search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand robbery"

    • தமிழ்நாட்டில் மணல் கொள்ளை எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
    • மணல் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கொள்ளையை தடுத்த அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மணல் கொள்ளை எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    மணல் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆற்று மணல், சவுடு மண் என அனைத்து வகையான இயற்கை வளங்களும் கட்டுப்பாடின்றி கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை உணர்ந்து தமிழகத்திற்கு மாபெரும் கேடாக மாறி வரும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பட்ட பகலில் கடத்தல் படுஜோராக நடைபெறுகின்றன
    • பொதுமக்கள் குற்றச்சாட்டு

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட விண்ணமங்கலம், வாழைப்பந்தல், தச்சூர், மருசூர், அகிலாண்டபுரம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆற்றுபடுக்கையில் இரவு பகலாக டிராக்டர் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றன.

    இது சம்மந்தமாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தாலும் கண்டு கொள்ளாமல் உள்ளதால் பட்ட பகலில் மணல் கடத்தல் படுஜோராக நடைபெறுகின்றன.

    இதனால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் போலீஸ், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிப்பதால் சில தினங்களில் 7 டிராக்டர் 5 லாரி 3 பொக்லைன் எந்தி ரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதனையடுத்து கல்பூண்டி செய்யாற்று படுக்கையில் பட்டப் பகலில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரி டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமிக்கு பொது மக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டன.

    ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில் வருவாய் துறையினர் நேரில் சென்று பொக்லைன், டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். வருவாய் துறையினரை கண்ட பொக்லைன் டிராக்டர் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் டிராக்டரை பையூர் வி.ஏ.ஓ கார்த்தி ஒட்டி வந்து ஆரணி தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கெடிலம் அருகே வந்தபோது கெடிலம் ஆற்றில் 4 மாட்டுவண்டிகளுடன் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
    • போலீசார் வருவதை பார்த்த மணல் அள்ளும் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டி.எஸ்.பி மனோஷ்குமார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த ரோந்து பணி இன்று காலை திருநாவலூர் பகுதியில் நடந்தது. அப்போது கெடிலம் அருகே வந்தபோது கெடிலம் ஆற்றில் 4 மாட்டுவண்டிகளுடன் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். உடனே டி.எஸ்.பி தலைமையி லான போலீசார் அங்கு சென்றனர்.

    போலீசார் வருவதை பார்த்த மணல் அள்ளும் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    • மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
    • போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது.

    இதனை தடுக்க சிறப்பு படை போலீசார், இன்று காலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரை, மடக்கி பிடித்தனர்.

    மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சிறப்பு படை போலீசார் பேசிக் கொண்டிருந்ததை, ஓட்டு கேட்ட ஜோதி அங்கிருந்து வேகமாக ஓடினார். கிராமத்தை ஒட்டியுள்ள டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்.

    நீங்கள் என்னை கைது செய்தால், நான் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.

    அவரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீஸ்காரர் மயூரா மீது டிராக்டரை ஏற்றினார். இதில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சித்தண்ணாவை கைது செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் நெலோகி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் மயூரா (வயது51). இவர் ஜேவர்தி தாலுகா நாராயண்பூர் அருகே சட்ட விரோதமாக மணல் கடத்திய டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது போலீஸ்காரர் மீது டிரைவர் டிராக்டரை ஏற்றினார். இதில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சித்தண்ணாவை கைது செய்தனர். அவர் போலீஸ் மீது டிராக்டர் ஏற்றியதை ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மந்திரி பிரியங்கா கார்கே கூறும்போது, மணல் கடத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளேன். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

    • அரசு வருவாய் துறையினர் மீது ஊராட்சி தலைவரும் அடியாட்களும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 40).

    இவரும் அதே கிராமத்தை சேர்ந்த தனபால், மணி ஆகிய மூவரும் சேர்ந்து நரசிங்கபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள பச்சைமலை பகுதியில் இருந்து, இரவு நேரங்களில் ஜே.சி.பி. உதவியுடன் செம்மண் கடத்தியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் செம்மண் கடத்துவதாக துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு அப்பகுதி பொதுமக்கள் செல்போன் வாயிலாக புகார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து துறையூர் வட்டாட்சியர் வனஜா ரங்கநாதபுரத்தை சேர்ந்த, துறையூர் பகுதி வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிராக்டரின் சாவியை எடுத்துக்கொண்டு, கிராமத்திற்குள் வந்துள்ளார்.

    அப்பொழுது அவரை வழிமறித்த ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், தனபால், மணி மற்றும் டிரைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை ஆபாசமாக பேசி திட்டி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது மண்டையை உடைத்ததோடு, அவரின் முதுகு பகுதியில் கடுமையாக பற்களைக் கொண்டு கடித்தும் வைத்துள்ளனர்.

    இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளரை மீட்டனர். முதலில் பெருமாள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனை அறிந்த துறையூர் வட்டாட்சியர் வனஜா, முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்து, வருவாய் ஆய்வாளர் பிரபாகரனின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

    அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் (40), தனபால், மணி, கந்தசாமி உள்ளிட்ட 4 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், தலைமறைவான மூவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடந்த மாதம் தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் மணல் கொள்ளையை பற்றி புகாரளித்ததன் பேரில், அவரது அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழக அரசிடம் கைத்துப்பாக்கி கேட்டது குறிப்பிடத்தக்கது.

