என் மலர்
செய்திகள்

திருத்தணியில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் - 3 பேர் கைது
திருத்தணியில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருத்தணியில் உள்ள தணிகாசல அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. இதனை சிலர் ஆக்கிரமித்து வந்தனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ரகுநாதன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் தீனதயாளன், சுரேஷ் குமார், தனசேகர் பாபு ஆகியோருக்கும் ரகுநாதனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து ரகுநாதனை தாக்கினர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளன், சுரேஷ்குமார், தன சேகர் பாபுவை கைது செய்தனர்.
Next Story






