நாட்டின் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ரூ. 16 லட்சம் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×