    அதனை தொடர்ந்து மீண்டும் அரசு வருவாய் துறையினர் மீது ஊராட்சி தலைவரும் அடியாட்களும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், அரசு அதிகாரிகள் மீதே தாக்குதல் நடத்துபவர்கள், தனிநபர்கள் புகாரளித்தால் வரும் விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    துறையூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
    • பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்

    வேலூர்:

    வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    அணைக்கட்டு ஒன்றியம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து, டிராக்டர்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்துகின்றனர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

    விவசாயிகள் காலத்திற்கு ஏற்றவாறு பயிர் செய்வதற்கு உண்டான விழிப்புணர்வை தோட்டக்கலை துறையினர் ஏற்படுத்த வேண்டும்.

    பிரதம மந்திரியின் விவசாயின் தனிநபர் கடன் ரூ.4 லட்சம் குறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு ஆர்கானிக் உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகள் ஏரியில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். கத்திரிக்காய், தக்காளி, செண்டுமல்லி உள்ளிட்ட உயர்ந்த வகை விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    அமாவாசை பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் கிராமப்புறங்களுக்கு வரும் அரசு டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்படுவதால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே தொடர்ந்து அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
    • இதனை கண்டித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

    பரமக்குடி

    மதுரைக்கு அடுத்த படியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். பரமக்குடி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு ஜே.சி.பி. மூலம் லாரிகளில் மணல் திருடியுள்ளனர்.

    கிராமப்புறங்களில் நடந்த மணல் திருட்டு தற்போது நகர்புறங்களிலும் தொடங்கிவிட்டது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி மறத்தமிழர் சேனை நிறுவனர் பிரபாகர் மற்றும் பா.ஜ.க.வினர் மணல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பா லத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை கோசமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் தாசில்தார் பார்த்தசாரதி, போலீசார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது கூடிய விரைவில் மணல் திருடியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • பகுதி சபா கூட்டத்தில் புகார்
    • நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சிக்குட்பட்ட 25, 26,27 ஆகிய வார்டுகளுக்கான பகுதி சபா கூட்டம் திருவத்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் கங்காதரன், கார்த்திகேயன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓ. ஜோதி எம்.எல்,ஏ, பங்கேற்றார்.

    கூட்டத்தில் வார்டுகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பாக உள்ளது, பள்ளி நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தடுக்க வேண்டும், இருசக்கர வாகனத்தில் 24 மணி நேரமும் ஆற்று மணல் கொள்ளை போவதை தடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    கூட்டத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி பேசுகையில் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அத்தியாவசிய முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் என். சங்கர், ஏ..ஞானவேல், நகராட்சி பணியாளர்கள் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருவெண்ணைநல்லூர் பகுதிகளிலுள்ள மலட்டு ஆற்றில் இரவு நேரங்களில் தொடர் மணல் கொள்ளை நடக்கிறது.
    • போலீசார் 6 மாட்டு வண்டிகளையும் காந்தி குப்பம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப்பிடித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதிகளிலுள்ள மலட்டு ஆற்றில் இரவு நேரங்களில் தொடர் மணல் கொள்ளை போவதாக விழுப்புரம் மாவட்ட போலீ ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் சென்றது. அதன்பேரில் திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் எஸ்பி தனிப்படபடை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுப்பாளையம் ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 6 மாட்டு வண்டிகளையும் காந்தி குப்பம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப்பிடித்தனர் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அதன்பின்னர் 10 மாட்டு வண்டிகளையும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து 10 மாட்டு வண்டி உரிமையாளரையும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    • நிலக்கோட்டை அருகே நரியூத்து ஊராட்சிக்கு சொந்தமான செங்குளம் கண்மாய் ரிஷிகரடு அருகே அமைந்துள்ளது.
    • மர்ம நபர்கள் ஜே.சி.பி, லாரி, டிராக்டர் மூலமாக அதிகமான மண்ணை அள்ளி கரைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே நரியூத்து ஊராட்சிக்கு சொந்தமான செங்குளம் கண்மாய் ரிஷிகரடு அருகே அமைந்துள்ளது. இந்த கண்மாய் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும்.

    ரிஷிகரடு பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் சேர்ந்து தீர்க்கமாய் நிரப்பப்பட்டு மரியாயிபாளையம், காட்டுநாயக்கன்பட்டி, நரியூத்து உள்ளிட்ட கிராம பகுதி மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது.

    கால்நடைகளின் குடிநீருக்காகவும் இந்த கண்மாயை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் ஜே.சி.பி, லாரி, டிராக்டர் மூலமாக அதிகமான மண்ணை அள்ளி கரைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.

    இதை அறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் மண் திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    லாரி, டிப்பர், டிராக்டர் மூலம் மணல் கொள்ளை கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கு வித்தியாசமாக ஒட்டகத்தை வரவழைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர்.

    மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் (வயது 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவமங்கலம் பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டியில் ஒட்டகத்தை கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை பார்த்தனர்.

    மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்து மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

    ×