search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை
    X

    நகர பகுதி சபா கூட்டத்தில் ஒ.ஜோதி எம்எல்ஏ பேசிய போது எடுத்த படம்.

    பைக்கில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை

    • பகுதி சபா கூட்டத்தில் புகார்
    • நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சிக்குட்பட்ட 25, 26,27 ஆகிய வார்டுகளுக்கான பகுதி சபா கூட்டம் திருவத்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் கங்காதரன், கார்த்திகேயன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓ. ஜோதி எம்.எல்,ஏ, பங்கேற்றார்.

    கூட்டத்தில் வார்டுகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பாக உள்ளது, பள்ளி நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தடுக்க வேண்டும், இருசக்கர வாகனத்தில் 24 மணி நேரமும் ஆற்று மணல் கொள்ளை போவதை தடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    கூட்டத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி பேசுகையில் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அத்தியாவசிய முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் என். சங்கர், ஏ..ஞானவேல், நகராட்சி பணியாளர்கள் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×